Language Selection

புதிய ஜனநாயகம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
11_2005.jpgநாலுவழிச் சாலை மக்களுக்கான நல்வழிச் சாலை அல்ல. இச்சாலைகளை உபயோகிக்க கூடுதல் கட்டணம் செலுத்தத் தயாராக உள்ள நடுத்தர வர்க்கம், இந்த உலகமயமாக்கம் தன்னையும் தகர்த்துக் கீழே தள்ளும் என்பதை உணரும்போது மட்டுமே, இப்பொருளாதார வளர்ச்சி யாருக்கானது என்பதைப் புரிந்து கொள்ளும். அல்லாதவரை ""நாடு, மக்கள்'' எனக் குறிப்பிடும்போது தம்மை மட்டுமே முன்னிறுத்தும் இந்த வகையினர், கட்டுரை உணர்த்தும் பொருளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே, முழுமையான உள்விவரங்களுடன் கட்டுரை எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஜீவா, சென்னை.

 

வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு அழிவு வந்தால் அதிலிருந்து மனித குலத்தைக் காக்கப் போராடுவதாகத் திரைப்படம் எடுக்கும் அமெரிக்கா, கத்ரீனா புயல் தாக்கிய போது சொந்த நாட்டு மக்களையே காப்பாற்ற முன்வரவில்லை. அமெரிக்க மாயையைக் கலைத்த கட்டுரை சிறப்பு. நால்வழிச் சாலைகள், கணினி மென்பொருள் பூங்காக்களால் நாடு முன்னேறுவதாகக் கருதுவோரின் கனவைக் கலைத்த, ""ஒட்டுண்ணித்தனத்தின் புதிய பரிமாணம்'' என்ற கட்டுரை அருமை.

வாசகர் வட்டம், தஞ்சை.

 

மத்தூர் சிறு சந்தை நகரம். இங்கு புதிய ஜனநாயகம் இதழ் நூறுக்கும் மேல் விற்பனையாகிறது. இதைப் பார்த்து, வங்கி ஊழியர்கள் சிலர், இவ்வளவு பத்திரிகை இங்கு விற்பனையாகிறதா என்று ஆச்சரியமாகக் கேட்டு, தாங்களும் பு.ஜ. இதழை வாங்கிப் படித்து பாராட்டினர். ஒவ்வொரு இதழும் கூர்மையான அரசியலோடு வெளிவருவது எங்களுக்கு உற்சாகமளிக்கிறது.

இராணி, போச்சம்பள்ளி.

 

அக். இதழின் அட்டைப்படம் போராட்ட உணர்வைத் தூண்டும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா பணக்கார நாடு, மக்கள் சுகபோகமாக இருப்பார்கள் என்ற மாயையைத் தகர்த்து, அங்கு ஏழைகள் படும் அவலத்தையும் அரசின் அலட்சியத்தையும் கத்ரீனா புயல் பற்றிய கட்டுரை எடுப்பாக விளக்கியது. நாலுவழிச் சாலையால் நாடு முன்னேறப் போவதாக நம்பிய எங்களது தவறான கருத்தைக் களையும் விதமாக நாலுவழிச் சாலை பற்றிய கட்டுரை அமைந்துள்ளது. சாதிவெறியர்களின் கொட்டத்தை ஒடுக்க அவர்களது இடஒதுக்கீடு உரிமை, வாக்குரிமை உள்ளிட்டு அனைத்து உரிமைகளையும் பறிக்க வேண்டும் என்று பு.ஜ. வைத்துள்ள தீர்வு மிகச் சரியானது; நியாயமானது.

வாசகர்கள், பாடாலூர்.

 

செப். 12 அன்று நடந்த கோக் எதிர்ப்புப் போராட்டத்தில் உங்களது புதிய ஜனநாயகப் புரட்சிகர அமைப்புகளின் வீரியத்தையும் எழுச்சியையும் காண முடிந்தது. முற்போக்கு, ஜனநாயக, தமிழின அமைப்புகள் அனைத்தும் உங்களோடு ஒன்றிணைந்து முழுமூச்சில் அமெரிக்க எதிர்ப்பில் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மலர், திருச்சி.

 

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுக்குச் சேவை செய்யும் இந்திய ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை தலையங்கம் எடுப்பாக விளக்கியது. புரட்சி பேசும் சி.பி.எம். தலைவர்களின் பித்தலாட்டச் செயலுக்கு புத்ததேவ் பட்டாச்சார்யா எடுப்பான சான்று. கோக் எதிர்ப்புப் போராட்டச் செய்திகள் உணர்வூட்டுபவையாக அமைந்துள்ளன.

செம்மலர் மா. நடராசன், அறந்தாங்கி.

 

தந்தை பெரியார் எதிர்பார்த்த போர்க்குணம் மிகுந்த இலட்சியப் பயணத்தை புதிய ஜனநாயகப் புரட்சிகர அமைப்புகள் மட்டுமே நடத்தி வருகின்றன. எந்தவொரு ஓட்டு அரசியல் கட்சியும் செய்யத் துணியாத பிரச்சாரத்தை, போராட்டத்தை கோக் எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் சாதித்துள்ளன. நெல்லை ஆர்ப்பாட்டத்தில் பெண் தோழர்களின் உணர்ச்சிகரமான அந்தப் பறையொலியானது, அமெரிக்கக் கொள்ளையர்களின் தலையில் இடியாய் இறங்கப் போவது நிச்சயம்.

இராசா இராவணன், பழனி.

 

காந்திகாங்கிரசு துரோகங்களின் களர் நிலத்தில் விளைந்த பதரான மன்மோகன் சிங்கின் கழுத்தறுப்பு ஒருபுறம். காங்கிரசு கயவாளிகளை முட்டுக் கொடுத்து ஆதரிக்கும் போலி கம்யூனிஸ்டுகள் மறுபுறம். இவை மதச் சார்பற்ற அரசியல் நாணயத்தின் இரு பக்கங்கள். இதைச் சுண்டி விளையாடுகிறது மறுகாலனியாக்கம். காங்கிரசுக்கும் போலி கம்யூனிஸ்டுகளுக்கும் கொடிகள்தான் வேறுபாடு; கொள்கை ஒன்றுதான் என்பதை பு.ஜ. கட்டுரைகள் உணர்த்துகின்றன.

கதிரவன், சென்னை.

 

தன் சொந்த நாட்டு மக்களையே காப்பாற்ற வக்கற்று நிற்கும் அமெரிக்க வல்லரசு, இதர ஏழை நாடுகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கப்பலில் அனுப்புவதும், ஏன் ஜனநாயகத்தையே ஏற்றுமதி செய்து அந்நாடுகளை ஆக்கிரமிப்பதும் எதற்காக? இந்தக் கேள்வியின் மூலம் அமெரிக்க மாயையைக் கலைத்து, அதன் கோர முகத்தை கத்ரீனா பற்றிய கட்டுரை அம்பலப்படுத்திக் காட்டியது.

நிர்மலா, திருச்சி.

 

கிராமப்புற சாலைகள் போட நிதியில்லை என்று கையை விரிக்கும் ஆட்சியாளர்கள், தங்க நாற்கரண நெடுஞ்சாலைகள் நாலுவழிச் சாலைகளுக்கு கோடி கோடியாய் வாரியிறைப்பது ஏன் என்பதை ஒட்டுண்ணித்தனத்தின் புதிய பரிமாணம் கட்டுரை தெளிவுபடுத்தியது. அமெரிக்கா சொர்க்கபுரி அல்ல் ஏழைகளும் பணக்காரர்களும் கொண்ட வர்க்க முரண்பாடு நிலவும் நாடு என்பதையும், அமெரிக்க ஆட்சியாளர்களின் கொடூர முகத்தையும் கத்ரீனா பற்றிய கட்டுரை படம் பிடித்துக் காட்டியது. மார்க்கிய லெனினிய இயக்கத்தில், பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்துள்ள புதிய ஜனநாயகத்துக்கு எமது புரட்சிகர வாழ்த்துக்கள்!

வாசகர் வட்டம், திருச்சி

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது