இனிச் சருகுகள் காலம்
குடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர்
படைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார்
காடையர் இழிசெயல் வெறியொடு
தெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.;….
வாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல்
சேற்றினில் உருண்டு நாற்ரமெடுக்க வருக வருக…
வறுமையும் வயிறெரியும் நினைவுக்கொதிப்பும்
வெறுமையில் தவிக்கும் விலங்கிடை சிறையும்
பொறுமையை சீண்டும் போலி உறுதிகளும்
சிறுமையில் சிக்கவே தேர்தல் கரும்பென நிமிருது
இனவெறித்தீக்கு பலியிடப் புலியில்லை
புகலிடச்சருகுகள் பணமூடைகாவி – அரசொடுகுலாவும்
கழுகுகள் கவ்விய குஞ்சுகள் வாழ்வை
காப்பவர் எவருளர் – எம் தெருவெலாம் வெறிநாய்கள்….
மல்வத்த பீடமும் அரசியல் சாசனமும்
தேரரின் வலுவே – தேசத்தை சிதைக்கும்
போரினை வளர்க்கப் புத்தரை தொழுதனர் – சீறிடும் ரணிலே
தமிழின வேரினை கிளறிய பெருநரி
ஊளையிடுக – ஒன்றிடாது அழித்தே வாக்கினைபெருக்குக.
உழுதுண்டும் பொழுதுபுலர எழுமொலி
விழுந்தெழுந்தோடி உழைப்புக்காய – வெறுவயிறு
காய்ந்து குழறும் – வீட்டினில் குழந்தைபோல்
வாட்டிடும் வறுமைக்குப் புத்தரும் ஜேசுவும்
அல்லாவும் ஆயிரம் இந்துக்கடவுளும் தூசு….