Language Selection

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்!

இப்படி உரத்த குரலில் “அரசு இயந்திர மிருகம்” ஒன்று கத்திட , அம்மிருகத்துடன் வந்ததுகளும் ஓர் காட்டுவிலங்கை இழுத்துச் செல்லும் பாங்கில் இழுத்துச் சென்றனர்!

முன்னாள் இராணுவத் தளபதி இப்படித்தான் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளார்;. பொன்சேகாவை கைது செய்தவர், முன்னர் பொன்சேகாவினால் தண்டனை வழங்கப்பட்ட- தற்போதைய கொழும்பு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி. தேர்தல் தினத்தன்றும் பொன்சேகா தங்கியிருந்த விடுதியை சுற்றி வளைத்த போராட்டத்திற்கும் தலைமை தாங்கியவரும் இவரே!

இக்கைதின் ஊடாக, மகிந்தா தானும் இன்னொரு பிரபாகரப் புலியே என ஊர் உலகிற்கு காட்டியுள்ளார், நிறுவியுள்ளார்;. இலங்கையின் எதிர்காலம், இம்சை, பழிவாங்கல், கொலைகளுடன் கூடிய “மாமிச விலங்காட்சியே”தான். அதன் தொழிற்பாடுதான், கற்கால மனிதர்களை கல்லால் எறிய தை;துள்ளார்.  அப்படியாயின் பொன்சேகா?

மகிந்தா- பொன்சேகா ஜனாதிபதியாக- இராணுவத்தளபதியாக யுத்தத்தை ஆரம்பித்தபோது மனிதப் படுகொலையில், பாசிச சர்வாதிகாரத்தில் இருவரும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்களே! ஜனநாயக-மக்கள்விரோதப் பொன்சேகாவை ஜனநாயகவாதியாக்கியதும், ஜனாதிபதி வேட்பாளர் ஆக்கியதும் மகிந்த—கோத்தபாயா சகோதரர்களின் பாமரத்தன அரசியலே……சரத்தின் கைது இன்று மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோத-சர்வாதிகார அரசியல் ஆகியுள்ளது. இதை ஓர் இணையதள பின்னூட்ட வாசகர் சரியாக கணித்துள்ளார்.

ஆம், மதியற்ற-மட்டகரமான மகிந்த சிந்தனையால், சர்வாதிகாரி பொன்சேகா இன்று ஜனநாயகத்தின் குரலாக-மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பவராக, ஆக்கப்பட்டுள்ளார். மகாபாரதத்தில் துரியோதனன்-துச்சாதனன் போல் இலங்கையில் கோத்தபாயா மகிந்த சகோதரர்கள்! கோத்தபாயா (தாய்நாட்டின்-ஜனநாயக) துகிலை உரிய, மகிந்தா மௌனமாக பார்த்து ரசிக்கின்றார்!

இலங்கை மக்கள் உளவியல் மன அழுத்தங்களினால் அவதியுறுகின்றனர். மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கு, தேவையான பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். புpரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிக்கக்கூடிய வல்லமையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.          –பேராசிரியர் பெரேரா

சமகால இலங்கை மக்கள் குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலையாகியுள்ளனர். குரங்கிற்கு மக்களின் மன அழுத்தங்கள், அபிலாசைகள் பற்றி என்ன தெரியும்!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, 40,000- தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 3-இலட்சம் மக்கள் நியூயோர்க்கில் உள்ள மத்திய பூங்கா போன்ற, ஒரு சிறு நிலப்பரப்பில் கைதிகள் ஆக்கப்பட்டனர். அனைத்துரக ஆயுதங்களும் பாவிக்கப்பட்டது.- –ஓய்வுபெற்ற ஜ.நா வின் இலங்கைக்கான பேச்சாளர்

இதைத்தான் சர்வதேச நீதிமன்றத்திற்கு பொன்சேகா சொல்வேன் என்றிட, அவரை இராணுவ  மன்றத்திற்குள்  கொண்டு சென்றுள்ளார்கள்! நவநீதம்பிள்ளை கட்டாயம் விசாரிக்க வேண்டும் என்கின்றார்; நடக்குமா? எது எப்படி என்றாலும் சம்பவம் உண்மையே!

தேசம்நெற்றும் கீபோட் மாக்சிஸ்ட்டுக்களும்!

புலம் பெயர்வில் சில “புலன்பெயர்ந்ததுகள்” சொந்த அலுவலாய் ( காணிவாங்க, சீதன உறுதி முடிக்க, சொந்த-பந்த உறவுகளின் நன்மை தீமைகளுக்கு) இலங்கை போய்வந்து, தேசம் நெற்றில் கட்டுரை எழுதினால், இதுகள் யதார்த்த மார்க்கிசவாதிகளாம்! மற்றவர்கள் கீபோட்டாம்!  
அண்மையில் கொன்ஸ்ரன்ரைன் என்றொரு புலன்பெயர் “கீபோட் யதார்த்த மார்க்சிசவாதி” இலங்கை போய்வந்து,  தேசம்நெற்றில்,– “கீபோட் மார்க்சிசத்திற்கும் யதார்த்தத்திற்கும் உள்ள தூரம்” என்றொரு கட்டுரை எழுதியுள்ளது.

ஐயா, கொன்ஸ் அவர்களே! மற்றவர்கள் கீபோட் என்றால், நீங்கள் எழுத்தாணி கொண்டு, ஏட்டோலையில் எழுதுகின்றீர்களோ? உங்களின் தூர யதார்த்தப் பார்வையில், ஜெயபாலன் எந்த மார்க்சிஸவாதி? ஏடோ, கீயோ, மற்றதோ? இதை பின்னூட்ட வாசகர்களும் எல்லோ கேட்கின்றார்கள். தங்களின் கட்டுரையைப் பிரசுரித்ததில் ஜெயபாலனுக்கு, குட்டிநாய் குலைத்து தாய் நாய்க்கு கடி வாங்கி குடுத்த நிலை. உங்களில் சிலர் கண்ணாடி வீட்டிற்குள் நின்றுகொண்டு கல்லெறிகின்றீர்கள். உங்கள் வீட்டுக் கண்ணாடி இரும்பென்ற நினைப்பில்…

யதார்த்தக் கட்டுரைபற்றி….

;கொன்ஸ், தங்கள் கட்டுரைக்கும், யதார்த்தத்திற்கும், சிந்தனைக்கும் உள்ள தூரம், சூரிய மண்டலத்திற்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தை விட அதிகம். அவ்வளவு நீள்-அகல-சற்சதுரச் சிந்தனை!

தமிழ்மக்களின் யதார்த்த நிலைமைகளை பிரதிபலிக்க வேண்டுமாம்! 33சத விகித நிலப்பரப்பில் ஐந்து சத விகித தமிழ்மக்கள் வாழ்ந்துகொண்டு, இது எமது பாரம்பரிய பிரதேசம் என்று கதறியழுவது, யதார்த்தமற்ற முட்டாள்தனமான வரட்டு அரசியல். இதற்கு சாவுமணி அடிக்கவேண்டுமாம். இவருக்கு எதிலும் தூரக் கணிப்பீடுதான்! இவர் கணிப்பில் தமிழ் மக்களை “தூரம் குறைந்து வாழும் இனம்” எனலாம்!…….. இப்படிப் பல அலம்பல்கள். புலி முடிந்து விட்டது! புலிக்கு எதிராக “கீபோட்டில்” எழுதியவர்கள் நாட்டிற்கு போகலாம்! பெரிய வேலைத்திட்டமே இருக்காம்! புலிக்கு எதிராக எழுதியவன் போகலாம்! புலிக்கும் அரசிற்கும் எதிராக எழுதியவர்களின் பட்டியல் புலம்பெயர்வில் இருந்து விமான நிலையம் ஈறாக, நாலாம் மாடி வரை உள்ளது! இவர்களும் போகலாமோ? தற்போது இலங்கையில் மகிந்த கோத்தபாயா ஜனநாயகக்காலம் அல்லவோ?

தமிழ்மக்களின் அரசியலை, வடக்கின் வசந்த, மாபெரும் வேலைத்திட்டத்தையே  குத்தகைக்கு எடுத்த “ஆனானப்பட்ட” டக்கிளசே போதுமடா சாமி, என்னை விடுங்கள் ராஜினாமா செய்யப்போகின்றேன் என்ற வெறுத்த நிலையில், இவர் மகிந்த ஞானப்பால் குடித்துவிட்டு வந்து இங்கு தேவாரம் பாடுகின்றார்.

தாங்கள் குறிப்பிடும் வட-கிழக்கு மக்களின் அவல வாழ்வை, சிவில் நிர்வாகம் அற்ற தன்மையை அபிவிருத்தியற்ற போக்கை, இதை சீர் செய்வதற்கான பொருளாதார தட்டுப்பாட்டு சம்பந்தமான, தங்கள் ஆதங்கத்தை கேலி செய்து புறம் தள்ளவில்லை. புலம்பெயர் மக்களின் பங்களிப்புக்களை நிராகரிக்கவில்லை! இவையெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொரி போட்ட மாதிரி  இதற்கு அப்பால் அரசு செய்யவேண்டிய பலவற்றை பேரினவாத நோக்க்pல் இருந்து செய்ய மறுக்கின்றது. மகிந்த செல்லப்பிள்ளையான பிள்ளையானும் இதைத்தான் சொல்கின்றார்,  அவர் சொன்னால் யதார்த்தம். மற்றவர்கள் சொன்னால் கீபோட்டோ?

ஐயா யதார்த்தவாதிகளே தத்துவவாதிகளே! நீங்கள் எதையும் எதுகொண்டு எழுதினாலும் பரவாயில்லை! குழம்பாதீர்கள் மக்களைக் குழப்பாதீர்கள். இதுவே நீங்கள் மக்களுக்கு ஆற்றும் பெரும் தொண்டாகும்!

பொன்சேகா எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்?————அமெரிக்கா

சற்றுப் பொறுங்கள் சட்டமா அதிபரிடம்  கேட்டுள்ளார்கள்!, இலங்கைச் சட்டத்தின்படி முதலில் கைது அதன்பின்தான் மற்றவைகள்… இவையெல்லாம் உஙகளுக்கு ஏன் சொல்லவேணடும்!

வன்முறைக் கலாச்சாரம் தலைதூக்க இடமளியேன்.——-ஜனாதிபதி

தாங்கள் இருக்க பயமேன்! நீங்கள் முழுமுதற் கடவுள் அல்லவா! படைத்தலைத் தவிர காத்தல் அருளலுடன்  துஷ்ட-நிக்கிர சிஷ்ட பரிபாலனமும் அல்லவா செய்கின்றீர்கள்!

ஊடகங்களுக்கு மறுக்கப்பட்டுள்ள சுதந்திரம் என்னவென்று சொல்ல முடியுமா? — பதவி விலகவுள்ள ஊடகத்துறை அமைச்சர்

தங்கள் குடும்ப ஆட்சியைத் தவிர, மற்றப்படி சகலதையும் எழுதலாம் தானே! இதைவிட இனியென்ன சுதந்திரம் வேண்டும்!  -

பொன்சேகாவை ஐந்து வருடங்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியும்!

நீங்கள் சொன்னால் அண்ணா செய்யாமலா விடுவார்! நீங்கள் அபூர்வ சகோதரர்கள் ஆச்சே!   

யாழ்-பல்கலைக்கழக மாணவர் இருவரின் தற்கொலை!

வட-கிழக்கைச் சேர்ந்த–யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், தாம் வாழ்வதில் பயன் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு, கிணற்றில் ஓன்றாக விழுந்து உயிரை மாய்த்துள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் இருவரும் காதலர்கள். மாணவன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர். மாணவி மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.

இவ்விரு மாணவர்களும், வன்னியுத்தத்தில் பாதிக்கப்பட்டு, வவுனியா தடுப்பு முகாமில் இருந்து பல்கலைக்கழகம் வந்தவர்கள். மாணவன் அருந்ததிராய் இருகால்களும் பாதிக்கப்பட்டு, இயங்காத நிலையில் பல்கலைக்கழகம் வந்தவர். மாணவி திருவிழி முதலாம் வருட முகாமைத்துவ மாணவி.

இவ்விரு மாணவர்களின் தற்கொலைக்கான காரணம், மாணவன் அருந்ததிராயிற்கு கிடைக்கப்பெற்ற மருத்துவ அறிக்கையில், அவரின் கால்கள் மட்டுமல்ல,  அவரது இடுப்பிற்கு கீழான அனைத்துப் பகுதிகளும், இன்னும் சில மாதங்களில்  இயங்கமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளதே.
பேரினவாதப் போர்வெறியின் பிரதிபலிப்பு;, மனிதப்படுகொலைகளை மட்டுமல்ல, தப்பியவர்களையும் விட்டுவைக்கவில்லை! இப்பிஞ்சு உள்ளங்கள் எதிர்காலம் பற்றி எதைத்தான் கற்பனை செய்திருக்கும்! இது போதுமென்ற திருவிழியின் திடசங்கற்ப மன வைராக்கியத்தையும், ஏழை மனதையும் சுக்கு நூறாக்கியுள்ளது! அம்மாணவி துக்கத்தைப் பலமாக மாற்றவேண்டும்! மாற்றியே ஆகவேண்டும்! இதுதான் சமகால ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சமகால நிலையும்.

ஆயுதம் ஏந்தியோர் தேர்தலில் போட்டியிட முடியாது! –கருணா

புதிய ஏற்பாட்டின்படி கொலை செய்தவர்கள்தான் போட்டியிடலாம்!  உங்கள் கட்சியில் பலருக்கு அத்தகுதி உண்டல்லவோ? 
ஊருக்கு உபதேசம் அப்ப அது உங்களுக்கில்லைத்தானே!


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ