-
நன்கு கொதித்த சுடு நீரை மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் இட்டு சுவைக்கு உப்பு சேர்த்து அதனுள் சோயா இறைச்சியை கொட்டி 10 நிமிடம் மூடி ஊற வைக்கவும்
-
வெங்காயத்தை தோல் உரித்து, நீளம் நீளமாக வெட்டி கொள்ளவும்
-
வெங்காயத்துக்கு சுவைக்கேற்ப உப்பு, 2 தேக்கரண்டி கறித்தூளை சேர்த்து கிளறி 2 நிமிடம் வைக்கவும்
-
ஊறிய சோயா சோயா இறைச்சியை வடிகட்டி எடுத்து குளிர் நீரில் களுவி கொள்ளவும், பெரிய துண்டுகளாக இருந்தால் சிந்தாமணி கடலை அளவு துண்டுகளாக வெட்டவும், (சந்தையில் சிறிய துண்டுகாள உள்ள சோய இறைச்சியும் கிடைக்கும், அதை வெட்டி துண்டாக்க தேவையில்லை)
-
வெட்டிய/ வடி கட்டி எடுத்த சோயா துண்டுகளுக்கு 1 தே கரண்டி கறித்தூள், மஞ்சள், உப்பு என்பவற்றை போட்டு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்
-
பொரிக்கும் (அடிப்பிடிக்காத/ ஒட்டாத/ non stick) சட்டியில் 3 மேசகரண்டி எண்ணேய் விட்டு மென்சூட்டில் சூடக்கி அதில் கறித்தூள், உப்பில் பிரட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வெங்காயம் மெதுமையாக வரும் வரை வதக்கவும்/ பொரிக்கவும்
-
வெங்காயம் வதங்கி வந்ததும் ஊற வைத்த சோயா இறைச்சியை கொட்டி, மிகுதியாக இருக்கும் எண்ணேயை சேர்த்து மேலும் ஒரு 2-3 நிமிடம் கிளறி, கறிவேப்பிலையை சேர்த்து இறக்கவும்
-
பொரியல் சாப்பிடக்கூடிய சூட்டை அடைந்ததும் புளிப்பு சுவையை விரும்புபவர்கள் பாதி தேசிக்காயை பிளிந்து, நன்கு கிளறவும்
-
இப்போ சுவையான சோயா இறைச்சி பொரியல் தயார்.
-
இதனை சோறு, புட்டு ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
http://viriyumsirakukal.blogspot.com/2008/07/blog-post.html