Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனியொரு அசோக் தனிப்பட்ட சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். அரசியல் ரீதியாக எனக்கு பதிலளிக்க முடியாத நிலையில், தனிப்புட்ட சில குற்றச்சாட்டுகளை வைப்பதைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை. இதுவே அவர்களின் அரசியலாகிப் போன நிலையில், இந்த தனிநபர் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பது அவசியமாகி விடுகின்றது. இதை சொல்லித்தான், அவர்கள் இன்று எமக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.

குற்றச்சாட்டு 1

"இலங்கை இனப்பிரச்சனை கூர்மையடைந்து ஆயுதப்போராட்ட வடிவம் கொண்ட 1983களில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள். நாங்கள் மக்களோடும் போராட்ட உணர்வுகளோடும் ஒன்றுகலந்து இலங்கை பேரினவாத அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை பார்த்து உங்கள் சொந்த வாழ்க்கையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டீர்கள். அப்போதைய எங்கள் அனைவரதும் அரசியல் வழிமுறைகள் வேற்றுமைகளை தவறுகளையும் உள்ளடக்கியது என்பதற்கு அப்பால் சமூக உணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தையே தமது வாழ்வு முறையாக வரித்துக்கொண்டார்கள்."

இப்படி வரும் குற்றச்சாட்டுகளை இரண்டு தளத்தில் நாங்கள் அணுகலாம்.

1.வாழ்வுக்காக உழைப்பது தவறா?

2.இவர் குறிப்பிட்ட அந்தக் காலத்தில் நான் அப்படி இருந்தேனா?



எந்த ஒரு மனிதனும் வாழ்வுக்காக உழைத்து வாழ்வது மிகச்சரியானது. உழைத்து வாழ்வதை மறுத்து, அதை ஒரு குற்றச்சாட்டாக வைப்பது அபத்தமானது.

இவர் குறிப்பிட்ட 1983 இல்; சீமெந்து தொழிற்சாலையில் நான் வேலை செய்திருக்கவில்லை. அதே 1983ம் ஆண்டும் நான் என்.எல்.எவ்.ரி அமைப்பின் மத்திய குழு உறுப்பினர். என்.எல்.எவ்.ரி அமைப்பின் மத்திய குழு உறுப்பினரான நான், 1980-1981 இல்  என்.எல்.எவ்.ரி அமைப்பாக மாறிய, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி அமைப்பில் இணைந்து இருந்தேன். 1980-1981-1982 காலத்தில் சீமெந்து தொழிற்சாலையில் ஒரு கட்டிடத் கூலித் தொழிலாளியாகவே, இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்பட்டேன். எனது தந்தை, எனது தம்பி உட்பட இந்தக் கூலி வேலைக்கு சேர்ந்தோம். நாம் செய்து வந்த விவசாயம் ஒரு நேர உணவுக்கே சோறு போடாத நிலையில், புதிதாக கட்டிய சீமெந்து ஆலையில் கூலிக்கு போக தீர்மானித்தோம். அப்படித்தான் நாங்கள் வேலை செய்தோம். இது தவறா? இது குற்றமா?

இக்காலத்தில் எனது தம்பி மூலம், விசுவானந்ததேவன் என்னைத் தேடிவந்தார். கம்யூனிசம் மீது இருந்த பற்றை, எனது தம்பி மூலம் அறிந்து என்னை விசுவானந்த தேவன் சந்தித்தார். இதன் பின் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினார். அப்போது அவர் அத்தொழிற்சாலையில் எஞ்சினியராக வேலை செய்தார். நாங்கள் சீமெந்து ஆலையில் தொழிற்சங்கத்தைக் கட்டத்தொடங்கினோம். இதுதான் எனது அரசியலின் முதல்காலடி கூட.

சட்ட விரோதமாகவே தொழிற்சங்கத்தையே கட்டினோம்;. இதுதான் அங்கிருந்த நிலைமை.  இரண்டு துண்டுப் பிரசுரங்களை அடுத்தடுத்து வெளியிட்டோம். இதை அடுத்து அதை வெளியிட்டவர்களைக் கைது செய்ய, பொலிசார் வலைவிரித்துத் தேடினர். ஆனால் கண்டு பிடிக்கப்படவில்லை. தொழிற்சாலை நிர்வாகம் சந்தேகத்தின் பெயரில் இருவரை வேலை நீக்கம் செய்தது. அதில் ஒருவர் விசுவானந்ததேவன். ஆனால் நாங்கள் தொடர்ந்து இயங்கினோம். இக்காலத்தில் எனக்கும் நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை  அடுத்து, நான் 1982 இல் வேலையை விட வேண்டி ஏற்பட்டது. தொடர்ந்து சீமெந்து தொழிற்சாலை உறுப்பினர்கள் இயங்கினர். நான் அமைப்பில் இயங்கத் தொடங்கினேன். இக்காலத்தில் மகாஜனா பாடசாலையில் நடந்த ஊழலுக்கு எதிராக கொடுத்த துண்டுப்பிரசுரம், சிலரை பொலிஸ் தேடுமளவுக்கு வைத்தது. இப்படி தமிழ் தேசியத்துக்கு வெளியில், மக்களின் அன்றாட வாழ்வியல் கோரிக்கைகளுடன் பலதளத்தில் நாம் போராடினோம். இப்படி என்னைச் சுற்றி, எம் தோழர்களைச் சுற்றி பல போராட்டங்கள் இருக்க, அதை அசோக் இழிவுபடுத்தி அவதூறும் பொய்யும் புனைவது இன்று இனியொருவின் அரசியலாகிப்போனது. 

குற்றச்சாட்டு 2

"நண்பர் இராயகரன் உங்களுடைய புகலிட வாழ்வு 25வருடங்களுக்கு மேலாகிவிட்டது என நினைக்கிறேன்." என்கின்றார். 25 வருடமென்றால், 1984 இல் நான் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கவேண்டும்;. இப்படி அவதூறு செய்வது, அங்கு மக்களுக்காக மக்களுடன் நாம் நடத்திய போராட்டத்தை மறுப்பதற்காகத்தான். 1989ம் ஆண்டே நான் நாட்டை விட்டு வெறியேறினேன். இதற்கு முந்தைய காலத்தில் மக்களுக்காக மக்களுடன் நின்று நடத்திய போராட்டத்தில் எமது பங்கும் ஒத்துழைப்பும் தனித்துவமானது. இதை மறுக்கவே முன் கூட்டியே நாட்டைவிட்டு துரத்திவிடுகின்றனர்.

குற்றச்சாட்டு 3

"எங்களுடைய இந்த ஒவ்வொரு செயல்பாட்டையும் கொச்சைத்தனமாக விமர்சித்தே வந்துள்ளீர்கள். உங்களால் மற்றவர்கள் செய்யும் சமூக அக்கறை கொண்ட எந்த நிகழ்வையும் வரவேற்கும் ஆதரிக்கும் மன பக்குவம் கொஞ்சம்கூட உங்களிடம் இருப்பதில்லை. வஞ்சகமும் காழ்ப்புணர்ச்சியுமே உங்களிடம் எங்கள் தொடர்பாக குடிகொண்டுள்ளது. ஏன் இந்த மன நிலை உங்களுக்கு?."

இப்படி குற்றச்சாட்டை முன்வைக்கும் நீங்கள், எந்த அரசியலை முன்வைத்தீர்கள்? சரி மக்களுக்காக என்ன செய்தீர்கள்? "சமூக அக்கறை கொண்டு" செயல் மூலம் மக்களுக்கு சொன்னது தான் என்ன? செய்தது தான் என்ன? அதன் சமூக விளைவைக் காட்டுங்கள். ஒரு அரசியல் விமர்சன முறைமையைக் காட்டுங்கள். இலக்கியச் சந்திப்பு முதல் அனைத்தும்  சாதித்தது என்ன? அது சொன்னது என்ன?

15 முதல் 20 வருடமாக புலியல்லாத புலத்து குழுக்கள், எந்த மக்கள் அரசியலைத்தான் முன்வைத்தது? அதில் பெரும்பான்மை, இன்று இலங்கை அரசுடன் நிற்கின்றது. எப்படி? சாத்தியமானது!? அதை "கொச்சையாக" என்று கூறும் நீங்கள், மக்களுக்காக ஆக்கபூர்வமாக முன்வைத்ததுதான் என்ன?  "சமூக அக்கறை கொண்ட எந்த நிகழ்வையும் வரவேற்கும் ஆதரிக்கும் மன பக்குவம் கொஞ்சம்கூட உங்களிடம் இருப்பதில்லை. " என்கின்றீர்கள். எதை அப்படி குறிப்பிடுகின்றீர்கள். அப்படி ஆக்கபூர்வமாக இருக்கும் என்று கருதி நாம் ஓத்துழைத்தவை கூட, தவறானதாகவே போனதைப் பார்க்கின்றோம்;. இந்த வகையில் நாங்கள் இதில் தவறு இழைத்தோம்.

இன்று மிகத்தெளிவாக தெரிகின்றது, எம் விமர்சனம் மிகச் சரியானதாக இருந்திருக்கின்றது என்பது தான்.

தொடரும்

பி.இரயாகரன்
22.03.2010

12.புனிதத்தை கட்டமைக்க, இனியொரு தன்னை மூடிமறைக்கின்றது. (எதிர்புரட்சி அரசியல் பாகம் 12)


11.றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)


10.நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)


9.சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)


8.கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

7.சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


6.பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


5.நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)


4.வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)


3தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் "நேர்மை" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)

2.அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)


1.எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது