சோபாசக்தி, ஹெலேனா டெமுத் அவர்களது வாழ்நிலை குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.அக்கட்டுரையில் சொல்லப்பட்டது யாவும் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.அக்கட்டுரையும்,எனது கட்டுரையும் சோபாசக்தியின் தனி-பொது வாழ்வும் விமர்சனத்துக்காகிறது தமிழரங்கத்தில்!

நான் "சோபாவின் இந்தக் குரல் நியாயமென்பது" எனது கருத்து.அதற்கான நியாயப்பாடுகளோடு கட்டுரை ஒன்றைஎழுதியிமிருந்தேன்.

 

என்னைப் பொறுத்தவரை கார்ல் மார்க்ஸ் உழைப்பாளர்களுக்கு ஒரு ஏசு அல்ல.அவர் உழைப்பாள வர்க்கத்துக்கான விடுதலைக்கான போராட்ட ஆயுதத்தைக் கண்டடைந்த மனிதர்.

 

அவரது வாழ்வில் ஹெலேனாவின் பாத்திரம் வெறும் வீடுபராமரிப்பது மட்டுமல்ல.அதற்கும் மேலான நிலைகளை அடைந்திருப்பது.அது குறித்து நீண்ட தகவல்கள் இணையத்திலும், எனது புத்தக விறாக்கியிலும் நான்றுகொண்டு இருக்கின்றன.நான் அது குறித்துத் தகவல்களுடன் கட்டுரை செய்தேன்.

 

இங்கே,சோபாசக்தியின் தனிபட்ட நடாத்தைக்கும் இதற்கும்-எனக்கும் என்ன முடிச்சு வேண்டிக்கிடக்கிறது?

 

நான் இந்தச் சமூகத்தின் காவற்காரனோ அன்றி அதன் குத்தகைக் காரனோ அல்ல.முதலாளிய அமைப்பில் இச் சமூகத்தின் நிலையென்ன-குடும்பம்-உறவுகளது நிலை என்னவென்பதும்,இன்றில்லாத பொதுவுடமையுலகத்தில் குடும்ப-சமூக உறவுகள் இப்படி இருக்க முடியாதென்பதும் நான் அறிவேன்.எனவே,இச் சமூக அமைப்பில் "பத்தினிகள்-ஏகபத்தினி விரதர்கள்" எனக்கு அவசியமில்லை.


நான் யாரோடு படுத்தாலென்ன இல்லை சோபா சக்தி எவரோடு படுத்தாலென்ன? அது எனது நோக்கல்ல.அவரவர் சுதந்திரத்தை எதன் பெயராலும் நான் மொட்டையடிக்க முடியாது.எனவே,சோபாசக்தி எதை-எதுக்குப் பயன்படுத்துகிறார் என்பது எனக்குப் பொருட்டல்ல.

 

என்றுமில்லாதவாறு,ஹெலேனா டெமுத் குறித்து நீதியானவொரு கட்டுரையை தமிழில் வாசிக்கக்கிடைத்தபோது அதன் நியாயவாதம் எனக்குச் சரியெனப்படுகிறது. அதற்குத்தோதான பல ஆவணங்கள் எழுதாகவும் ஜேர்மனியமொழியில் கிடக்கிறது.இது ஆதாரமாகுமா?

 

இல்லை!

கார்ல் மார்க்சுக்கும்,ஹெலேனாவுக்குமான உறவு,வீட்டுப் பணிப்பெண்,அரசியல் தோழமை என்பதைவிட அது ஹெலேனாவினது குழந்தைக்கு அப்பாவென்பதுவரை வரலாற்றில் சொல்லப்படுகிறது.

 

இதை,மறுத்து மார்க்ஸ் அவர்கள் அப்பிள்ளைக்கு அப்பாவில்லை,அவர் மிக"ஒழுக்கமான"சமூக-மனிதவுறவுகளைப் பேணியவர் என சொல்பவர்களை நாம் மறுத்துப் பேசவில்லை.அது அவர்களது நம்பிக்கை.எனது நம்பிக்கை மார்க்சுக்கும் ஹெலேனாவுக்கும் உள-உடல் ரீதியாக உறவிருந்ததென்பதும்,அவர்களுக்கு மழலை பிறந்தது என்பதும்.இதை தப்பு-தண்டனை எனப் பகர நான் முன்வரவில்லை.

 

ஆக,மார்க்சுக்கும்-ஹெலேனாவுக்கும் காதல்-பாலியல் ரீதியான தொடர்பு இல்லை என்பவர்கள் நாம் கூறுவதற்கு ஆதாரம் கேட்கின்றனர்.

 

எனக்கு எனது பிள்ளைக்கு நான் அப்பாவென்பது எனது மனைவி சொல்லித்தாம் தெரியும்.இன்றிருக்கும் மருத்துவ வளர்ச்சியுடன் அதை நிரூபிக்கவும் முடியும்.

 

அன்று, 1851ஆம் ஆண்டில் இவ்வளவு தூரம் மருத்துவ வளர்ச்சி இல்லாததால் ஒரு சர்ச்சை விரிந்திருக்கிறது.

 

மார்க்ஸ்-ஹெலேனா இருவரும் இப்போது உயிருடன் இருந்து,அவர்களுக்குப் பிறந்த குழந்தை என்பதும் உயிர் வாழ்ந்தால் நவீன மருத்துவத்தின்படி ஆதாரம் தரலாம்.மற்றும்படி சாத்தியமில்லை.நான் எவர்க்கும் விளக்குப் பிடிக்கவில்லை!

 

இனிச் சில கேள்விகளை கீழ்வரும்பாணியில் கேட்க முடியும்:

 

1):நான் சோபா சக்தியின் தனிப்பட்ட நடாத்தைகளைத் தூக்கி நிறுத்தும் அவரது தந்திரத்துக்கு மார்க்சை வலுகட்டாயாமாக வம்புக்கு இழுப்பது,

 

2):சோபாசக்தி பல பெண்களோடு தொடர்பு வைக்கும் சமூகப் பிறழ்வுடையவன்.

இதன் ஆதாரம் என்ன?

 

எழுத்துக்கள்.பலரது கருத்துக்கள்-இவைதானே?

 

நான்,மார்க்சுக்கு எதிராக எழுதுவது என்பது உண்மையாக இருக்கட்டும்.

 

சோபாசக்திக்கு வக்கலாத்து வேண்டுவதும் உண்மையாக இருக்கட்டும்.


நான்,மார்க்சிடம்,ஏங்கெல்ஸ்சிடம் கேட்பது இதுதாம்:

 

ஐயன்மீர்,ஹெலேனாவின் கருவுக்குக் காரணம் என்ன?குந்தியின் கருவுக்குச் சூரியதேவன் காரணமானால்,ஹெலேனாவின் குழந்தைக்கும் காரணம் இருக்கும்(ஹெலேனாவுக்கு அப்படியொரு குழந்தையே பிறக்கவில்லை-பிறந்ததற்கு என்ன ஆதாரம்? என்றுங் கேட்கக்கூடும்).அவரது குழந்தைக்குத் தகப்பன் எவர்?யாரோ ஒருவரது ஏமாற்றுக்குச் சூழ்ச்சிக்குப் பலியாகக் ஹெலேனா வாழ்வு சிதைந்ததெனின் இவை குறித்துச் சமூக ரீதியாக அம்பலப்படுத்தி அவரது "கணவனை-காதலனை-கயவனை"ச் சமூகத்தின் முன் கொணர்ந்திருக்கலாம்.இது அன்றைய உங்கள் போராட்ட வாழ்வில் மிக இலகுவானதும்,சாத்தியமானதும்.

 

ஹெலேனாவுக்கான நீதிக்கான போராட்டம்-தேடுதல் குறித்து அவரது தோழர்களால்-நண்பர்களால் நடாந்ததாக இதுவரை எனது வாசிப்புக்குள் ஒரு எழுத்துமில்லை!அப்படி இருக்குமானால் அது இன்னொரு நியாயம்.

 

ஹெலேனாவின் எதிர்காலம்-வரலாறு குறித்த புரிதல் முன் கூட்டியே இருந்திருந்தால் இது சாத்தியமானது.மார்க்ஸ் ஏங்கெல்ஸ் சாகும்வரை இது சாத்தியப்படாதது எதற்கு?

 

அப்பாவிப் பெண்ணைச் சமூகத்தில் "மானங்கெட"வைக்க முடியாதென்ற "நல்"எண்ணமா?

 

அப்போ,மார்க்ஸ் தனது நண்பர் வில்கேம் வொல்வ்(Wilhelm Wolff) அளித்த அன்புப் பரிசை தனது மரணத்துக்கு முன்-படுக்கையில் ஹெலேனாவுக்குப் பரிசாகக் கொடுக்கிறார்.வொல்வ்(Wilhelm Wolff), உழைப்பாள வர்க்கத் தலைவனுக்கு (Marx) அளித்த அப்பரிசு,இன்னொரு உழைப்பாள வர்க்கத் தலைவனுக்கு(ஏங்கெல்சுக்கு)போய்ச் சேரவில்லை.

 

மார்க்சின் வீட்டில் பணியாள-உழைப்பாளப் பெண்ணுக்குப் போய்ச் சேருகிறது.

 

அப் பெண்ணின்(ஹெலேனா டெமுத்) மரணத்துக்குப் பின் அந்த பொக்கற்கடிகாரத்தை ஹெலேனா விரும்பியபடி ஏங்கெல்ஸ் ஹெலேனாவின் புதல்வன் பிரிடிறிக்கிடம் கையளிக்கவில்லை.இது ஏன்?(இதற்கு ஆதாரம் கீழுள்ள ஸ்க்கான்பண்ணிய படத்தை அழுத்தி வாசிக்கவும்.டொச் தெரியாது போனால் நான் கீழே தரும் தகவல்கள்தாம் அதன் உள்ளடக்கம்)


எனினும்,அக் கடிகாரம் மார்க்சினது மூத்த பேரப்பிள்ளையான அவரது மகள் ஜென்னியின் குழந்தை ஜேஆன் லோங்குவிடம்(Jean Longuet) போய்ச் சேருகிறது.அதன்பின் அவனது மைந்தன் ரோபார்ட் ஜேஆன் லோங்குவிடம் (Robert Jean Longuet)போய்,இப்போது கார்ல்மார்க்சின் பூர்வீக இல்லத்தில் (Karl-Marx-Haus in Trier, Deutschland)காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

இக்கடிகாரத்தின் பின் பகுதியில் அது யார்-யாரிடம் இருந்ததென்பது செருக்கப்பட்டுள்ளது.அதுள்,மார்க்சுக்கு அடுத்த பெயர் ஹெலேனாவென்பது குறிப்பிடத்தக்கது.

 

கேள்விகளுக்குப்பின்னாக,

 

என்னைப் பொறுத்தவரை"ஆண்-பெண்"பாலியல் உறவென்பது "சமூகமாக"இயங்கும் இந்த முதலாளித்துவ அமைப்பில் ஒரு அம்சம் என்பது கிடையாது.அது,எந்த அமைப்பிலும் ஒரு அம்சமோ அல்ல ஒரு பகுதியோ கிடையாது.உழைத்து வாழ்வது-உயிர்வாழ்வதென்பது புவியின் இருப்புடன் சம்பந்தப்பட்டதென்ற வகையில் அது இயற்கையானது.அதை எந்தச் சமூக அமைப்புக்குள்ளும் அடைத்து நிலைப்படுத்த மனித உயிரியொன்றும் பொருள்நிலை வகைப்பட்ட தெரிவு இல்லை.இந்த அமைப்பில்தாம் இப்படி இருக்கமுடியும்.ஒரு பொதுவுடமைச் சமுதாயத்தில் இன்றைய சமூக-குடும்ப அமைப்புகள் தலைகீழாகவிருக்கும்.அங்கே,"ஆண்-பெண்"பாலியல் உறவுகள் குறித்த பேச்சே இருக்காது.அரசு எங்ஙனம் நூதனசாலையில் இருக்குமோ அப்படி இந்தக்குடும்ப-சமூக அமைப்பும் அங்கே அனுப்பப்படும்.

 

மார்க்சைத் தனது நடாத்தைக்காகச் சோபாசக்தி பயன்படுத்துவதாகவும்,அதற்குச் ஸ்ரீரங்கனும் துணைபோய்ச் செயற்படுத்துவதாகவும் எவராவது எண்ணுவாரானால் அது குறித்து எனக்கு எந்தக் கவலையுமில்லை.

 

ஏனெனில்,நானும் இந்தச் சமூகச் சாக்கடையில்தாம் வாழ்கிறேன்.என்னைவிடப் பொறுக்கி இந்தவுலகத்தில் எவரும் இருக்கமுடியாது.பின் நான் சோபாசக்திக்குத் துணைபோகாமல் இரயாகரனா துணைபோக முடியும்?

 

இனம்-இனத்தோடுதாம் சேரும்.பயப்படவேண்டாம்.

 

என்றபோதும்,ஹெலேனா அம்மையாரைக் கைவிட்ட காலங் கொடியதுதாம்.அது,எவரது பெயராலும் அவளைச் சிதைப்பது கொடியது.

ஆதாரம்?

ஆதாரம்,அதுதாம் ஆதாரம்!


இறுதியாகச் சொல்வதென்றால்:


"நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாது நின்ற நிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவர் தேடும் பொருள்"-ஒளவை சொல்லக் கேட்டேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.03.2010


P/S:
Biographie in Daten

Marx Karl Heinrich

* geboren am 05.Mai 1818 in Trier (Moseltal/Deutschland)
* gestorben am 14.März 1883 in London


* seine Eltern: Heinrich Marx, Dr. jur., Rechtsanwalt, lebte von 1777 bis 1838, Henriette Marx, geboren als Henriette Preßburg,
* seine Geschwister: Sophie, Hermann, Henriette, Louise, Emilie und Caroline Marx
* seine Ehefrau: Johanna Bertha Julie, lebte von 1814 bis 1881
* seine Kinder:

* Jenny Caroline, lebte von 1844 bis 1883;
* Jenny Laura, lebte von 1846 bis 1911;
* Edgar, lebte von 1847 bis 1855;
* Heinrich Guido, lebte von 1849 bis 1850;
* Franziska, lebte von 1851 bis 1852;
* Eleanor, lebte von 1855 bis 1898;
* Frederick Lewis Demuth, lebte von 1851 bis 1929;

http://de.wikibooks.org/wiki/Soziologische_Klassiker/_Marx,_Karl