Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிட்டும் தேங்காப் பூவுமாக வாழ்ந்த கிழக்கு மக்களின் இன ஒற்றுமையை, தமிழ்தேசியம் தான் பிளந்தது என்று கூறிக்கொண்டு புலியெதிர்ப்பு என்ன அரசியல் நடத்தியது? தமிழ்தேசியத்தின் பெயரில் புலிகள் நடத்தியதை விட, மிகமோசமாக இன ஒற்றுமையை கிழக்கிசம் சிதைத்தது.

 

தமிழ் தேசியத்தில் இருக்கின்ற ஜனநாயகக் கோரிக்கையை மறுக்கும் ஜனநாயக விரோதிகளில் ஒரு பகுதியினர், அதை மூடிமறைக்க கிழக்கு என்ற கோசத்தை எடுத்தனர். இவர்களோ புலியை விட மிகமோசமான, (கிழக்கு) மக்களின் விரோதிகளாக வெளிவந்துள்ளனர். கிழக்கு மக்கள் மத்தியில் புதிய சமூகப் பிளவை, புலிக்கு நிகராக பேரினவாதத்தின் துணையுடன்  விதைத்துள்ளனர். இதைத்தான் இவர்கள் தமது 'ஜனநாயகம்" என்கின்றனர். மக்களை பிரித்து பிளக்கும் அரசியலை, மக்கள் மத்தியில் விதைப்பதைத்தான் மக்களின் 'ஜனநாயகம்" என்கின்றனர்.  

 

இவர்கள் தமிழ் தேசியத்தின் ஜனநாயக கோரிக்கையையே ஏற்க மறுப்பவர்களாக இருப்பதாலும், இவர்கள் ஜனநாயக விரோதிகளாக உள்ளனர். இதனால் இவர்கள் தமிழ் தேசியத்தை தவறாக விளக்கியதுடன், அதன் மேல் குப்பைகளை வாரிக்கொட்டினர். மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராக இருந்ததுடன், தேசியத்தை வெறும் புலியாகவே காட்டி இயங்கினர். தமிழ் தேசியத்தை, வடக்கு மக்களின் பிரச்சனையாக திரித்தனர். இதன் மூலம் குறுகிய கிழக்கு மையவாதத்தை உருவாக்கினர்.

 

இப்படி ஒரு இனத்தை பிளந்து குளிர்காய்வதைத் தவிர, இவர்களிடம் வேறு அரசியல் எதுவும் கிடையாது. இப்படி வடக்கு மக்களுக்கு எதிராகவே காறித் துப்பியவர்கள் தான், கிழக்கு முஸ்லீம் மக்களுக்கு எதிராக காறி உமிழத் தொடங்கினர். இதுதான் தமிழ் தேசியத்துக்கு எதிரான, கிழக்கிசத்தின் மொத்த அரசியல் சாரமாகும்.

 

எப்படி புலி தமிழ் தேசியத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு எதிராக அரசியல் செய்கின்றதோ, அப்படி கிழக்கிசத்தை முன்வைத்து கிழக்கு மக்களுக்கு எதிராகவே அது செயல்படுகின்றது.

 

மொத்தத்தில் இந்த அரசியல், மக்களை அணிதிரட்டி, மக்கள் அதிகாரத்தை பெறுவதையிட்டு அலட்டிக்கொள்வது கிடையாது. சில பொறுக்கிகள் அதிகாரத்தைப் பெறுவதைத் தான்,  தேசியம், கிழக்கிசம் என்று இவர்களால் கொண்டாடப்படுகின்றது.

 

இந்த கிழக்கிசமோ பேரினவாதத்தின் கள்ளக் குழந்தை. அதை அவர்கள் தத்தெடுத்து, அதை 'ஜனநாயக" குழந்தையாக அறிவித்ததுடன், தமது பேரினவாதச் சொத்திலும் பங்கும் கொடுத்தனர். இப்படி பேரினவாதத்துக்கும் புலிக்கும் பிறந்த கள்ளக் குழந்தை தான் கிழக்கிசம் என்பதால், அது இயல்பாகவே கிழக்கு மக்களை பல கூறாக பிரித்தும் பிளந்தும் ஆட்டம் போடுகின்றது. அப்பனை மிஞ்சிய அரசியல் வக்கிரத்தை, கிழக்கிசம் கிழக்கில் புகுத்துகின்றது. மக்களை பிரித்தும் பிளந்தும் ஒருவரை ஒருவர் எதிரியாக்கி, அவர்களை மோதவிடுகின்றது. சமூக வெறுப்பைத் தான், இவர்கள் ஜனநாயகப்படுத்தினர். 

  

இந்த கிழக்கிசக் குழந்தை அப்பனின் பேரினவாதம் பற்றி, தனது 'ஜனநாயக" வாயால் போற்றுகின்றது. அம்மா போல் நடித்தபடி, அம்மாவை மட்டும் தூற்றுகின்றது. 

 

இப்படி பேரினவாதத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ் முஸ்லீம் ஒற்றுமைக்கு எதிராகவே களமிறங்கி மோதுகின்றனர். இதுவோ பேரினவாதச் சதிதான். பேரினவாத அரசோ, தமது பேரினவாத அரசியல் எடுபிடிகளாக உள்ளவர்களை பிளந்து, அவர்களையும் மோதவிடுகின்றது. பேரினவாத அரசில் உள்ள தமிழ் முஸ்லீம் குண்டர்களை, கோவணத்துடன் வீதியில் இறக்கியது. அவர்களுக்குள்ளாகவும், எதிராக உள்ளவர்களுடனும் மோத வைக்கின்றது. இதன் மூலம் தமிழ் முஸ்லீம் மக்களின் உறவையே, சுடுகாடாக்கினர்.

 

பேரினவாதம் எரிகின்ற இந்தப் பிரிவிலும் பிளவிலும் குளிர்காய்கின்றது. இப்படி பேரினவாதம் கிழக்கில் தமிழ் தேசிய விரோத உணர்வுடன் கட்டமைக்கின்ற கிழக்கிசம், நீண்டகால இனவழிப்புக்கு ஏற்ற ஒன்றாக வளர்க்கின்றது. கிழக்கில் தமிழ் - முஸ்லீம் ஐக்கியத்துக்கு வேட்டுவைக்கின்றது. இதனடிப்படையில் தான், அரச கூலிக் குழுக்களுக்கு இடையிலான மோதலை தூண்டிவிடுகின்றது.

 

இந்த அடிப்படையில் எலும்பை எறிந்து, தமது நாய்களையே கடிபட வைத்தனர். ஊரில் உள்ள நாய்களை எல்லாம் ஒன்று கூடி, தமக்குள்ளும் மோதத் தொடங்கினர். இந்த நாய்ச் சண்டையில், தமிழ் முஸ்லீம் மக்களை 'ஜனநாயகத்தின்" பெயரில் பிரிந்து நிற்க நிர்ப்பந்தித்தவர்கள், இந்த சூதாட்டத்தில் மக்களை பந்தயம் கட்டி மோதவிட்டனர். தமிழ் - முஸ்லீம் மக்களின் இடையேயான பிளவையும் பிரிவையும், மேலும் ஆழமாக்கினர்.

 

பிட்டைக் கொண்டு தேங்காய்ப்பூவை மூடுவதா, தேங்காய் பூவைக்கொண்டு பிட்டை மூடுவதா என்ற,  பேரினவாதச் சதியில் இறங்கினர். புலித்தேசியத்தில் இருந்து கிழக்கு மக்களை மீட்டதாக கூறிக்கொணடவர்கள் செய்ததெல்லாம், 'ஜனநாயக" கோவணத்துடன் இறங்கி கிழக்கு மக்களை பிரித்ததும் பிளந்ததும் தான். அதே புலியிசத்தை மீண்டும் 'ஜனநாயக" வழியில் விதைத்ததுதான்.

 

எலும்பைப் போட்டு பிளவையும் பிரிவையும் விதைக்க கொடுத்த பேரினவாதம், தனது அறுவடையைத் தொடங்கியுள்ளது. உண்மையில் தமிழ் தேசியத்துக்கு எதிராக காழ்ப்பைக் கொட்டியவர்கள், அதைவிட மோசமான கிழக்கிசத்தை மக்களுக்கு எதிராகவே உருவாக்கினர். தமிழ் தேசியத்தை வெறும் புலியிசமாக காட்டிக்கொண்டு, புலியிசத்தைவிட மோசமான கிழக்கிசத்தை கட்டினர்.

 

உண்மையில் பேரினவாதக் கைக் கூலிகளுக்கு, வேறு என்ன தான் அரசியல் இருக்க முடியும். விளைவு கிழக்கிசத்தை வைத்தவர்கள், அதை குறுகிய கிழக்கு தமிழிசமாக மாற்றினர். இப்படி இனப்பிளவை ஒன்றுக்குள் ஒன்று ஆழமாக்கி, தமிழ் இனத்தின் அழிவை துரிதமாக்கியுள்ளனர்.

 

பேரினவாதிகளுடன் சேர்ந்துள்ள அவர்கள், இதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. தமிழ் முஸ்லீம் மக்களிடயேயான பிளவை, புலிகள் கூட இந்தளவுக்கு வெளிப்படையாக செய்தது கிடையாது. புலிகளோ ஆயுத முனையில் பிளவை விதைத்து, அதை அறுவடை செய்தனர். கிழக்குவாதிகள் அதை ஆயுதம் மற்றும் 'ஜனநாயகத்தின்" பெயரில் விதைத்து, பேரினவாதிகளுக்காக அறுவடை செய்கின்றனர். 

 

மக்களுக்கு கிடைக்கப் போவது எதுவுமில்லை. தமது சொந்த அழிவையும், தம் மீதான புதிய ஒடுக்குமுறைகளையும் தான். மக்கள் இப்படி 'ஜனநாயக" வழியில் ஒடுக்கப்படுவதும், தமக்குள் பிரிவினையையும் பிளவையும் சுமந்தபடி, சிறுமைப்படுவதைத் தான் மக்களின் விடுதலையாக அனைவரும் வழி காட்டமுனைகின்றனர். இதற்கு எதிராக போராடுவது மட்டும் தான், குறைந்தபட்சம் மக்களின் விடுதலைக்கான மாற்று அரசியல் வழியாக எம்முன் உள்ளது.

 

பி.இரயாகரன்
20.05.2008

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது