பீகார் , நிலப்பிரபுத்துவ கொடுகோன்மையும் மேல்சாதி ஆதிக்கவெறியும் கோலோச்சுகின்ற இந்திய மாநிலம்  இராஜபுத்திரர்கள், ப+மிகார்,  குர்மி , யாதவ் போன்ற மேல்சாதி நிலப்பிரபுக்களும் , சாதி ஆதிக்க சக்திகளும் தான் கிராமப்புறங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில்  வைத்து   அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.  இவர்களே தேர்தலில் நின்று வெற்றி பெற்று  எம். எல். ஏ , எம்.பி , மந்திரி பதவிகளை கைப்பற்றிக்  கொள்கின்றனர் அரசு அதிகாரிகள். பொலிசு, ஓட்டுக்கட்சித் தலமை அனைவரும் கைப்பாவைகள் தான்.

இம் மத்திய கால அடக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்த்து  புரட்சிகர இயக்கங்களிலும் , விவசாய சங்கங்களிலும் இணைந்து  போராடும் தாழ்த்தப்பட்டவர்களையும் கூலி-ஏழை விவசாயிகளையும் ஒடுக்குவதற்காகவே  "சேனைகள்"  என்ற பெயரில் சாதிக்கொரு  கொலைப்படைகளை உருவாக்கியுள்ளனர் இந்நிலப்பிரபுக்கள்.

எனவே ஆயுதந்தாங்கிப் படுகொலைகள் புரிந்து வரும் இந்த எதிர்ப்புரட்சிக்கும்பலை எதிர்த்து வரும் நக்சல்பாரிப் புரட்சியாளர்களான  மாவோயிச கம்ய+னிச மையத்தினர்  (எம்.சி..சி)  தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் , நிலப்பிரபுக்களின் நிலங்களையும் , விளைச்சலையும்  கைப்பற்றி மறுவிநியேகம் செய்யவும் , தங்களின் செல்வாக்குள்ள பகுதிகளில் வரிவசூல் செய்யவும் , தங்களின் ஆணைகளை-தீர்ப்புகளை அமுல்படுத்தவும் தற்காப்புக்குளுக்களையும் ,கெரில்லாப்படைகளையும் கட்டி போராடி வருகின்றனர்.

கடந்த  ஜனவரி மாதம் 20 ந் திகதியன்று  மாவோயிச கம்ய+னிச மையத்தின் (எம் .சி .சி)   கெரில்லாக் குழவினைச் சேர்ந்த 200 ற்கு   மதிகமான தோழர்கள் இம் மாநிலத்தின் மீது  தாக்குதலொன்றை நடாத்தினர்.  5 பொலிசார் இத் தாக்குதலின் போது உயிரிழந்ததுடன் பொலீசு  நிலையம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பதினான்கு கைத்துப் பாக்கிகளையும் 1000 சுற்றுக்கான ரவைகளையும்  புரட்சியாளர்கள்  கைப்பற்றிச்சென்றனர்.  தாக்குதல் நடந்த பின்பு  "மாவோயிச கம்ய+னிச மையம்" வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில்  "பொலீசாரைக் கொல்வது  எங்கள்  எண்ணமல்ல  பொலீசுநிலையத்தை  தீக்கிரையாக்குதும் , ஆயுதங்களை கைப்பற்றுவதும்  தான் எங்களது  திட்டம் .  நாங்கள் இன்னும் பல பொலீசாரைக்  கொன்றிருக்கமுடியும்  ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை  நாங்கள் சில பொலீசாரை  பிடித்து  வைத்திருந்து பின்னர் விடுவித்து  விட்டோம்.  நெருக்கடியான கட்டத்திலும்  தற்காப்பிற்காகவும்  தான் நாங்கள் தாக்கவேண்டியுள்ளது"   எனக் குறிப்பிட்டுள்ளனர்.   இவ் உண்மைகளை மழுப்பிவிட்டு  ஆளும் வர்க்கமும் , முதலாளித்துவ பத்திரிகைகளும் மாவோயிச கம்ய+னிச மைய புரட்சியாளர்களை  "வன்முறையாளர்கள்"  என தூற்றி வருகின்றனர்.

ஆனால் டிகாரி பகுதியைச்  சுற்றி வாழும் பெரும்பாலான உழைக்கும்  மக்கள்  இத்தாக்குதலை  ஆதரித்துள்ளனர் . கோன்ச் எனும் கிராமத்தைச்சேர்ந்த  ராம்வதார்   "நாங்கள் ஒருபோதும் எம்.சி . சி  செயல்வீரர்களைக்கண்டு   அஞ்சியதில்லை.   கிரிமினல்கள்  பொலீசுக்காரனாகவோ,  அரசியல்வாதியாகவோ , இல்லை சாதாரண நபராகவோ   எந்தப்போர்வையிலிருந்தாலும்  எம.சி.சி  அக்கிரிமினல்களைக்  கொன்றொழித்து  நன்மை புரிகின்றது"  என வெளிப்படைளாகவே  பத்திரிகைளுக்கு  பேட்டியளித்துள்ளார்.   நக்சல்பாரிப்  புரட்சியாளர்களின்  கீழ்  அணிதிரண்டுள்ள  பீகாரின்  கூலி -ஏழை  விவசாயிகள்  நிலத்திற்காகவும்  சனநாயக  உரிமைகளுக்காகவும்தான்  ஆயுதம்  ஏந்தியுள்ளார்கள்.

இவ்  வர்க்கப் போர்  ஒரு புதிய விடியலுக்கானது . எனவே இது  நிச்சயமாக  ஒரு மாலை  நேர  விருந்தினைப்போல  இருக்கமுடியாது .

நன்றி

தகவல்-புதிய ஜனநாயகம்.