Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தூக்கில் போடும் அலுக்கோசு போல்தான், அப்துல்கலாம் என்ற அலுக்கோசும். சமூகத்தையும், மனித உரிமைகளையும் தூக்கில்போடும் "அறிவு"சார் ஆளும் வர்க்க அலட்டல்கள். இந்தியாவின் ஆசியுடன் மகிந்த குடும்பம் நடத்தும் கொலைகார பாசிச ஆட்சியின் வக்கிரத்துக்கு ஏற்ப, அனுமானாக இலங்கையில் ஆட்டம் போட்டது அப்துல்கலாம் என்ற குரங்கு. "தலைசிறந்த விஞ்ஞானி', "அறிவாளி" என்று கூறி, பூனூல் போட்ட கூட்டம் கூடி கும்மியடிக்கும் கூட்டத்தின் துணையுடன் நின்று கூறுகின்றார்

1. இலங்கையில் மும்மொழியைக் கற்றலே, இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று

2. இலங்கை கடலில் வாரத்தில் (கிழமையில்) மூன்று நாள் வீதம் இலங்கை இந்தியா மீனவர்கள் மீன்பிடிப்பதன் மூலம் பிரச்சனையைத் தீர்க்கலாம்

என்று தன் அறிவால், விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்து முன்வைக்கின்றார்.

"அறிவாளி" "விஞ்ஞானி" "முன்னாள் ஜனாதிபதி" என்று பூனூல் போட்ட கும்பலில் அங்கீகாரத்துடன், தனது மூடத்தனத்தைக் கொண்டு மக்களை முட்டாளாக்க முனைகின்றார். நேர்மையும், உண்மையும், சமூகப்பற்றுமற்ற ஒரு அலுக்கோசு, மனித உரிமைகளை யாழ்ப்பாணத்து கோமாளிகளுடன் சேர்ந்து தூக்கில் போட அழைக்கின்றது. சமூக அறமோ, சமூக அறிவோ, சமூகப் பற்றோ அற்ற அப்துல்கலாம் போன்ற மூடர்கள், மக்களின் முதுகில் குத்தி பிழைக்கும் அலுக்கோசுத்தனத்தைத் தவிர வேறு எதையும் முன்வைப்பது கிடையாது.

இலங்கையில் இனப்பிரச்சனை பற்றி அப்துல்கலாம்

மும்மொழியைக் கற்றல் மூலம் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று கூறுகின்ற, அடி முட்டாளை இங்கு காண்கின்றோம். இங்கு பல மொழிகளைக் கற்றல் என்பது வேறு. அதாவது மொழிகளைக் கற்கின்ற தேவையும், அவசியமும் வாழ்வதற்கு என்ற எல்லைக்கு அப்பால் அல்ல. பரஸ்பரம் சேர்ந்து வாழ்வதற்கான இயல்பான சூழல், மாற்றுமொழிக் கற்றலை, இனக்கலப்பை இயல்பானதாக்குகின்றது. இதுவல்வாத மொழிக் கற்றல் பற்றிய குறுகிய கண்ணோட்டம் என்பது, இன ஒடுக்குமுறையில் மற்றொரு பரிணாமம். இன ஓடுக்குமுறை தான், இயல்பான மொழி கற்றலைத் தடுக்கின்றது.

மறுதளத்தில் இனவொடுக்குமுறை மொழியைக் கற்பதை தடுப்பதில் இருந்து உருவாவதில்லை. மொழியைக் கற்பதால் இனவொடுக்குமுறை இல்லாமல் போய்விடுவதுமில்லை. இனத்தின் மீதான் இனவொடுக்குமுறை என்பது, ஒரு இனம் தன் சமூக பொருளாதார பண்பாட்டுடன் வாழ்வதற்கான உரிமையை மறுப்பதில் இருந்து தொடங்குகின்றது.

இங்கு மும்மொழியைக் கற்றல் என்ற கோரிக்கை என்பது, ஒடுக்கும் இனத்தின் ஒடுக்குமுறைக்கு இணங்கிப் போகக் கோருவதுதான். அதாவது இனத்தில் அடையாளத்தை பல முனையில் அழிக்கின்ற இன்றைய அரசின் செயலுக்கு மற்றொரு கம்பளம் தான் அப்துல்கலாம் முன்வைத்த மும்மொழிக் கொள்கை.

அப்துல்கலாம் போன்ற முதுகெலும்பு இல்லாத கூட்டம், சிங்களத்தில் பேசிக் காட்டி முதுகு சொறிவது போல் ஒரு இனத்தை வாழக் கோருவது அலுக்கோசுத்தனமாகும்.

ஒரு இனத்தின் உரிமைகளையும், இயல்பான மனித வாழ்வையும் அங்கீகரிப்பதனால் தான், மொழியை கற்றலையும், இனம் கடந்த ஜக்கியத்தையும், இனக்கலப்பையும் இயல்பாகவே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்துல்கலாம் போன்ற மூடர்களுக்கு இது தெரிவதில்லை. இதனால் "அறிவாளிகளாக" இருக்கின்றனர். ஒரு இனத்தின் உரிமைகளையும், இயல்பான மனித வாழ்வையும் அங்கீகரிக்காத மொழிக் கொள்கை, மொழித் திணிப்பாக, இன அழிப்பின் அங்கமாகத் தான் செயல்படும். அதைத்தான் அப்துல்கலாம் என்ற அலுக்கோசு செய்கின்றது.

மீனவர் பிரச்சனையும் தீர்வும்

முதலில் இலங்கைக் கடலில் மூன்றுநாள் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்று கூறுகின்ற, ஒரு நாட்டின் எல்லையை மதிக்கத் தவறுகின்ற, இலங்கை மீனவர்கள் உரிமையை ஏறி மிதிக்கின்ற வக்கிரத்தைப் பார்க்கின்றோம். இந்தியக் கடலில் அத்துமீறி இந்திய மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படையின் அதே அத்துமீறலை ஒத்தது இது.

அடுத்து மீனவர் பிரச்சனை என்ன? அதாவது இந்த "அறிவாளிக்கு" தெரியுமா என்றால் அதுவுமில்லை. மீனவர் பிரச்சனை என்ன?

1. இந்திய மீனவர்களை இலங்கை அரசு கொன்றதும், தாக்குவதும் தொடர்பானது.

2. எல்லை கடந்து மீன்பிடித்தல் தொடர்பானது.

3. தடைசெய்யப்பட்ட வள்ளம், வலை கொண்டு மீன்பிடித்தல் தொடர்பானது.

இப்படித்தான் இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சனை உள்ளது. இப்படி இருக்க "அறிவாளி" வைக்கும் தீர்வு என்ன. வாரத்துக்கு மூன்று நாள் மீன்பிடி என்பது முட்டாளாக செயல்படும் அலுக்கோசுத்தனத்தைத் தவிர, இது வேறு எதுவுமல்ல.

கொன்ற மீனவர்கள் பற்றிய அக்கறையற்ற, அதைக் கண்டிக்கத் திறனற்ற, கொன்றவனுடன் கூடி சிங்களத்திலும் பிதற்றல். சமூகக் கண்ணோட்டமற்ற, பிழைப்புக்கேற்ற உளறல். எல்லை கடந்த அத்துமீறலை நியாயப்படுத்தும், இந்திய விஸ்தரிப்புவாத திமிர் கொப்பளிக்க, இலங்கைக் கடல் வளத்தை சூறையாட மூன்று நாள் வழிவிடக் கோருகின்றார்.

இந்த மூன்று நாளும் தடைசெய்யப்பட்ட வள்ளம் வலைப் பயன்பாட்டை இலங்கைக் கடலில் கோருகின்ற ஒரு அலுக்கோசு 'விஞ்ஞானி"தான் இந்த அப்துல்கலாம். தடைசெய்யப்பட்ட வள்ளமும், வலையும் கடல்வளத்தை மீன்வளத்தை அழிக்கும் என்பது கூட தெரியாத முட்டாள் "விஞ்ஞானி". மூன்று நாள் கடலை அழித்த பின், இலங்கை மீனவர்கள் எதைப் பிடிப்பது. தடைசெய்யப்பட்;ட வள்ளம், வலையைக் கொண்டு மீன்பிடியை நிறுத்தக்கோரியும், அதை இந்தியா தடைசெய்யக் கோரியும், அவர்களுக்கு மாற்று வழியில் நிவாரணம் வழங்கக் கோரியும் தான், எல்லை கடத்தலுக்கு இலங்கை மீனவர்களின் எதிர்ப்பு இன்றி தீர்வு காணமுடியும்.

இதைக் கண்காணிக்கவும், இதை அமுல்படுத்தும் பொறுப்பும் இலங்கை மீனவர்களின் உரிமையாக இருக்கவேண்டும். இதை மீறி தடைசெய்யப்பட்ட வள்ளம், வலையைக் கொண்டு இலங்கைக் கடலில் மீன் பிடித்தால், அதைப் பறிமுதல் செய்து அழிக்கும் உரிமை இலங்கை மீனவர்களுக்கு இருக்கவேண்டும். இலங்கை மீனவர்கள் எந்த வள்ளம் கொண்டு, எந்த வலை கொண்டு மீன்பிடிக்கின்றனரோ, அதையே இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலில் பயன்படுத்த வேண்டும்;

தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வள்ளமற்ற எந்தச் சூழலிலும், 7 நாளும் தங்களுடன் சேர்ந்து மீன்பிடிப்பதை இலங்கை மீனவர்கள் எதிர்க்கவில்லை. அதை அவர்களுடன் பேசித் தீர்க்க முடியும். இந்த அடிப்படையில் அரசுகள் மற்றும் எல்லைகள் பற்றிய மீனவர்கள் கூட்டாக கூடி அணுகவும் முடியும்.

இப்படி எதார்த்தம் இருக்க அப்துல்கலாம் என்ற அலுக்கோசு பிழைப்புக்கேற்ற கடல் அழிவுக் கொள்கையை முன்வைப்பது அதன் அலுக்கோசுத்தனத்தையே எடுத்துக் காட்டுகின்றது.

தமிழகத்தில் கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தும் மக்களுக்கு எதிராக இதே அலுக்கோசுதனத்தைத்தான் அங்கு முன்வைக்கின்றது. "இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 மணி வரை ஆய்வு நடத்தி விட்டு, "கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது' என்று 40 பக்க அறிக்கையை உடனே வெளியிட்டிருக்கிறார். "கலாம்தான் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி' என்று நம்பும் பழ.நெடுமாறனால் கூட, அக்னி ஏவுகணையை விஞ்சும் வேகத்தில் கலாம் தயாரித்திருக்கும் இந்த அறிக்கையை நம்ப முடியவில்லை. ரசிய நிறுவனமான "ஆட்டம் ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட்' டின் இணையதளத்தில் கம்பெனி விளம்பரத்துக்காக அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்களையே சுட்டுத் தயாரிக்கப்பட்டிருப்பதுதான் கலாமின் அறிக்கை." என்று பு.ஜ இதழ் அம்பலப்படுத்துகின்றது.

இதே அப்துல்கலாம் தன் புலமைமிக்க கண்டுபிடிப்பாக "செர்னோபில் விபத்தில் இறந்தவர்கள் வெறும் 57பேர் மட்டும்தான் எனகின்றார்" ஆனால் அமெரிக்காவின் நியுயார்க் அகாடமி ஆஃப் சயின்ஸ் கூறுகிறது, செர்னோபில் விபத்தால் புற்றுநோய் வந்து 70,000 பேர் உயிரிழந்ததாகவும், இன்றும் பல்லாயிரம் பேர் அதன் பாதிப்பினால் புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் கூறியது. அத்துடன் உலகில் உள்ள 136 அணு உலைகளைச் சுற்றி வாழும் மக்கள் மத்தியில் செய்யப்பட்ட மருத்துவ ஆய்வில், அவர்களிடையே புற்றுநோயும், ஊனமும் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இப்படி இருக்க "கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது' என்ற கூறுகின்ற "விஞ்ஞானி"யை, சமூகத்தை கொல்லும் அலுக்கோசாகவே நாம் பார்க்க முடியும். மேற்கில் உள்ள அணு உலைகளை மூடவும், புதிதாக கட்டுவதில்லை என்ற முடிவும் இன்று எடுக்கும் நிலையில், "அணு உலை பாதுகாப்பானது' என்று கூறுகின்ற "அறிவாளியைப்" பார்க்கின்றோம். இப்படி மக்களின் வாழ்வின் உரிமை மீது பிழைப்பு நடத்துகின்ற அலுகோசுத்தனத்தைப் பார்க்கின்றோம். இதே அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமை மீதும், மீனவர்களின் வாழ்வு மீதும் குதறுகின்ற வக்கிரத்தை காண்கின்றோம்.

 

பி.இரயாகரன்

28.01.2012

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது