Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெள்ளை வானில் கடத்தப்படுவர்கள் குற்றவாளிகள் தான் என்கின்றார் கோத்தபாய. தங்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தவர்களை, அடித்துக் கொன்ற பின் பிணத்தைக் கூட கொடுக்கமுடியாது என்கின்றது அரசு. பிணம் நாட்டின் அமைதிக்கும், இன ஐக்கியத்துக்கும் பங்கம் விளைவிக்கும் என்று கூறி நீதிமன்றம் மூலம் தங்கள் பாசிசப் பயங்கரவாதத்துக்கு கவசமிடக் கோருகின்றனர்.

இது மட்டுமா அண்மைய சம்பவங்கள். இல்லை. வடக்கில் போராட்டத்தை நடத்துபவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோருகின்றனர். நீதிமன்றம் இதற்கு மறுக்க, போராட்டத்தில் புலிக்கொடியுடன் புகுந்து ஆட்டம் போட்டும் அரச பாசிசப் பயங்கரவாதம், அதைக்காட்டி ஐயோ புலி என்கின்றது. இதுவும் அம்பலமாக, நீதிமன்றம் மூலம் தடைவிதிக்க மறுத்த நீதிபதி வீடும் தாக்கப்படுகின்றது. யுத்த குற்றக் கும்பலால் ஆளப்படும் நாட்டில், பாசிப் பயங்கரவாதம் தலைகால் தெரியாது இன்று ஆட்டம் போடுகின்றது.

மன்னார் மீனவர் விவகாரத்தை முஸ்லீம்-தமிழ் இன மோதலாக்கிவிட அரசு துடியாத் துடிக்கின்றது. நீதிபதியை மிரட்டிய அமைச்சர், நீதிமன்றம் மீது பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி இருக்கின்றார். மன்னாரில் இன ஐக்கியத்தை மீண்டும் சிதைக்க, அரச பாடதபாடுபடுகின்றது.

கிழக்கில் தேர்தலிலும் இதே பாசிசப் பயங்கரவாத பல்லவிதான். தமிழரை தனிமைப்படுத்தி அழிக்க, மூஸ்லிம் மக்களை எதிராக முன்னிறுத்த முனைந்தது. இந்தவகையில் அரசு பலவழிகளில் குறுக்க நெடுக்க செயல்படுகின்றது. மறுதளத்தில் கூட்டமைப்பு வேட்பளர்களை மிரட்டி தேர்தலில் இருந்து விலக வைக்கின்றது. வேறு எந்த பிரதேசத்திலும் இல்லாத வண்ணம், கிழக்கில் சில பத்து சுயற்சைக் குழுக்களை தேர்தலில் அரசு நிறுத்தி இருக்கின்றது. அரசின் இந்த செயல்பாடு இனவழிப்பு மூலமான பாசிசமாக்களை, இலங்கை  சமூகம் மீது திணித்து வருகின்றது.

இணையங்கள் முடக்கப்படுகின்றது. பத்திரிகையாளர்கள் கண்கணிக்கப்படுகின்றனர். அவர்களை வெள்ளை வானில் கடத்த தொடர்ந்து முயற்சிக்கப்படுகின்றனர். இணையங்களை பதியக் கோருவதும், இணையத்தை நடத்த முடியாத அளவுக்கு கட்டணங்களை திணிக்கின்றனர். மறுதளத்தில் இத்துறையில் இலவசமாக மடிக் கனணி, வட்டியில்லாத கடன் அல்லது குறைந்த வட்டியில் கடன் இப்படிப் பாசிப் பயங்கரவாத தன்னை தான் பல வண்ண முகத்தில் வெளிப்படுத்தி வருகின்றது.

இதே போல் தமிழ் மக்களை மேலான பாசிசப் பயங்கரவாதத்தை எவி, நாட்டை விட்டு தமிழரை தப்பியோடுமாறு அரசே முன்னின்று செயல்படுகின்றது. அப்படி நாட்டைவிட்டு செல்லும் எற்பாட்டை செய்து, அதற்கு பதிலாக காணி உறுதிகளை வாங்குவதும் (புலிகள் பாணியில்), பின் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் போது கைது செய்வதையும் ஒருங்கே இந்த அரசு அரங்கேறுகின்றது.

இப்படி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாசிசப் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஒன்றாகவே இருக்கின்றது. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் இராணுவப் பயற்சி என்ற விதவிதமாக வகையில், பாசிசப் பயங்கரவாதம் எங்கும் எதிலும் புகுத்தப்படுகின்றது.

புலிப் பயங்கரவாதம் சிங்கள அப்பாவி மக்களை குறிவைத்து கொன்ற போது, மக்களின் இயல்பான சுயமான கண்கணிப்பு அரசு பயங்கரவாதத்தை பலப்படுத்தியது. புலி அழிவின் பின் இதை அரசு பெற முடியாத சூழல், அரசே முழு மக்களையும் கண்காணிக்கும் இராணுவ மயமாக்களை எங்கும் எதிலும் திணிக்கின்றது.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்பது இன்று வெறும் சடங்காக, தங்கள் சட்டவிரோத பாசிசத்தை பூசிமொழுகும் பூச்சாக அதைப் பயன்படுத்துகின்றது. இதற்கு அடிபணியாத தேர்தல் அதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை மிரட்டி அவர்களை அடிபணிய வைக்கும், எல்லாவிதமான பாசிசப் பயங்கரவாதத்தையும் அவர்கள் மேலும் எவுகின்றது.

அரச பயங்கரவாதம் இன்று பாசிசப் பயங்கரவாதமாக பண்பு மாற்றம் பெற்று ஆட்டம் போடுகின்றது. எதிர்ப்பின்றி அடங்கி போகும் வண்ணம், தங்களாகவே இதற்கு இணங்கி அடங்கி போகுமாறு அதிகார வர்க்கத்தையே மிரட்டி வருகின்றது. சாதாரண பொது மக்கள் மூச்சு கூட விட முடியாத வண்ணம், கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த பாசிச பயங்கரவாத நிழலில் இயங்கும் கூட்டம் தான், புலிகொடியை அசைப்பதில்   தொடங்கி இலக்கியம் செய்வது வரையான சுதந்திரமான பாசிச செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இன்று வரை புலியெதிர்ப்பு பேசிய இன்னுமொரு சந்தர்ப்பவாத கூட்டம், இந்த பாசிசத்தின் பின் முழுமையாக நிற்பதில் இருந்து நழுவி மீண்டும் நடுநிலை வேசம் போட முனைகின்றனர். வேறு சிலர் இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி, சுய புரட்டுத்தனத்தை செய்வதன் மூலம் தங்கள் மூகமுடிகளை தொடர்ந்து காப்பற்ற முனைகின்றனர்.

இந்த மூகமுடித்தனங்கள், வேசங்களைக் கடந்து அரச பாசிசப் பயங்கரவாதத்தை எதிர் கொண்ட படி தான் மக்கள் வாழமுடியாது, அனுதினம் செத்துப் பிழைக்கின்றனர். புலி பாசித்தின் கீழ் வாழ்ந்த மக்கள், புலிப் பாசிசத்தை தமிழ் மக்கள் போராட்டமாக கருதி அது சார்ந்து அதை அனுசரித்து வாழமுடிந்தது. அரச பாசிசத்தின் கீழ் இனவழிப்பை அனுசாரித்தால் தான் வாழ்வு என்ற அவலம். அது தன்னைத்தான் அழிக்கக் கோருகின்றது. அந்தளவுக்கு அது கொடூராமானது, பயங்கரமானது. அரச பயங்கரவாதம், பாசிச பயங்கரவாதமாக உருவெடுத்து, இதைத்தான் தமிழ் மக்களிடம் கோருகின்றது. நீ உன்னை சுயமாக அழித்துக் கொள் என்று கோருகின்றது, நிர்பந்திக்கின்றது. இதுதான் இன்றைய எதார்த்தம். இதற்கு வெளியில் நாம் எம்மை எமாற்ற முடியாது. எம்மை மற்றவர்கள் எமாற்றுவதை அனுமதிக்கவும் முடியாது.

பி.இரயாகரன்

20.07.2012

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது