எழுக தலைமுறையே

நீங்கள் கொலைக்களத்தை கடந்துவந்தவர்கள்

நித்தம் வலியைச் சுமப்பவர்கள்

வதையோடு வாழ்பவர்கள்

விடுதலைக்காய் பல்லாயிரமாய் வித்தாகிப்போனவர்கள்

நினைவுகள் இடித்துநொருக்கப்படுகிறது

நெஞ்சத்தில் எரியும் நெருப்பை

யாரால் அணைக்கமுடியுமென இடித்துச்சொல்லுவோம்

புலி அழிந்தாலும்

புதிய மக்கள்பாதை திறந்துகிடக்கிறது

சேர்ந்து நடப்போம்

தமிழர் சிங்களவர் முஸ்லீம்

மலையகப்பேதமகற்றிச் சேர்ந்துநடப்போம்

விடியலிற்காய் மாற்று வேறில்லை

சேர்ந்து நடப்போம்

செங்கொடியில் திரழ்வதற்கு உறுதியேற்போம்!!

 

18/05/2012