Language Selection

சமர் - 17 : 12 -1995
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ் குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் இனவெறி இராணுவம் தனது காட்டுமிராண்டித் தார்ப்பாரை நடத்தும் இன்றைய நிலையில் இது எப்படி இராணுவ ரீதியில் சாத்தியமானது? புலிகளின் இராணுவக் கண்ணோட்டம் சுயமானதாக இருந்து இருப்பின் ஒருக்காலுமே உடனடியாக யாழ் குடாவைக் கைப்பற்றும் இராணுவ முயற்சி சிறிலங்காவக்கு வெற்றி அளித்திருக்க முடியாது.

யாழ் குடாநாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் இராணுவமானது மிகவும் திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் சர்வதேச சக்திகளின் முறைப்படியன தெளிவான ஆலோசனைகள் வழங்கப்படடுள்ளது. யாழ் குடாநாட்டைக் கைப்பற்ற.

அங்கிருந்த புலிகளின் படைப்பரிவிவுகளை வேறு இடங்களுக்கு நகர்ததுவது இராணுவத்தறி;கு அவசியமாகவே இருந்தது. இதை சர்வதேச சக்திகள் தான் புலிகள் மூலம் அரசுக்குச்செய்து கொடுத்துள்ளது.

ஈழப் போர் - 3 ஆரம்பித்தவுட்ன இதன் மூல உபாயங்கள் திட்டமிட்ட முறையில் நடைமுறபை;படுத்தப்பட்டுள்ளன. புலிகள் பெருமளவில் கிழக்கை நோக்கி நகர்ந்ததும். பல முகாம்களை தாக்கி அழிக்கத் தொடங்கிய நிலையில், இராணுவம் பல முகாம்களை தாமாகவே கைவிட்டு படைகளை யாழில் குவித்தும் சீரான வகையில இரு பக்கபடை நகர்வை எப்படிச் செய்ய முடிந்தது? இந்த படை நகர்வ பலிகள் கிழக்கை நோக்கியும், இராணுவம் வடக்கை நோக்கியும் நகர்ந்த நகர்வு ஒரு தற்செயலான நிகழ்வாக இன்று யாருமே பார்க்க பக்கங்களுக்கும் ஆலோசனை வழங்கி ஆட்டிப் படைத்துள்ளது என ஊகிக்க முடியும். கிழக்கில இராணுவ முகாம்களை புலிக்ள கைப்பற்றிய போதும், இராணுவம் முகாம்களை விட்டுவிட்டு நீங்கிய போதும் புலிகள் பிரசார சாதனங்கள பலமாக அதை மறுபக்கம் சிந்திக்க முடியாத் வகையில் அவர்களையே நகர்த்திச் சென்றத. அதில் “தலைவர் உத்தரவு கிழக்கைக் கைப்பற்ற” என்ற கூற்று புலிகளின் கண்களைக் கூட மறுபக்கம் பார்க்க விடாது கட்டி வைத்துள்ளது.

இந்நிலையில் தான் சிறிலங்கா கடற்படை மீது புலிகளின் தாக்குதல் கூட இதே மாதிரிப் பிரசாரத்திற்கு உள்ளானது. யுத்த தந்திர ரீதியில் ஒரு படையும் அதன் ஆயுத பலமும் ஒன்றை முறியடிக்கும் போது அதை மீறி ஆயுத தளபாடம் பெறுவது என்பது ஒரு வழமையான விடயமாகும். ஆனால் சில கப்பல்கள் தாக்கப்பட்டவுடன் முழுமையாக ஒழிக்க உத்தரவு என்ற பிரசாரங்கள், எதிரி நவீன ராடர் வசதியுடன் தாக்குவான் என்பதை சொல்லாத புகழ் உரைகள் நம்பிக்கையீனத்தை பின் ஏற்படுத்தி விடுகின்றது.

இன்று புலிகளின் விமானப்படை, கடற்படை, “கிழக்கைக் கப்பற்றல்”, “யாழப்பாணத்தை விடமாட்டோம்” என்ற தொடர்ச்சியான மிகைப்படுத்தப்பட்ட, ஊதி வீங்கிய பிரச்சாரங்கள் இன்று தகர்ந்து விடும் என்ற நிலைமை புலி உறுப்பினர்களைக் கூட நம்பிக்கையீனத்திற்கு நகர்த்திச் சென்ற விடுகின்றது. இது அவர்களின் பல்வேறு கட்டுரைகளிலும் தென்படுகின்றது.

3ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் முல்லைத்தீவு – கிழக்கில் புலிகளின் கூர்மையான விடாப் பிடியான தொடர்ச்சியான தாக்குதல்ளக் இன்று இல்லையென்னும் அளவிற்குச் சென்றுள்ளது. இதன் மூலம் அரசு புலிகளின் பலவீனத்தை இனம் கண்டுள்ள நிலையும், புலிகளின் படைப் பிரிவுகள் வடக்கு நோக்கி மீள நகர்ந்ததையும் அரசு அவதானிகத்தது. உணர்ந்தது. இந்நிலையில் தான் புலிகள் சிங்களக் கிராமங்கள் மிது தாக்குதலைத் தொடுத்தனர். சாதாரண சிங்கள கிராம மக்கள் அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக வாழ்கின்ற அப்பாவிகள் மீது புலிகள் தாக்கியதன் மூலம் என்னத்தைச் சாதிக்க முனைந்தனர்.

இத் தாக்குதல் மூலம் சிங்களப் பகுதிகளில் இருந்த அரசுக்கு எதிராக, புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் சிலரைக் கூட மௌனமாக்கியதும் சர்வதேச ரீதியில் தேசிய விடுதலைக்கு எதிரான பாரிய பிரசாரத்திற்கு இது இட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக டீடீஊஇ ஊNN மற்றும் யுளுஐயு செய்திச் சேவைகள் அனைத்தும் இவற்றை மீள மீளக் காட்டுவதன் மூலம் புலிகளுக்கு எதிரான ஒரு பாரிய பிரசாரத்தைச் செய்து வருவதன் மூலம், தமிழ் தேசம் எரிக்கப்படுவதை சாம்பலாக்கப்படுவதை திட்டமிட்டே மூடி மறைத்துள்ளனர்.

சிங்களக் கிராமத்தாக்குதலில் சுரண்டும் அரசுக்கு இதுபற்றிய எந்தவித கரிசனையோ, அல்லது தனது இனம் அழிந்தது என்ற அக்கறையோ இருப்பது இல்லை. சுரண்டுவதற்காக தனது இனத்தைச் சேர்ந்த ஒருலட்சம் பேரைக் கொன்று குவித்த இவ்வரசு, ஒரு சிங்களக் கிராமத்தாக்குதலை இட்டு ஒருபோதும் அலட்டிக் கொள்வதில்லை. ஒரே ஒரு நெருக்கடி என்னவென்றால் மற்றைய இன வெறியர்களுக்கு ஒருக்கால் பதில் அளிப்பது மட்டுமே இவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கும். மற்றும்படி தனது ஒடுக்குமுறைக் கரங்களை லோசகாத் துடைத்து மறைப்பதற்கே இதை ஒரு பிரச்சாரக் கைக்குட்டையாகப் பாவிக்கும்.

பலம் - பலவீனம் இவைகளில் இருந்து யுத்தத்தைத் திட்டமிடவும் எதிரியை அழித்து ஒழிக்கவும் சொந்த முடிவுகளை சார்ந்து இருக்கவும், பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களைச்சார்ந்து இருக்கவும் சிங்கள முஸ்லிம் பிற இன மக்களின் பரந்துபட்ட ஐக்கியத்திற்கும் உழைக்கும் கொள்கையைக் கொண்டு இருப்பதும் தான் இராணுவ ரீதியில் யுத்தததை வெற்றி பெற வைக்கும் ஒரே ஒரு வழியாகும்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது