இது ருசியாவுக்குரியதும், லெனினிய காலத்துக்குரியதுமா சுயநிர்ணயம்? சுயநிர்ணயத்தை மறுப்பவர்கள் மத்தியில், இப்படியான தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த வாதம் சரியானதா?
லெனின் தேசிய இயக்கம் தோன்றுவதற்கான அரசியல் அடிப்படையை "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" என்ற நூலில் எடுத்துக் காட்டுகின்றார். "உலகமுழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றிகொள்ளும் காலகட்டம் தேசீய இயக்கத்துடன் இணைந்துள்ளது" என்றார். மேலும் அவர் உலகம் முழுவதும், அதாவது "பூர்ஷ்வா ஐனநாயகம்" உருவாகாத நாடுகளுக்கு பொருந்தும் என்று கூறினார். இந்த வகையில் "எல்லாத் தேசீய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வது - ஏனென்றால் பூர்ஷ்வா ஐனநாயகச் சீரமைப்பு இன்னும் முற்றப்பெறவில்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகமானது முரண்பாடற்ற முறையில், தீவிரமாக, மனப்பூர்வமாக தேசீய இனங்களுக்கு சம உரிமைக்காக போராடுகின்றது." என்றார். இந்த வகையில் "ருசியாவில் தேசீய இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல. அது இந்த நாட்டுக்கு மட்டுமே உரித்தான அம்சமும் அல்ல." என்றார். இந்த அடிப்படையில் இன்று நாம் ஆராய வேண்டும். லெனினிய காலத்துக்குரியது அல்ல சுயநிர்ணயம். முதலாளித்துவ (பூர்ஷ்சுவா) ஐனநாயகம் எங்கெல்லாம் இன்னும் முற்றுப்பெறவில்லையோ, அங்கெல்லாம் சுயநிர்ணயம் பொருந்தும். சுயநிர்ணயம் காலவதியாவதற்கு