நம்பியதோர் லட்சியத்திற்காய்

போர்க்களத்தில் களமாடி

மடிந்த தியாகங்களே!,

கொடிய போரிலும்--எமைக்

காப்பரென நம்பி…



தேசிய—சர்வதேசத்தின்

சதியாளரால்,

பாசிசத்தின் பயங்கரங்களால்

அகாலமான மானிட சமுத்திரமே!

உங்களுக்கெக்காலும்

மரணமேயில்லை! –

அடங்கிய மனிதத்தின்

அடக்கலுக்கெதிரான – போரின்

தேவையுள்ளவரை

உங்கள் தியாகச்சுடர்

என்றென்றுமெங்கும்

எரிந்த வண்ணமேயிருக்கும்!

உங்களின்

இவ்வொளியில் -- நாம்

விடுதலை காண்போம்!

 


18/05/2012