1 “எல்லா மார்க்சிய வாதிகளையும் மார்க்சிசத்தின் தத்துவ அடிப்படைகளையும் ஆதார வரையறுப்பக்களையும் பாதுகாப்பதற்காக அணிதிரட்டுவதைக் காட்டிலும் முக்கியமானது எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் மார்க்சிசத்தில் பல வகைப்பட்ட” “சகபிரயாணி” களிடையே முதலாளித்துவ செல்வாக்கு பரவியுள்ளதால் எதிரெதிரான திசைகளில் இருந்து இவை திரித்துப் புரட்டப்படுகின்றன. …… பலர் இப்பொழுது தான்முதற் தடைவையாக உண்மையான முறையிலே மார்க்சியத்தைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள். இது சம்பந்தமாக முதலாளித்துவ பத்திரிகைகள் என்றையும் விட அதிகமாக பொய்யான கருத்துக்களை சிருஷ்டித்தும், மிக விரிவாகப் பரப்பியும் வருகின்றன. இந்த நிலைமைகளிலே மார்க்சியவாதிகளின் அணிகளிலே ஏற்படும்  சிதைவு தவிர்க்க முடியாதது என்பதற்குரிய காரணங்களைப் புரிந்து கொள்வதும், இச் சிதைவை எதிர்த்து முரணின்றிப் போராடுவதற்காக அணிகளைத் திரட்டி ஒன்று சேர்ப்பதும் மார்க்சிய வாதிகளுடைய இந் நாளைய கடமையயாகும்.