நிறைவேறாத கனவு
என்னவாகிப் போகிறது?

வெயிலில் காய்ந்து சுருங்கும்
திராட்சையைப் போல்
உலர்ந்து போகிறதா?

அல்லது
ஒரு புண்ணைப் போல
சீழ்பிடித்துப்
பின் மறையுமோ?
கெட்டுப்போன
மாமிசத்தைப் போல
நாற்றமடிக்குமோ?

அல்லது
பாகு நிறைந்த
இனிப்பைப் போல்
சர்க்கரை பூத்துப் போகுமோ?

ஒருவேளை
கனமான ஒரு சுமை போல
தளர்ந்து
தொங்கிப் போய்விடும்
போலிருக்கிறது!

அல்லது
கனவு
வெடிக்குமா?

-லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ், அமெரிக்கா
தமிழாக்கம்: இந்திரன்,
கவிதை இடம் பெற்றுள்ள நூல்: “அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்”
புதிய கலாச்சாரம், நவம்பர்’ 2000.

 

http://www.vinavu.com/2009/09/19/saturday-poems-5/