Language Selection

கலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மொட்டைத்தலையன் விகடன் பிரசுரம் சார்பில் கடந்த செப்டம்பர் 2009 வெளிவந்த புத்தகம் தான் நக்சல் சவால். தண்டகாரண்யா பகுதிகளில் அரசு நடத்தும் போருக்கு முன்னோடியாக வெளிவந்த புத்தகம். 200 பக்கங்களுடைய இப்புத்தகம் மிகவும் எளிய மொழி நடையில் ஆளும் வர்க்க கருத்துக்களை சுமந்து வந்திருக்கிறது. உலக அளவில் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை என்ற வழிமுறையே தீவிரவாதம் என்ற அளவில் ஆளும் வர்க்கத்தின் மிகச்சிறந்த பிரச்சாரக்கருவி இது. முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றி கேட்டால் தனது வாயை முடிக்கொள்ளும் ஆளும் வர்க்க ஊடகங்கள் நக்சல்பாரிகள் மீதும் மாவோயிஸ்டு இயக்கத்தினரின் மீதும் அவதூறினை அள்ளி வீசுகின்றன.

இப்புத்தகத்தில் ஒவ்வொரு கட்டுரையாளாரும் தனக்கு பிடித்தமான வகையில் தீர்வினை சொல்கிறார்கள் எப்படி நக்சலிசத்தை ஒழிப்பதென்று.ஆசிரியர் தனது முன்னுரையில் நக்சல்பாரிகள் குறித்து “ரத்தத்தை கண்டு பயப்படுவோரை பணிய வைக்க அதையே ஆயுதமாக பயன் படுத்துகிறார்கள்”, என்கிறார். “வேலையின்மையால் வறுமை ஏற்படுகின்றாது, வறுமையால் அவ நம்பிக்கை, அதிருப்தி பரவுகின்றது. கடைசியில் அது வன்முறையில் போய் முடிகிறது.” வேலையில்லாத்திண்டாட்டமும் மக்கள் தொகைப்பெருக்கமும் தான் நாட்டை எதி நோக்கியுள்ள தீவிரவாதத்திற்கு அடிப்படை என்கிறார் விகடன் ஆசிரியர்.

வேலையில்லா திண்டாட்டம் தான் நக்சலிசம் வளரக்காரணம் என்று கூறினால், நக்சல் அமைப்பில் பலகோடி வேலையற்ற இளைஞர்கள் சேர்ந்திருக்க வேண்டும், மக்கள் தொகைப்பெருக்கமோ வேலையில்லா திண்டாட்டமோ நக்சல்பாரியை வளர்க்க வில்லை, ஆளும் வர்க்க பயங்கரவாதமே மாவோயிஸ்டு இயக்கத்தை வளர்க்கிறது. “நீ எங்களோடு இல்லை என்றால் மாவோயிஸ்டோடு இருக்கிறாய்” என்று கட்டளையிடுகிறது. ஒன்று என்னுடன் சண்டை போடு இல்லையேல் அடிமையாயிரு என தீர்வுகளை முன் வைக்கிறது.

ஏன் இந்த அறிவு ஜீவிக்கப்பட்டவர்கள் தீவிரவாதத்திற்கும் வேலையில்லாதிண்டாட்டத்திற்கும், மக்கள் தொகைக்கும் முடிச்சு போடுகிறார்கள்?

அரசு பயங்கரவாதத்தை மூடி மறைப்பதற்கான அழகான வழி இது. ஏனென்றால் இந்த போலி சனனாயக அரசால் கடைசிவரை வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கமுடியாது அது மட்டுமல்ல, “உழுபவனுக்கு நிலம் உழைப்பவனுக்கு அதிகாரம்” என்ற தத்துவத்திற்குத்தான் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்ற உண்மையை மறைப்பதற்கு தேவையான உத்தி இது.

இந்த புத்தகத்தை தொகுத்து வெளியிட்டவர் பி.வி.ரமணா, இவர் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்,”இந்தியப்பாதுகாப்பில் ராணுவத்தின் பங்கு, ராணுவ ஆராய்ச்சிகள்” என்ற தலைப்புக்களில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆக இந்திய ராணுவ கைக்கூலியால் தயாரிக்கப்பட்ட இத்தொகுப்பு அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் நிறுவனத்தினால் 2005ஜனவரி 25 &29 ஆகிய நாட்களில் பயிலரங்கமாக நடத்தப்பட்டது.

இதன் முதல் கட்டுரையாளர் டி.ராஜா(சிபிஐ , தேசியச் செயலாளர்) பொறுத்தவரை “நக்சலைட் தீவிர வாதம் ஒழிக்கப்படவேண்டிய / வெல்லப்படவெண்டிய ஒரு குழப்பம், இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகமே அரசாங்கம் என்னும் கட்டுப்பாடு வளர்ந்து நிலைப்பெற்றுவிட்டது,ஆகவே தேர்தல்களில் விலகியிருந்தால் தொலைந்து போக நேரிடும், நாட்டைப்பிடிக்க தேர்தலைத்தவிர சிறாந்த வழி ஏதுமில்லை என்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு விசாலமான திட்டங்களே இதை ஒடுக்கும் வன்முறை, அடக்குமுறைக்கு நிரந்தரமாக முடிவுகட்டப்பட வேண்டும்”

ஆயுதம் அது மாவோயிஸ்டுகள் தூக்கினால் அது தீவிரவாதம் அதுவே போலி மார்க்சிஸ்டு குண்டர்கள் எடுத்தால் பாதுகாப்பா? சந்தடி சாக்கில் கேரளாவைப்பாருங்கள், மேற்கு வங்கத்தைப்பாருங்கள் என்கிறார். அந்த இரண்டு மாநிலங்களையும் பார்த்ததால் தான் கேட்க வேண்டியிருக்கிறது, மாவோயிஸ்டை விட்டுத்தள்ளுங்கள் பாசிசமாய் மக்களைக் கொல்லும் போலி கம்யூனிஸ்ட் கட்சியை எப்போது தடை செய்யப்படும்?


நக்சல்பாரி இயக்கங்களின் மீது இப்புத்தகத்தினை திருப்பும் பக்கமெல்லாம் அவதூறுகள் நிறைந்திருக்கின்றன. சிஆர்இசட்(compact revolution zone) என்ற அமைப்பை ஏற்படுத்த தீவிரமாய் நக்சலைட் தீவிரவாதிகள் முயல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கொலைகாரப்படையான சல்வார் ஜுடூம் இப்புத்தகத்தில் நக்சலைட்டுகளுக்கெதிரான பகுதி மக்களின் படை என்ற பொய்யும் ஆணித்தரமாக நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல நேபாளத்தின் மாவோயிஸ்டுகளும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். நேபாளத்தின் மகத்தான மக்கள் எழுச்சி , நேபாள மன்னராட்சி அழிக்கப்பட்டதும் கவலையைத்தருகின்றன அறிவு ஜீவிக்கப்பட்டவர்களுக்கு. இப்புத்தகத்தில் ருசி கர்க் என்பவர் எழுதிய கட்டுரையில் மட்டும் தான் பழங்குடிகள் மக்கள் அரசால் வஞ்சிக்கப்பட்டது குறித்து சற்று விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையில் பழங்குடி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள், அவர்களின் கலாச்சாரம் அழிப்பட்ட விதம், தண்டகாரண்ய மக்கள் பல்லாண்டுகாலமாய் போராளிகளாக இருந்திருப்பது குறித்தும் தெளிவாக இருக்கிறது.

மாவோயிஸ்டு இயக்கமும் நேபாளா மாவோயிஸ்டு கட்சியும் இணைந்து இந்தியாவை ஆக்கிரமிக்கப்போகின்றன, மாவோயிஸ்டுகளுக்கு உல்பா, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ போன்ற அமைப்புக்கள் நிதியுதவி அளிக்கின்றன போன்றா புருடாக்களை வழி நெடுக காணமுடிகின்றது. மேலும் ஒவ்வொரு மாவோயிஸ்டுக்கும் 1500 ரூபாய் நிதி வழங்கப்படுவதாகவும் அதுவும் கூட மாவோயிஸம் நிலைக்க காரணம் என்கிறார் இன்னொரு கட்டுரையாளர்.

 

அப்படியே 1500 ரூபாய் அல்ல 15000 ரூபாய் கொடுப்போம் இந்த புத்தி ஜீவிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தேசத்தை காக்க களத்திலிறங்கட்டும்.

எப்படி நக்சல்பாரி இயக்கத்தை இந்த நாய்களால் கொச்சைப்படுத்த முடிகிறது? உழைக்கும் மக்களின் விடுதலைக்காக ஆயுதமேந்துபவனின் அர்ப்பணிப்பு 1500 ரூபாயில் அடங்கிவிடுமா என்ன?
கிருஷ்ணா ஹச்சேத்து என்பவர் நேபாள மாவோயிஸ்டு புரட்சிக்காரர்கள் என்ற கட்டுரையில் ஒட்டுமொத்தமாக நாங்கள் யார் என்பதை தனது தீர்வினைக்கூறி அவிழ்த்துப்போட்டு காட்டுகிறார்.

“1. மன்னரே, மாவோயிஸ்டையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது, அரண்மணையிலிருந்து ராணுவத்தை வெளியேற்றுவது, மாவோயிஸ்டு கொரில்லாக்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வது.
2.புது அரசியலமைப்பில் மன்னராட்சியையும் வைத்துக்கொள்ள அனைத்துக் கட்சிகளுடனும் ஒரு பொது புரிந்துணர்தலை ஏற்படுத்துவது
3.அரசியலைப்பில் எதையும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள உகந்த தீர்வு.”

நேபாள மக்கள் கொடிய மன்னராட்சியை எதிர்த்து களத்தில் நிற்க ஏசி ரூமில் கழிந்து கொண்டிருக்கும் அரசாங்க கூஜா தூக்கிகளான இந்த அறிஜீவிக்கப்பட்ட கைத்தடிகள் இங்கிருந்து வழிகாட்டுகிறார்கள் “மன்னன் தேவையென்று”

இந்த புத்தி ஜீவிக்கப்பட்ட அறிவு ஜீவிகள் எப்போதும் மக்களுக்காக பேச மாட்டார்கள் அவர்கள் ஏகாதிபத்திய, ஆளும் வர்க்க பயங்கரவாத அரசின் கைக்கூலிகள் அதை இதோ எழுத்தாளர் அருந்ததி ராய் இதோ அம்பலப்படுத்துகிறார் “எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.எ.ஏ-ல் வரவில்லை. இந்த சமூகத்தின் எல்லா வகை மாதிரிகளையும் அவர்களிடம் காணலாம். நாட்டின் மிகப்பெரிய அறிவு ஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்திற்கு பல நூறு கோடி ரூபாய்களை நிறூவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடமிருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிபார்க்க முடியும் “

புத்தகத்தின் பெயர் : நக்சல் சவால் ( நக்ஸல் சவால் )
விலை : 80/-
விகடன் பிரசுரம்
757, அண்ணா சாலை, சென்னை-600002
விற்பனை பிரிவு தொலை பேசி எண் : 044-42634283/84

http://kalagam.wordpress.com/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது