பி.இரயாகரன் - சமர்

இது ருசியாவுக்குரியதும், லெனினிய காலத்துக்குரியதுமா சுயநிர்ணயம்? சுயநிர்ணயத்தை மறுப்பவர்கள் மத்தியில், இப்படியான தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த வாதம் சரியானதா?

லெனின் தேசிய இயக்கம் தோன்றுவதற்கான அரசியல் அடிப்படையை "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" என்ற நூலில் எடுத்துக் காட்டுகின்றார். "உலகமுழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றிகொள்ளும் காலகட்டம் தேசீய இயக்கத்துடன் இணைந்துள்ளது" என்றார். மேலும் அவர் உலகம் முழுவதும், அதாவது "பூர்ஷ்வா ஐனநாயகம்" உருவாகாத நாடுகளுக்கு பொருந்தும் என்று கூறினார். இந்த வகையில் "எல்லாத் தேசீய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வது - ஏனென்றால் பூர்ஷ்வா ஐனநாயகச் சீரமைப்பு இன்னும் முற்றப்பெறவில்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகமானது முரண்பாடற்ற முறையில், தீவிரமாக, மனப்பூர்வமாக தேசீய இனங்களுக்கு சம உரிமைக்காக போராடுகின்றது." என்றார். இந்த வகையில் "ருசியாவில் தேசீய இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல. அது இந்த நாட்டுக்கு மட்டுமே உரித்தான அம்சமும் அல்ல." என்றார். இந்த அடிப்படையில் இன்று நாம் ஆராய வேண்டும். லெனினிய காலத்துக்குரியது அல்ல சுயநிர்ணயம். முதலாளித்துவ (பூர்ஷ்சுவா) ஐனநாயகம் எங்கெல்லாம் இன்னும் முற்றுப்பெறவில்லையோ, அங்கெல்லாம் சுயநிர்ணயம் பொருந்தும். சுயநிர்ணயம் காலவதியாவதற்கு

மேலும் படிக்க: லெனினிய காலத்துக்குரிய ஒன்றா சுயநிர்ணயம்!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 3)

நிலவும் இன முரண்பாட்டைப் பயன்படுத்தாது, அதற்கான தீர்வை முன்வைக்கும் சுயநிர்ணயத்தையே ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் என்ற வாதம், மார்க்சிய வர்க்க அரசியல் உள்ளடக்கத்தில் இருந்து விலகிச் செல்வதாகும். இதன் அரசியல் அர்த்தம் இனமுரண்பாட்டை நியாயப்படுத்தும் கோட்பாடாக சுயநிர்ணயத்தைக் காட்டி, இறுதியில் அதை நிராகரித்து விடுவதாகும்.

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் எழும் தேசியம் பாட்டாளி வர்க்க கோரிக்கை அல்ல, மாறாக முதலாளித்துவக் கோரிக்கையாகும். அதேநேரம் தேசியம் ஜனநாயகக் கோரிக்கையே ஒழிய, ஏகாதிபத்தியக் (நலன் சார்ந்த) கோரிக்கை அல்ல. இந்த வகையில் இது ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அரசியல் கோரிக்கை. இதை நாம் அரசியல்ரீதியாக, முரணற்ற வகையில் புரிந்து கொள்ளவேண்டும். இதில் பாட்டாளி வர்க்கத்துக்கு எந்தவிதமான அரசியல்ரீதியான குழப்பம் இருக்கக் கூடாது.

மேலும் படிக்க: இனமுரண்பாட்டையா, சுயநிர்ணயத்தையா ஏகாதிபத்தியம் பயன்படுத்தும்? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 2)

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதில் தடையாக, தொடர்ந்து இனமுரண்பாடும் காணப்படுகின்றது. இனங்களுக்கு இடையில் இனமுரண்பாட்டை தூண்டுவதன் மூலம் தான், ஆளும் வர்க்கங்கள் மக்களை பிரித்தாளுகின்றது. இந்த வகையில் இனங்களுக்கு இடையில் இனவொற்றுமையை ஏற்படுத்துவதை, தன் சொந்த வர்க்கநலனில் இருந்து ஆளும் வர்க்கங்கள் செய்யப் போவதில்லை. இனவொற்றுமையை தடுத்து நிறுத்தும். இது தான் இன்றைய அரசியல் எதார்த்தம்.

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை நடத்த இன ஐக்கியம் அவசியமானது. இந்த ஐக்கியம் என்பது கூட, முன்கூட்டியே ஐக்கியமும் அதன் பின் வர்க்கப்போராட்டமும் என்பதல்ல. மாறாக இரண்டும் பிரிக்க முடியாததும், ஒருங்கிணைந்ததுமான அரசியல் கூறாகும். ஒருங்கிணைந்தபடி முன்னெடுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாடு தான் சுயநிர்ணயம். இதற்கு வேறு அரசியல் விளக்கம் கிடையாது. பாட்டாளி வர்க்கமல்லாத (ஆளும்) வர்க்கங்கள் இந்தக் கோட்பாடு தொடர்பாக கொண்டுள்ள எந்த முரணான நிலைப்பாட்டுக்கும், அதன் திரிபுக்கும் எதிராக, பாட்டாளி வர்க்கம் சுயநிர்ணயத்தை சரியாக முன்னிறுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறன்றி வேறுவழியில் வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. இனவொடுக்குமுறைக்கு எதிரான இன ஐக்கியம் என்பது, பாட்டாளி வர்க்க அதிகாரத்தை பெறுவதற்கான அரசியல் போராட்டம். சுயநிர்ணயம் அதற்கு வழிகாட்டுகின்றது.

மேலும் படிக்க: சுயநிர்ணய உரிமை ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் கோட்பாடா!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 1)

இன்று எதிர்க்கருத்துகளும், கோட்பாடுகளும், முரண்பாடுகளை மறுக்கும் தூய்மைவாதம் சார்ந்த வரட்டுவாதமாக முன்தள்ளப்படுகின்றது. இதேபோல் அவதூறுகள் என்பது இட்டுக்கட்டப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒழுக்கம் சார்ந்த தூய்மைவாதமாகவும் திணிக்கப்படுகின்றது. இன்று பலமுனையில் பரவலாக இவை இரண்டும் சோடி சேர்ந்து, மக்கள் போராட்டங்களை மறுக்கும் பொது அரசியலாக பயணிக்க முனைகின்றது.

தமிழ் - சிங்கள - முஸ்லிம் - மலையக மக்கள் இணைந்து போராடுவது என்பது சாத்தியமற்றதா!? சாத்தியமற்றதாக்க இவர்கள் முனைகின்றனர். இனவொற்றுமையை கீழ் இருந்து கட்டியமைப்பதற்கான செயல்தந்திரம் என்பது, இனவொடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவது மூலம் தான் சாத்தியம். வெறும் கோட்பாடுகள், தத்துவங்கள் மூலம் இது சாத்தியமில்லை. கீழ் இருந்து கட்டியமைக்கக் கூடிய மக்கள் போராட்டத்தை, தங்கள் கோட்பாட்டு முரண்பாடுகள் கொண்டு எதிர்ப்பதும், எதிராக முன்னிறுத்துவதும் மக்கள்விரோத அரசியலாகும். கோட்பாடுகள், தத்துவங்கள் மக்கள் மீதான ஒடுக்குமுறையிலான போராட்டத்தை எதிர்ப்பதற்காக அல்ல, அதை வழிநடத்துவற்காகத் தான். அதேநேரம் கோட்பாடுகள் தத்துவங்கள் உருவாக்கும் செயல்தந்திர முரண்பாடுகள், போராட்டங்களை எதிர்ப்பதற்கு பதில் குறைந்தபட்ச ஐக்கியத்தை செயல்பூர்வமான மக்கள் போராட்டங்கள் மேல் கோருகின்றது. இதில் ஊன்றி நின்று கொண்டுதான், கோட்பாடு சார்ந்து முரண்பாடுகளை நடைமுறை மூலம் தீர்க்க முனைய வேண்டும். இதுதான் மக்கள் அரசியல். இன்று இலங்கையில் இனவொடுக்குமுறைக்கு எதிராக, நடைமுறையில் போராடுவது தான் முதன்மையான மையமான அரசியல்.

மேலும் படிக்க: ஐக்கியமும் போராட்டமும்

கட்சித் திட்டத்தில் இருக்ககூடிய சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி, இனவொடுக்குமுறைக்கு எதிரான வெகுஞன அமைப்பின் குறைந்தபட்சத் திட்டத்தை மறுப்பது மக்கள் நலன் சார்ந்த அரசியலல்ல. ஒரு கட்சியிடம் சுயநிர்ணயத்தை முன்வைக்குமாறு கோருவதற்கு உள்ள உரிமை, அக்கட்சி இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை மறுப்பதாகவோ எதிர்ப்பதாகவோ இருக்கக் கூடாது. இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராடியபடி, சுயநிர்ணயத்தை கட்சித் திட்டத்தில் முன்வைக்குமாறு கோரவேண்டும். இதுதான் மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனையிலான வழிமுறை.

இன்று இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான சமவுரிமைக்கான குறைந்தபட்சத் திட்டத்தை மறுக்க, சுயநிர்ணயத்தை முன்னிறுத்துவது சரியானதா!? சுயநிர்ணயத்தை முன்வைக்காதவர்கள், இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மூலம் "ஏமாற்றி" விடுவார்கள் என்ற தர்க்கம் சரியானதா? சரி சுயநிர்ணயத்தை முன்வைத்தால், இந்த "ஏமாற்றம்" எப்படி இல்லாது போகும்!?

மேலும் படிக்க: இனவொடுக்குமுறைக்கு எதிரான குறைந்தபட்சத் திட்டத்தை மறுக்க முடியுமா?

ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சிகள், இந்திய ஆதரவு போன்றவை மக்கள் சார்ந்த சில கூறுகளைச் சார்ந்திருப்பதால் அவை மக்கள் சார்ந்ததாகிவிடுமா? இவை இலங்கை அரசுக்கு முரண்பாடாக இருப்பதால், இது முழுமையான உண்மையாகிவிடுமா?

மக்களைப் பார்வையாளராக்கிய கடந்தகால அரசியல், அன்னிய சக்திகளால் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று வழிகாட்டிய எமது கடந்தகாலப் போக்கு, சமூகத்தை மந்தையாக்கி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சி, இந்திய ஆதரவு மீது குருட்டுத்தனமாக அவற்றை நம்பிப் பின்பற்றுகின்ற, அதை அரசியல் வழிகாட்டுகின்ற பின்புலத்தில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். உண்மைகள் புதைக்கப்படுகின்றது. நீதி மறுக்கப்படுகின்றது. தங்கள் குறுகிய நோக்கத்துக்கு ஏற்ப இவைகள் உண்மையைப் புதைப்பதில் இருந்து தான் தொடங்குகின்றது. அது என்ன என்பதையும், எதற்காக இவை என்பதையும், தெரிந்து கொள்வதன் மூலம், இந்தச் சதியை, சூழ்ச்சியை நாம் இனம் காணமுடியும்.

மேலும் படிக்க: சில உண்மைகளைச் சார்ந்து கழுத்தை அறுக்கும், சனல் 4 காட்சியும், ஐ.நா.தீர்மானமும்

சுயநிர்ணயம் என்றால் என்ன? சுயநிர்ணயம் ஏன் முன்வைக்கப்படுகின்றது? சுயநிர்ணய கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் உள்ள உறவு என்ன? இது பற்றிய அரசியல் தெளிவின்மை, முடிவுகளை தவறாக எடுக்க வைக்கின்றது. இன்று இனவாதத்துக்கும் இனவொடுக்குமுறைக்கும் எதிரான போராட்டம் அரசியல் வடிவம் பெற்று அரசியல்ரீதியாக சமவுரிமை இயக்கம் மேலெழுந்து வரும் போது அரசியல் தவறுகள் ஆழமாக பிரதிபலிக்கின்றது. அதேநேரம் ஒவ்வொரு வர்க்கமும், சுயநிர்ணயத்தை தத்தம் வர்க்கநலனில் இருந்து புரிந்துகொள்வதும் முரண்படுவதும் கூட அரசியல் போக்காக மாறிவருகின்றது. சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு, தேசியவாதம் கூட தன்னை மூடிமறைத்துக் கொண்டு முன்னிறுத்த முனைகின்றது.

மேலும் படிக்க: சுயநிர்ணயக் கோட்பாடும் நடைமுறையும்

இனவாதிகள் தங்கள் "காயடிப்பு" அரசியலை பாதுகாக்கும் போராட்டத்தை, சமவுரிமை இயக்கத்துக்கு எதிராகத் தொடங்கி இருக்கின்றனர். சமவுரிமைக்கான பிரச்சாரமும், போராட்டமும் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக, வலதுசாரிய புலி ஆதரவு தளத்தில் இருந்தும் எதிர்வினைகள் வரத்தொடங்கி இருக்கின்றது. இந்த வகையில் "சிங்கள தேசத்தின் பேரினவாத ஆயுதத்துடன் புலம்பெயர் களத்தில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி!" என்று தலைப்பிட்ட கட்டுரை, தொடர்ச்சியாக பல வலதுசாரிய தமிழ்தேசிய இணையங்களில் வெளியாகியுள்ளது. இதில் "சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து இனவாதத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தியல் கத்தியைத் தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படு"வதாக கூறியிருக்கின்றது. சமவுரிமை இயக்கம் "பேரினவாத ஆயுதத்துடன்" செயற்படுவதாகக் கூறி எதிர்க்கத் தொடங்கி இருக்கின்றனர். முதலில் சமவுரிமை இயக்கத்தை எதிர்க்கத் தொடங்கிய இடதுசாரிய தமிழ்தேசியவாதிகளின் எதிர்வினை "சுயநிர்ணயத்தை" மையப்படுத்தியதாக தொடங்கிய போதும், இறுதியில் அது இந்த அமைப்பில் இருக்கக்கூடிய தனிநபர்கள் மீது இட்டுக்கட்டிய அவதூறாக பரிணமித்து இருக்கின்றது. இதே பாணியில் வலதுசாரியம் சற்று வித்தியாசமாக "இந்தப் பாட்டாளி மக்களது கட்சி? புலம்பெயர் நாடுகள் எங்கும் கூட்டங்கள் போடவும், கொடி பிடிக்கவும், கும்பல் சேர்க்கவும், பயணங்கள் செய்யவும், அலுவலகம் அமைக்கவும் குறைவின்றிக் கிடைக்கும் நிதிக்கான நிதி மூலங்களும் ஆச்சரியமானதே" என்று இட்டுகட்டிய அவதூறுகளை செய்ய முனைந்திருக்கின்றது. பேரினவாதத்துக்கு எதிராக போராட, பேரினவாதமே பணம் தருவதாக மறைமுகமாக கூற முற்படுகின்றது. கடந்தகாலத்தில் மற்றவன் உழைப்பை சுரண்டி போராட்டம் நடத்திய கூட்டம், சொந்த உழைப்பு சார்ந்து போராடுவதை காணமுடியாது. அது அனைத்தையும் தன்னைப்போலவும், தன் சொந்த நடத்தையைப் போலவும் காணவும் காட்டவும் முற்படுகின்றது

மேலும் படிக்க: மக்கள் ஒன்றிணைவது "தமிழர்களுக்குக் காயடிக்கும் திட்டமாம்"!

மேற்கு ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சியுடன் முரண்படும் இலங்கைக்கு எதிரான, ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் அரசியல் எடுபிடிகளாக தமிழ்த்தேசியமும், தமிழ் ஊடகங்களும் இயங்குகின்றது. இலங்கை அரசுக்கு எதிராக இன்று பல முனையில் முன்னெடுக்கும் ஏகாதிபத்திய பிரச்சாரங்கள், தமிழ் மக்களின் மீட்புக்கான ஒன்றாக காட்டுகின்ற அரசியலுக்குள், வலதுசாரி தேசியம் முதல் இடதுசாரிய தேசியம் வரை புரளுகின்றனர். இதைத் தாண்டி மக்களைச் சார்ந்த எதையும் முன்வைப்பதில்லை. மக்களைச் சார்ந்து போராடும் அரசியலை எதிர்க்கும் இவர்கள், மாற்றாக மக்கள் அரசியல் எதையும் நடைமுறையுடன் முன்வைப்பதுமில்லை. இந்த அரசியல் பின்புலத்தில் தான், கொல்லப்பட்ட பிரபாகரனின் மகனின் படங்களை புதிதாக வெளியிட்டு செய்திகளையும், போர்க்குற்றங்கள் பற்றியும் பேசுகின்றனர்.

மேலும் படிக்க: கொல்லப்பட்ட பிரபாகரனின் மகனின் புதிய படங்களுடன் தொடரும் ஏகாதிபத்திய பிரச்சாரங்கள்

இனவாதம் மூலம் மக்களைப் பிரித்தாண்ட அரசு, புலிக்கு பின் மக்களை மதரீதியாகப் பிளக்க உருவாக்கப்பட்டது தான் "ஹலால்" ஒழிப்பு. இன்று மத மோதலை திட்டமிட்டு தூண்டி வருகின்றது. மதம் சார்ந்த "ஹலால்" குறியீடு, வர்த்தகம் சார்ந்த குறியீடாக சந்தைப் பொருளாக மாறி இருக்கின்ற சூழலைக் கொண்டு மோதலை உருவாக்குகின்றது. இதன் மூலம் அரசு மக்களை பிளக்கத் தொடங்கி இருக்கின்றது. மக்களை ஒற்றுமையுடன் வாழ்வதை தகர்ப்பதன் மூலம் தான், மக்கள்விரோத அரசாக தொடர்ந்து இருக்கமுடியும் என்ற உண்மையை இலங்கையில் "ஹலால்" ஒழிபபு கோசத்தின் பின் காணமுடிகின்றது

மேலும் படிக்க: கிரிஸ் மனிதன் முதல் ஹலால் ஒழிப்பு வரை

இலங்கை பற்றி மேற்கு ஏகாதிபத்திய அக்கறையும், அது சார்ந்து இன்று வெளிப்படும் மக்கள் விரோத அரசியல், தன்னை மாற்று அரசியலாக முன்னிறுத்தி வருகின்றது. இன்று இலங்கை அரசுக்கு எதிரான மக்கள் திரள் போராட்ட அமைப்பை உருவாக்குவதற்குப் பதில், ஏகாதிபத்திய நலன் சார்ந்த அதன் அரசியலை முன்தள்ளுகின்றனர். இன்று அன்றாட செய்திகள் முதல் கட்டுரைகள் வரை ஏகாதிபத்தியம் நலன் சார்ந்த விடையங்களை தங்கள் மையச் செய்தியாக்குவதுடன், அதன் நோக்கம் மக்களுக்கானதாக காட்டுகின்றனர். அதன் மக்கள் விரோதத்தைக் கண்டுகொள்ளாத கள்ள மௌனம் மூலம், இதை நம்பும்படி மக்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

இதற்கமைவாக இலங்கை ஆளும் தரப்பு தொடர்ந்து செய்த செய்து கொண்டு இருக்கின்ற மனிதவிரோத குற்றங்களில் இருந்து, தன்னை தற்காத்துக்கொள்ள நாட்டை ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் மேலும் மேலும் அடகுவைத்து வருகின்றனர். ஏகாதிபத்திய முரண்பாட்டைக் கொண்டும், பிராந்திய நாடுகளின் முரண்பாட்டைக் கொண்டும், நாட்டை அன்னியருக்கு அடிமைப்படுத்தி வருகின்றனர். இதனால் உள்நாட்டு விவகாரங்கள், இன்று சர்வதேச விவகாரங்களாக மாறி வருகின்றது.

மேலும் படிக்க: ஜே.வி.பியின் போர்க்குற்றம் முதல் ஏகாதிபத்தியம் அக்கறைப்படும் போர்க்குற்றம் வரை

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More