தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை, திருவண்ணாமலை அருணாச்லேஸ்வரர் கோயிலில் ஜவான், திருமஞ்னேம், நி@வத்தியம், ”யம்பாகி, ஓதுவார், யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்குப் பணியாளர்களை நியமிப்பதற்கான @வலைவாசூப்பு அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிட்டது. அவவேலைவாசூப்பு அறிவிப்பில் திருமஞ்னேம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கும் தகுதிபடைத்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பணியிடங்கள் சாமி சிலைகளைத்திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும். பார்ப்பனர்கள் அல்லாத வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால், "புனிதம்' கெட்டுவிடும் என்ற பார்ப்பன சாதித் திமிரையும் இந்துக் கோயில்களில் நிலவிவரும் தீண்டாமையையும் உறுதி செய்வதுதான் இந்தக் குறிப்பின் நோக்கமாகும்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.அரங்கநாதன், ""திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையைத் தூண்டுவதாகவும், ஆலயத் தீண்டாமையைக்கடைப்பிடிப்பதாகவும், அரசியல் சாசனச் சட்டத்தின் 14, 16 மற்றும் 17 ஆகிய பிரிவுகளுக்கு எதிராகவும் இருப்பதால், அந்தப் பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்ற அரசின் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார். இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு விசாரித்த உயர்நீதிமன்றம், "இத்தகைய பணிகளைப் பார்ப்பனர்கள்தான் செய்யவேண்டும் என்ற பழக்கவழக்கத்தை அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 13 அங்கீகரிக்கிறது. இதன் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்குத் தடை விதித்துள்ளது' என்ற காரணங்களைக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.