யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சி சோசலிசமாகவும், முதலாளித்துவமல்லாத புரட்சியாகவும் காட்டப்பட்டது. இதனடிப்படையில் ஸ்ராலின் தூற்றப்பட்டார். ஸ்ராலினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட  சோசலிச சமூக கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நொருக்கப்பட்டன. இந்த முதலாளித்துவ மீட்சியை சர்வதேசிய டிராட்ஸ்கிகள் ஆதரித்து நின்றனர். குருச்சேவ் பதவிக்கு வந்தவுடன் ஸ்ராலின் மறுக்கப்பட்ட நிலையில், சோவியத்யூனியனும், உலக கம்யூனிஸ்ச இயக்கமும்; படிப்படியாக யூகோஸ்லாவிய நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டது.

உலகம் எங்கும் புரட்சிகர போக்குகள் சிதைக்கப்பட்டன. எதிரியை நண்பனாக காட்டுவதும், போற்றுவதும் புதிய விடையமாகியது. குருச்சேவ், டிட்டோ இடையில் ஏகாதிபத்தியத்துடன் யார் அதிகம் கூடிக்குலாவுவது என்பதில் கடுமையான போட்டி நிலவியது. அதேநேரம் தமது முதலாளித்துவ மீட்சிக்கான தங்கள் நோக்கத்தில், தமக்குள் ஒன்றுபட்டு கைகோர்த்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். முதலாளித்துவத்தை மீட்பது எப்படி என்பதில், குருச்சேவ் டிட்டோவின் சீடனானான்;. டிட்டோ கும்பல் உலகம் தழுவிய வகையில் மக்களின் புரட்சிகர போராட்டங்களையும், ஏகாதிபத்திய நாடுகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளான உலக நிகழ்ச்சிகளில், அமெரிக்காவுக்கு சார்பாகவும் அப்பட்டமாக செயல்பட்டது. இதன் போது ஏகாதிபத்திய தலைவர்களுக்கு வெண்சாமரை வீசி, செங்கம்பளம் விரித்து வரவேற்று அவர்களைப் போற்றினர்.

 

1951 இல் ஸ்ராலினை மறுத்த யூகோஸ்லாவியா, கட்சியை வெறும் கழகமாக மாற்றியது. யூகோஸ்லாவிய கட்சிப் பத்திரிகை ஒன்று 1954 இல் எழுதியது ~~ஒட்டு மொத்தமாக சோசலிசத்துக்குள் ~குதித்து| உலகமே சோசலிசமாக மாறிவிட்டது" என்றது. யூகோஸ்லாவிய அரசு வெளியிட்ட நூல் ஒன்றில் "சோசலிசமா முதலாளித்துவமா என்ற பிரச்சனை ஏற்கனவே உலக அளவில் தீர்க்கப்பட்டு விட்டது." என்று எழுதியது. இப்படி கூறியபடி நடந்த முதலாளித்துவ மீட்சியை, டிராட்ஸ்சிகள் ஆதரித்தனர். டிராட்ஸ்;கிய அரசியல் கோட்பாடுகள் இதை தழுவி நின்றன. டிராட்ஸ்கிகள் முதலாளித்துவமல்லாத சோசலிச முனைப்பாக, ஸ்ராலின் மறுப்பாக காட்டி முதலாளித்துவ மீட்சியை அதுவில்லையென மறுத்தனர். ஒட்டு மொத்தத்தில் ஏகாதிபத்தியங்களின் உலகமே, சோசலிசமாக மாறிவிட்டது என்று பெருமையாக பேசிப் போற்றினர். சோசலிசமா, முதலாளித்துவமா என்பது தீர்க்கப்பட்டு விட்டது என்ற வரையறையால், கம்யூனிச இயக்கமே நஞ்சூட்டப்பட்டது. ஸ்ராலினின் பாட்டாளி வர்க்க நிலை இப்படி உயிருடன் கொல்லப்பட்ட போது, ஏகாதிபத்தியங்கள் குதூகலித்தன.

 

உலகளவில் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் நடத்துவதை கொச்சைப்படுத்தினர். பலாத்காரம் மூலம் ஆட்சி அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதைத் தூற்றினர். பலாத்காரப் புரட்சி; "சமுதாய முரண்பாடுகளை தீர்க்கும் வழியில் தேவையற்ற ஒன்றாக ஆகிவருகின்றது" என்று யூகோஸ்லாவியா அறிவித்து, உழைக்கும் மக்களின் முதுகில் குத்தினர். உழைக்கும் மக்களை ஆதரிப்பதாக, அவர்களின் நலனுக்காக போராடுவதாக கூறிக் கொண்ட டிராட்ஸ்கிகள், யூகோஸ்லாவியாவின் இந்த நிலைப்பாட்டை ஆதரித்து நின்றனர். முதலாளித்துவ மீட்சியை மறுத்தனர். முதலாளித்துவ மீட்சி அல்ல இது, ஸ்ராலின் மீதான அதிகாரத்துவ மறுப்பு என்றனர். முதலாளித்துவ மீட்;பு அல்லாத சோசலிச முனைப்பு என்றனர். ஏன் இதை சோசலிசம் என்று கூடச் சொன்னார்கள்.

 

டிட்டோ "அமைதி வழிப் போட்டியின்" மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று அறிவித்தான். முதலாளித்துவ உலகில் நிலவும் சூறையாடும் ஜனநாயகத்தின் நெம்பை தாங்கி நிற்பதன் மூலம், தொழிலாளி வர்க்கம் தனது நலனை அடைய முடியும் என்றான். இதை ஸ்ராலின் மறுத்ததால், ஸ்ராலினை ஒரு கொடுங்கோலன் என்றனர். உலகில் "அரசியல் பொருளாதார ஒருமைப்பாட்டை" உருவாக்குவதே பாட்டாளிவர்க்கத்தின் கடமை என்று டிட்டோ அறிவித்தான். இதற்கு மாறாக ஸ்ராலின் வர்க்க முரண்பாட்டைத் தூண்டி, அரசியல் பொருளாதார ஒருமைப்பாட்டை உலகளவில் தகர்த்த ஒரு அதிகார வெறி கொண்ட சர்வாதிகாரி என்றான். ஸ்ராலினும், ஸ்ராலின் வழிப்பட்ட அரசியலும் துடைத்தெறியப்பட வேண்டும் என்றான்;. இதையே குருசேவ் "அமைதி வழிப் பொருளாதார போட்டியின்" ஒற்றுமையை, ஒத்துழைப்பை முதலாளி வர்க்கத்துடன் நல்க பாட்டாளி வர்க்கத்தைக் கோரினான். இதை எதிர்த்த ஸ்ராலின் நிலைப்பாட்டைக் கொண்ட மார்க்சியவாதிகள் ஈவிரக்கமின்றி ஒழித்துக் கட்டப்பட்டனர். டிராட்ஸ்கிகள் குருச்சேவின் இந்த நிலைப்பாட்டை ஆதரித்தனர். முதலாளித்துவ மீட்பல்ல இது என மறுத்த இவர்கள், குருச்சேவின் அரசியலுக்கு பாய்விரித்தனர். டிட்டோ குருச்சேவின் அரசியல் தந்தையாக டிராட்ஸ்கிகள் தாயாக மாறி, கள்ளக் குழந்தையாக குருச்சேவை பெற்றுப் போட்டனர். ஸ்ராலினை தூற்றுவதில், ஸ்ராலின் அரசியலை புதைப்பதில் குடும்பமாகவே ஒன்றுபட்டு புதைகுழியை வெட்டினர்.

 

குருசேவ் - டிட்டோ இருவரும் மார்க்சியத்தை கைவிட்டு முதலாளித்துவத்தை மீட்டெடுத்து முன்வைத்த கோட்பாடுகளை பரஸ்பரம் "ஆக்கபூர்வமான வளாச்சி" என்று கூறிக் கொண்டனர். இதை எதிர்த்தவர்களை வரட்டுவாதிகள் என முத்திரை குத்தினர். இதை எதிர்ப்பவர்கள் ஸ்ராலினிய அதிகாரத்துவ கொடுங்கோலர்களின் சர்வாதிகாரப் போக்குக்கு இசைவானவர்கள் என்றனர். ஸ்ராலினுக்கு மாற்றான தமது பாதையே சோசலிசப் பாதை என்றனர். இதை டிட்டோ கூறிய போது "மனிதகுலம் தடுத்து நிறுத்த முடியாதபடி பல்வேறு வழிகளில் சோசலிச சகாப்தத்தினுள் பெரிய அளவில் நுழைந்து கொண்டிருக்கின்றது" என்று  முதலாளித்துவ மீட்சியை கூறினான். குருச்சேவோ புரட்சிகளை "நாடாளுமன்ற பாதையில்" நடத்த முடியும் என்றான். நாடாளுமன்ற பாதை அல்லாத வழிகளில் புரட்சியை நடத்தவும், நடத்த தூண்டிய ஸ்ராலினின் மார்க்சிய வழியை, ஸ்ராலின் போன்ற கொடுங்கோலர்களின் வழி என்றனர். ஈவிரக்கமற்ற வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்ற மனிதாபிமானமற்ற ஸ்ராலின் வழியை நிராகரித்து, அமைதி வழி சோசலிசத்தை கட்ட வேண்டும் என்பதே எமது வழி என்று குருச்சேவ் - டிட்டோ கும்பல் உலகுக்கு அறிவித்தது. இந்த பாதையில் தடுத்த நிறுத்த முடியாத வகையில் பல்வேறு வழியில் சோசலிச சகாப்தத்துக்குள் உலகம் செல்வதாக கூறி, முதலாளித்துவ மீட்சியை நடத்தினர். டிராட்ஸ்;கிகள் புல்லரிக்க தமது கடந்தகால அரசியல் வழி சோவியத்யூனியனில் நனவாகிவிட்டது என்று கூறி, தமது குதூகலத்தை பிரகடனங்கள் மூலம் ஆதரித்தனர். ஸ்ராலினை கழுவேற்றிய அந்தக் கணமே குருச்சேவ் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ரசியாவில் இனிமேலும் அவசியமில்லை" என்று கூறியதுடன் "மக்கள் அனைவரினதும் அரசை" பிரகடனம் செய்து முதலாளித்துவ மீட்சியை கோட்பாட்டு ரீதியாக பிரகடனம் செய்தான். ஆனால் லெனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் "முதலாளி வர்க்கத்தைத் தூக்கியெறிந்துள்ள பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, முதலாளித்துவத்துக்கும் ~வர்க்கமற்ற சமுதாய|த்துக்கும் அதாவது கம்யூனிசத்துக்கும் இடையிலுள்ள வரலாற்றுக் காலகட்டம் முழுவதுக்கும் அவசியம்" என்றார்.

 

குருச்சேவ் - டிட்டோ கும்பல் முதலாளித்துவ மீட்சியில்; மேலும் முன்னேறி "அனைத்து மக்களின் அரசு" என்று கூறி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டனர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அனைத்து மக்களுக்குமான ஜனநாயகத்தை மறுக்கும் ஸ்ராலின் வகைப்பட்ட கொடுங்கோலர்களின் தத்துவம் என்றனர். அனைத்து மக்களுக்கும் ஜனநாயகம், இதுவே சோசலிசத்தின் லட்சியம் என்றனர். மார்க்ஸ் முதல் லெனின் ஸ்ராலின் ஈறாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கொடூரமான மார்க்சிய சிந்தனை மூலம், அனைத்து மக்கள் ஜனநாயகத்தை வழங்க மறுத்ததாக கூறி, அதை கம்யூனிச இயக்கத்தில் புகுத்தி கட்சிகளின் வர்க்க குணாம்சத்தை மாற்றினர். குருச்சேவ் "அனைத்து மக்கள் கட்சி" என்ற பெயரில் கட்சியின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுத்தான். இதை டிராட்ஸ்;கிகள் தாளம் போட்டு இசைமீட்டனர். உலக கம்யூனிச இயக்கமே முதலாளித்துவ கட்சியாக மாறியது.

 

"வட்டார அளவிலான போரே உலப் போரென்னும் பெருந் தீயை மூட்டிவிடக் கூடும்" என்று கூறிய, குறுகிய அளவிலான போராட்டங்களை கூட, உலகளவில் பிற்போக்கானவை என்றனர். வட்டார அளவிலான வர்க்கப் போராட்டங்கள் ஸ்ராலின் வகைப்பட்ட மார்க்சியம் என்றனர். அதாவது உலகளவில் மனித போராட்டங்கள் அனைத்தும் பிற்போக்கானவை என்றனர். அவற்றுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும் என்றனர். ஏகாதிபத்தியத்துக்கும் அதன் ஒடுக்குமுறைக்கும் பாட்டாளி வர்க்கம் தலை வணங்கவேண்டும் என்றனர். இதை மறுத்த ஸ்ராலினையும், அவரின் பாட்டாளி வர்க்க நிலையை கொடுங்கோலர்களின் அரசியல் நிலை என்றனர். இதை நாம் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து ஒடுக்கவேண்டும் என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதே, ஸ்ராலின் என்ற கொடுங்கோலனின் முடிவை நிதர்சனமாக்கும் என்றனர். உலகத்தில் கொடுங்கோலன் ஸ்ராலின் என்ற தூற்றியபடி, டிட்டோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவரான அய்சனோவரை "விடாப்பிடியான  சமாதானக் காவலர்" என்று போற்றினான். 1961 இல் கெனடியை "சர்வதேச உறவுகளை மேம்படுத்தவும், நெருங்கிப் பிடிக்கும் உலகப் பிரச்சினைகளை அமைதி வழியில் தீர்க்கவும் உதவிகரமாய் இருக்கும்" சர்வாதிகாரத்துக்கு எதிரான ஜனநாயக மனிதர் என்றான். குருச்சேவ் அய்சனோவரை "சமாதானத்தை மனப்பூர்வமாய் விரும்புகிறவர்" என்றார். கெனடியை "சமாதானத்தைப் பாதுகாக்கும் பேராவலைக் காணமுடிகின்றது" என்ற புகழாரம் செய்தான். பாட்டாளி வர்க்கம் சமாதானத்தை கடைப்பிடிக்க, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை கைவிட வேண்டும் என்பதே இதன் சாராம்சமாகும். முதலாளித்துவ மீட்சியை சோசலிசத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சியாக  காட்டியபடி, உலக மக்களுக்கே எதிராக தங்கள் கரங்களை உயர்த்தினர்.

 

சமாதானம், அமைதி என்ற போர்வையில் வர்க்கப் போராட்டங்களை கொச்சைப்படுத்தினர். ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் கூடிக்குலாவி சமரசமாகவும், சொந்த நாட்டில் முதலாளித்துவ மீட்சியை துரிதப்படுத்தவும் அணு ஆயுதத்தை மிகைப்படுத்தி, மக்களையும் மக்களின் போராட்டத்தையும் சிறுமைப்படுத்தினர். டிட்டோ அணுப் போர் மூண்டால் "மனித இனம் அழிந்து போகும்" என்று கூறி வர்க்கப்; போராட்டத்தை மறுத்து, அதை அழிவு யுத்தமாக  கொச்சைப்படுத்தினான். குருச்சேவ் தன் குருவை மிஞ்சும் வகையில் "நமது கிரகம் நோவாவின் தோணி" அணுக்குண்டால்; "பூவுலகம் அழிந்து போகும்" என்ற கூறி உலகளாவிய வர்க்கப் போராட்டத்தையே கைவிடக் கோரினான். அமெரிக்காவின் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிந்து உலகமே அமெரிக்கா காலனியாக வேண்டும் என்றான். சர்வாதிகார கொடுங்கோலன் ஸ்ராலின் அணுக்குண்டுக்கு அடிபணியாது, உலகத்தை அழிவுக்கு இட்டுச் சென்றதாக தூற்றினான். அமெரிக்காவினதும் ஏகாதிபத்தியங்களினதும் காலனித்துவங்களையும், புதிய காலனித்துவ முயற்சிகளையும் எதிர்த்து உலகளாவில் வர்க்கப் போராட்டங்களை உற்சாகப்படுத்தி ஆதரவு வழங்கியதன் மூலம், ஸ்ராலின் உலக சமாதானத்துக்கு எதிராக இருந்ததாக கூறித் தூற்றினான். வர்க்க சமரசம் மூலம் உலக சமாதானத்துக்கு கைகளை உயர்த்தியவர்களை கம்யூனிஸ்ட்டுகள் என்றனர். கடந்த காலத்தில் வர்க்க விரோதிகளை ஸ்ராலின் ஒடுக்கிய போக்குகளில் இருந்து, அவர்கள் அனைவரையும் விடுவித்ததன் மூலம் முதலாளித்துவ மீட்சியை நடத்தினான்.

 

ஸ்ராலினின் பாட்டாளி வர்க்க போக்குகளை ஒழித்துக் கட்டிய பின், குருச்சேவ் 1961 குரு டிட்டோ வழியில்; கம்யூனிஸ்ட் கட்சியை "அனைத்து மக்களின் கட்சியாகி விட்டது" என்று அறிவித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையே முடிவுக்கு கொண்டு வந்தான். ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதை டிட்டோ தனது கொள்கையாக கொண்டிருந்த போதே, ஸ்ராலினும் சர்வதேச பாட்டாளி வர்க்கமும் அதற்கு எதிராக போராடியது.

 

யூகோஸ்லாவிய எதை தனது அரசியல் வழியாக கடைப்பிடித்தது என்பதைப் பார்த்;தோம். அரசியல் ரீதியாக ஸ்ராலினை மறுத்த குருச்சேவ், முதலாளித்துவ மீட்சியை டிட்டோ வழியில் தொடங்கியதை மேலும் விரிவாக ஆராய முன்பு, ஸ்ராலின் அவதூறின் அரசியல் போக்கை புரிந்து கொள்ள முனைவது அவசியம். இந்த முதலாளித்துவ மீட்சியை டிராட்ஸ்கிகள் ஆதரித்து நின்றனர். அனைத்துக்கும் ஸ்ராலின் அவதூற்றை அடிப்படையாக கொண்டே முதலாளித்துவ மீட்சியை அழகுபடுத்தினர்.

 

தொடரும்

பி.இரயாகரன்

4.யூகோஸ்லாவியா பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 04)

3.யூகோஸ்லாவிய பற்றிய ஸ்ராலினின் மார்க்சிய நிலைப்பாடும்;, டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 03)

 

 

1.இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 1)