Language Selection

விடுதலைப் போராட்டம் இதுவென நம்பிச்சென்ற ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள், தங்கள் சொந்த அறியாமையில் இருந்து விடுபட்ட போது, அவர்கள் கண்டது தம்மீதான கோரமான கொடூரமான ஒடுக்குமுறையைத்தான். சிலர் இந்த ஒடுக்குமுறையைக் கண்ட போதுதான், தாம் போராடுவது விடுதலைப் போராட்டமல்ல என்பதைக் கண்டனர். இதனால் இதற்கு எதிராக போராட முற்பட்டபோது, சிலர் தம்மை பலிகொடுத்தனர். சிலர் தப்பியோடினர். சிலர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து ஒதுங்கினர். சிலர் மௌனமாக விலகினர். இதைத்தான் குற்றம் என்கின்றனர் ஜென்னி முதல் பல்லி வரை.

அன்று இதை எதிர்த்துத்தான் அமைப்புக்குள்ளான எதிர்ப்புப் போராட்டங்கள் உருவாகின. அவர்கள் கொடுமைகளையும், கொடூரங்களையும் எதிர்கொண்டு, தாங்களும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பில் இருந்து விலகினர், ஒதுங்கினர், எதிர்த்துப் போராடினர்.

 

 

 

அன்று மக்கள் விரோத அராஜகத்துக்கு எதிராக, அவர்கள் செய்யக் கூடிய குறைந்தபட்ச நேர்மையான செயலாக இது அன்று இருந்தது. தொடர்ந்து அந்த அராஜகத்துக்கு துணைபோவதோ, அதை கட்டிப்பாதுகாப்பதோ இழிவான மனிதவிரோத துரோகச் செயலாக இருந்தது.

இந்த வகையில் தான் புளட்டில் இருந்து காலத்துக்குகாலம் பலர் விலகினர். ஒரு வெளிப்படையான உட்கட்சிப் போராட்டத்தை முன்னெடுக்காது, அதை இரகசிய குழுவாத எல்லைக்குள்ளும், உதிரியாகவும் முன்னெடுத்து வெளியேற்றங்கள் நடந்தது. இங்கு இந்த வழிமுறைகளில் விமர்சனங்கள் இருந்தபோதும், அவர்களின் வெளியேற்றம் நேர்மையின் பாலானது, உண்மையின் பாலானது. அவை மனிதவிரோதிகளுக்கு எதிரானது. தாங்கள் இருந்த அமைப்பு, தாங்கள் உருவாக்கிய அமைப்பு, விடுதலைப் போராட்டத்துக்குப் பதில், மக்களை ஒடுக்கும் கும்பலாக மாறி விடுதலையின் பெயரில் எதிர்ப்புரட்சிக் கும்பலாக இருப்பதை கண்டதன் பின்னணியில்தான், அதில் இருந்து விலகினர். இவர்கள் குற்றவாளிகளா? சம்பந்தப்பட்ட இயக்கம்தான் அப்படிச் சொன்னது என்றால், இன்று வலதுசாரி பல்லி போன்ற முகமூடி புல்லுருவிகளும் அதைத்தான் மீண்டும் சொல்லுகின்றனர்.

அன்று அமைப்பை விட்டு விலகியதற்கு எதிராக, அந்த அமைப்பின் கொலை வெறித்தனம் மட்டும் தன் கோரமுகத்தைக் காட்டவில்லை, இன்றுவரை வலதுசாரிக் கும்பல் தன் எதிர்வினையை, அவர்கள் மேல் காட்டுகின்றது. அன்று அந்தப் போக்குடன் உடன்படாது விலகியவர்கள் மேல் தன் வலதுசாரிய வக்கிரத்தை கொட்டித் தீர்க்கின்றது. இந்த வகையில் தேசம்நெற்றில் முகமூடி போட்டு வலம்வரும் பல்லி என்ற வலதுசாரிய ஒட்டுண்ணி, ஒடுக்கிய அந்த அராஜக கும்பலுடன் சேர்ந்து நிற்க மறுத்த குற்றத்துக்காக அவர்களை குற்றவாளியாக்குகின்றது.

மக்கள் விரோத அராஜகத்துடன் உடன்பட மறுத்தவர்கள், சாதாரண மனித வாழ்வில் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுமைகளை கண்டு கொதித்த நேர்மையானவர்களை, குற்றவாளியாக காட்டுபவர்கள் யார்? இவர்களின் நோக்கம் தான் என்ன? விடுதலைப் போராட்டம் என்றால் என்ன, அது எப்படி மக்களை சார்ந்து போராட வேண்டும் என்ற குறைந்தபட்ட இடதுசாரிய அடிப்படைகளை கொண்டு எழுந்த இந்த எதிர்வினையை உள்ளடக்கியுள்ள அரசியல் சாரம் தான், பல்லி போன்ற முகமூடி மனிதர்களுக்கு சகிக்க முடியாத ஒன்றாக இன்றுவரை உள்ளது.

இதுதான் வலதுசாரி ஜென்னியின் கொலைகாரப் புரட்டு மீது, இந்தக் கொலைகாரர்களுக்கு ஆதரவாக பல்லி போன்ற முகமூடி போட்ட குடுமிகள் புரண்டு படுக்கின்றன. இங்கு "நடுநிலை" வேசம், அனைத்தையும் "விமர்சித்தல்", "பக்கச் சார்பற்றவர்கள்", "பொதுமக்கள்", இயக்கத்தில் எஞ்சிய அப்பாவிகள் மீதான அக்கறை என்று போடுகின்ற முகமூடிக்குப் பின்னால், தன்னையும் தம்மையும் மறைத்துக்கொண்டு தான், மக்களுடன் நின்றவர்கள் மேல,; இந்த அநியாயத்தைக் கண்டு கொதித்தவர்கள் மேல் வசைபாடுகின்றனர்.

இந்தளவுக்கு அன்று இந்த அநியாயத்தைக் கண்டு வெளியேறியவர்கள், இதற்கு எதிராக போராடியவர்கள் கூட, இந்தப் போராட்ட அலையில் சென்றவர்கள் தான். போராடச் சென்ற இடத்தில் தான், ஒரு எதிர்ப்புரட்சியைத் தெரிந்து கொண்டு அவர்களும் எதிர்த்துப் போராடக் கற்றுக் கொண்டார்கள். அவர்களா குற்றவாளிகள்! சொல்லுங்கள்!!

இன்று தேசம்நெற்றை ஜனநாயகம் என்று நம்பி, குமரன் (குமரன் தனக்கு தெரிந்த எல்லாம் கொண்டுவர போவதாக கூறியவர். அவர் விரும்பின் அதை நாம் கொண்டுவரத் தயாராக உள்ளோம்), ஜீவன் முதல் பலரும் பின்னோட்டம் போடவில்லையா? அப்படித்தான் அன்று அவர்களும் இயக்கத்துக்கு சென்றனர். அன்று இயக்கத்துக்கு சென்று பின் அங்கிருந்து தப்பியோடுவதற்கும், இன்று தேசநெற்றில் இருந்து வெளியேறுவது எப்படி என்று அங்கலாய்ப்பதற்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது. அன்று போராடியவர்கள் தேசம்நெற்றில் வைத்து தாக்கப்படுவதற்கும், இயக்கத்தில் வைத்து தாக்கப்படுவதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

ஜனநாயகத்தின் பெயரில் தேசம்நெற்றில் வர்க்க அரசியல் இருக்கின்றது என்பதையும், அதன் பின் அரசியல் நோக்கம் உள்ளது என்பதையும் இன்றும் புரிந்து கொள்ள முடியாத எல்லையில்தான், அன்று ஜீவன் போன்றவர்கள் இயக்கத்துக்கு சென்றார்கள். இந்த உண்மை போல் தான், தேசம்நெற்றின் போலி ஜனநாயகத்தை நம்பி ஜீவன் முதல் பலரும் இங்கு களமிறங்கினர். இதில் இருந்து மீண்டும் தப்பி ஒடும் அவலம் இங்கு தவிர்க்க முடியாதது.

ஜனநாயகத்துக்கு வர்க்கமில்லை என்று கருதுகின்ற பொதுப்போக்கு, எதிரியை இனம் காண்பதில்லை. புளட்டில் உள்ளிருந்து அதைப் படிப்படியாக திருத்தும் ஜனநாயகம் இருப்பதாக சந்ததியார் கருதிய அதே எல்லையில்தான், பின்னோட்ட ஜனநாயகம் முதல் தங்கள் கருத்தை அதில் எழுதுகின்றவர்கள் வரை, அந்தத் தளத்தின் அரசியல் நோக்கத்தை காணாது உள்ளனர்.

அன்று சந்ததியார் எதிர்த்து போராடுவதற்குப் பதில் இணங்கி மாற்றமுனைந்த எதிர்ப்பரசியல், அவரையும் உண்மையான விடுதலைக்காகப் போராடிய பலரையும் கொன்றொழித்தது. இணங்கிய எதிர்ப்பரசியல் தொடர்ந்து போராட விரும்பிய பலரை, அரசியல் ரீதியாக வழிகாட்ட முடியாது வக்கற்றதாக்கியது. அரசியல் அனாதையாக்கியது.

இங்கு தேசம்நெற் ஜனநாயகமாக காட்டி எழுதும் கட்டுரைகள், பின்னோட்டங்கள், அவர்களே இதில் இருந்து தப்பியோடும் எல்லைவரை மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றது. இப்படி அரசியலைக் கடந்து தங்கள் அரசியலுக்கு முரணான தளத்தில் எழுதுகின்றவர்கள் வரலாற்றில் எதைக் கற்றுகொண்டனர் என்பதைக் கடந்து, அன்று போல் இன்று வரை பிழையான முறையில், பிழையான இடத்தில் நின்று தங்கள் கருத்தை சொல்வதைத்தான் மீண்டும் வரலாற்றில் செய்கின்றனர்.

இயக்கம், இணையம் என்றும் எங்கும் அரசியல் உண்டு. புரட்சி, எதிர்ப்புரட்சி என்று அவற்றுக்கு அரசியல் பாத்திரம் உண்டு. இதைக் கடந்து நாங்கள் செயல்படும் போது, புளட்டில் கொலைகாரரைப் போல், பல்லி போன்ற வலதுசாரிய எதிர்ப்புரட்சி கும்பல் புரட்சிகர கருத்துகளைக் கொன்று அதன் மேல் வசைபாடுகின்றனர்.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

13.03.2011

1. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 1

2. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 2

3. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 3


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது