Language Selection

பி.இரயாகரன் - சமர்

வெள்ளாளிய புலித் தேசியத்தை முன்னிறுத்தும் தமிழகத்து சங்கிகளும் (ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களையல்ல – ஓடுக்கும் தமிழனை), புலிப் பணத்தை தமதாக்கிய புலத்துப் புலிகளும், பிரிட்டிஸ் நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அளவுக்கு, ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு எந்த வித நன்மையுமில்லை.


20வது திருத்தச் சட்ட மூலம் சட்டமாகிவிட்டது. இதன் மூலம் அதிக அதிகாரங்களைக்  கொண்ட ஒரு நபர் நாட்டை ஆளப்போகின்றார். இந்தச் சர்வாதிகாரம் மூலம் நாட்டில் ஜனநாயகமும், நீதியும் கொண்ட, மகிழ்ச்சியான ஒரு நாட்டை உருவாக்கப் போவதாக ஆட்சியாளர்கள் பிரகடனம் செய்கின்றனர்.


தில்லையில் ஒடுக்கப்பட்ட தமிழில் தேவாரம் பாடுவதை தடுத்து நிறுத்தும் பார்ப்பனிய சமஸ்கிருதம். கிளிநொச்சியில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவன் தமிழில் தேவாரம் பாடுவதை தடுத்து நிறுத்துகின்றது வெள்ளாளியம்.

ஈழத்து வெள்ளாளியத் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி - அதை அரசியல் ரீதியாக பாதுகாக்கும் திருமுருகன் காந்தியின் (மே 17யின்) அரசியல், பார்ப்பனியமல்லாது வேறு எதுவாகவும் இருக்க முடியாது. வெள்ளாளியம் என்பது பார்ப்பனியத்தின் மற்றுமொரு முகமே. அது, தானல்லாத அனைத்தையும் "துரோகி" என்று கூறும், அதிகாரம் இருந்தால் கொல்லும்.

பார்ப்பனிய சங்கிகள் எப்படி அரசியலை அறிவுபூர்வமாக விவாதிக்க முடியாது மொட்டையாக "இந்து விரோதி", "தேச விரோதி".. என்று தங்கள் இந்து பாசிச மொழியில் கூறுகின்றனரோ அப்படியேதான், இனவாதம் பேசும் தமிழ் சங்கிகள் "தமிழினத் துரோகி" என்று தங்கள் இனவாத தமிழ் பாசிச மொழியில் புலம்புகின்றனர். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

மாநில அமைப்புக் கமிட்டியில் நடப்பது, கீழ் இருந்து மேலாக, மேல் இருந்து கீழான விவாதமல்ல. மாறாக மேல் இருந்து கீழாக முடிவுகளை முன்நகர்த்தும் நபர்களுக்கு இடையிலான - அதிகாரத்துக்கான முரண்பாடுகளே.

மறுபக்கம் தலைமை மட்டத்தில் நடந்த ஊழல்கள் அம்பலமாகி இருக்கின்றது. முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கட்சி அணிகள், அரசியலற்ற வன்மங்களை எதிர்தரப்பின் மீது கொட்டுவதுடன் - தனிநபர்களின் பிறப்பிலான சாதியை முன்னிறுத்தி வசைபாடுவதே அரசியலாக அரங்கேறுகின்றது.

தமிழக அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய இயக்கங்களே!, இக்கருத்துகளை முன்னிறுத்தும் தனிநபர்களே!!

நீங்கள் புலிகளையும், இனவாத வெள்ளாளிய தமிழ் தேசியத்தையும் ஆதரிக்கின்ற, கொண்டாடுகின்ற அரசியலின் சாரம் என்ன?

வரலாற்றைப் புரட்டிப் போட்டால் வன்முறையும் – வெள்ளாளியத் தமிழ் தேசியத்தின் பெயரில் ஒடுக்கிய வக்கிரமுமே, வரலாறாக இருப்பதைக் காணமுடியும். அமைதிவழி, ஜனநாயகவழி போராட்டமெல்லாம் - வன்முறை அடிப்படைகள் மீதுதான் நடந்தேறுகின்றது.

ஜனநாயகம் இன்று நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு காரணம், தனிநபர் சர்வாதிகாரம் மூலம் தீர்வைக்; காணமுடியும் என்கின்றனர். மனித வரலாற்றையும், அதில் மனித அவலத்தையும் கற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

முன்னாள் வடமாகாண ஆளுநரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், தொடர்ச்சியாக இலங்கையின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவது குறித்து பேசி வருகின்றார். அரசு அவரை பாராளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் ஊடாக கொண்டு வந்த நோக்கம் எது

எழுதப்பட்ட, எழுதப்படும் வரலாறுகளில் அரசியலை நீக்கம் செய்துவிட்டு, திரிக்கப்பட்ட வரலாற்றைக் கட்டமைக்கின்றனர். ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோர் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை காண்பதுமில்லை, கூறுவதுமில்லை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE