Language Selection

புலிக்கு பின் பல "முற்போக்கு" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது.   மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.

 

இன்று தேசம்நெற் "ஊடகவியல்" முன்தள்ளும் மகிந்த அரசியலை மூடிமறைத்தபடிதான், மே 18 முதல் இனியொரு வரை இயங்குகின்றது. இதன் மூலம் மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்துடன் கூடிய, தங்கள் காரியவாத அரசியலை முன் நகர்த்துகின்றனர். இதன் மூலம் இதன் முன்னணிப் பிரமுகர்கள், தம் பின்னால் மந்தைகளை உருவாக்கியபடி  அவர்களை தமது காரியவாததுக்கு ஏற்ப மேய்க்க விரும்புகின்றனர்.

 

இவர்களின் காரியவாதத் தயவில் தான், மகிந்த சிந்தனை புலத்தில் புளுக்கின்றது. இது பல வேஷம் போடுகின்றது.

 

இதில் ஒன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல். இதைச் செய்தலே தமிழ்மக்கள் நலன் என்று காட்டுகின்றனர். தன்னார்வ நிதி பற்றி மெய்சிலிர்க்க குதிப்பவர்கள், மகிந்த சிந்தனையின் பின் உருவாகும் இந்த எதிர்ப்புரட்சியை, தங்கள் காரியவாத அரசியல் மூலம் மூடிமறைக்கின்றனர். இதுபோல் புதிய ஜனநாயகக் கட்சி தேர்தல் பற்றிக் கொண்டுள்ள எதிர்ப்புரட்சிக் கண்ணோட்டத்தையும் விமர்சிப்பதில்லை. இப்படி அரசியலை தங்கள் குறுகிய காரியவாதத்துக்குள் மூடிமறைத்துக் கொண்டு, சந்தர்ப்பவாதத்தை முன்தள்ளுகின்றனர்.

 

இதன் மூலம் தான் எதிர்ப்புரட்சி அரசியல், தனக்கு முற்போக்கு முலாம் இடுகின்றது. மகிந்த சிந்தனையின் பின் நின்று தான் மக்களுக்கு உதவுவதைப் பற்றி பேசுகின்றது. இப்படியும் ஒரு கூட்டம். இதில் சிலர் பக்கா வியாபாரிகள். இவர்கள் தங்கள் வியாபாரத்தை, மகிந்தவின் பாசிச சிந்தனை மூலமே அங்கும் செய்ய முனைகின்றனர். இதற்கமைய உதவும் அரசியலை அது முன்தள்ளுகின்றது. இப்படி மகிந்த குடும்பம் நடத்தும் பாசிச அரசின் துணையுடன், மக்களுக்கு உதவுதன் மூலம் தங்கள் வியாபாரத்தையும் தொடங்கியுள்ளது.

 

இ;தைத்தான் புலிப்பினாமிகள் முன்பு செய்தனர். இதைத்தான் அரச பினாமிகள் இன்று தொடங்கியுள்ளனர். புலிகள் மக்களுக்கு உதவுதாக கூறி திரட்டிய நிதியை, அவர்கள்  மோசடி செய்தனர். இவர்களும் வியாபாரிகள் என்பதால், இதுவே இவர்களின் நோக்கமாகும்.   உள்ளடக்க ரீதியாக தமிழ்மக்கள் அரசியலை, மோசடியாக வியாபாரம் செய்கின்றனர். 

 

நாம் மக்களுக்கு உதவுவதற்காக இருந்தால், மகிந்த அரசுடன் நின்றுதான் தான் செயல்பட முடியும் என்கின்றனர். தங்கள் அரசுசார்பு நிலைக்கு அமைய, இதை முன்னிறுத்தி  பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இந்த வியாபார அரசியலுக்கு வெளியில், பாரிய உதவியை தனிநபர்களும் பல்வேறு அமைப்புகளும் சுயமாகவே செய்கின்றனர். அதை அவர்கள்  அரசியலாக முன்னிறுத்துவதில்லை. இதை அரசியலாக முன்னிறுத்துபவர்களில், சிலர் புலத்தில் வியாபாரிகள். உதவி மூலம் முன்தள்ளும் அரசியலோ, மொத்தத்தில் அரசியல் வியாபாரம் தான்;.  இதில் புலத்தில் வியாபாரம் செய்யும் அரசியல் வியாபாரிகள், இங்குள்ள அரசுகளையே ஏமாற்றி வியாபாரம் செய்யும் தில்லுமுல்லுப் பேர்வழிகள். இன்று தமிழ்மக்களை மகிந்தவுடன் சேர்ந்து ஏமாற்றி பிழைக்கும் புது வியாபாரத்தில் இறங்கியுள்ளனர்.

 

இன்று தாங்கள் மகிந்தா அரசுடன் சேர்ந்து நின்று செய்வதையே, தமிழ் மக்களுக்கான மாற்று அரசியல் என்கின்றனர். இந்த மகிந்த அரசியல் மற்றும் வியாபாரத்தையே அரசியலாக காட்டும் தளத்தில், தேசம் நெற் ஒரு சிறப்பான எடுத்துக் காட்டு.

 

தங்கள் இந்த வியாபார வர்க்க அரசியலுக்கு அமைய, மார்க்சியத்தை எதிர்த்து மகிந்தாவுடன் நின்று வாந்தி எடுக்கின்றனர். மகிந்த பாசிசத்துடன் கூடி நிற்றல் தான், மாற்று என்கின்றனர். இப்படி மகிந்தா குடும்பம் நடத்தும் சர்வாதிகார பாசிச ஆட்சியுடன் கூடிக் குலாவி குலைத்துக்கொண்டு, மார்க்சிட்டுகளை அவர்கள் போட்டுத்தள்ள இலங்கை சென்று செயல்படுமாறு கோருகின்றனர்.  அதாவது  போட்டுத் தள்ளும் அரசியலை செய்கின்றனர். மகிந்த அரசின் ஆள்காட்டிகளாக இருப்பவர்கள், தங்களை மூடிமறைக்கவே மனிதாபிமான உதவி ஊடாக உலகை வலம் வருகின்றனர்.

 

தான் அல்லாதவர்களை போட்டுத் தள்ளும் மகிந்த அரசு, இவர்களுக்கு செங்கம்பளம் விரிக்கின்றது. இப்படி இலங்கைக்கு செல்லும் இவர்கள் தான், மார்க்சியவாதிகளைப் பார்த்து கொக்கரிக்கின்றனர்.

 

மகிந்த பாசித்துக்கும் அதன் போர்க்குற்றத்துக்கும் துணை நிற்கும் இந்த போக்கிலிகளின் கவலை, தாங்கள் அம்பலப்படுவது தான். தாங்கள் அம்பலப்படாமல் இருக்க, மார்க்சியவாதிகளை ஓழித்துக்கட்டுவது அவசியம். இதனால் மார்க்சியவாதிகளை இலங்கை செல்லுமாறு கோருகின்றனர். என்ன வக்கிரம்.

 

சரி உங்களை வரவேற்று நிற்கும் உங்கள் மகிந்தா அரசு, எங்கள் ஜனநாயகத்தை அங்கீகரித்துத்தான் விடுமா!? உங்கள் இணையமே அதை அங்கீகரிப்பதில்லை. உங்கள் கவலை, மார்க்சிட்டுகளை போட்டுத்தள்ள, இலங்கைக்கு அவர்களை வழிகாட்டுவது தான். இதற்கு வெளியில் இவர்களுக்கு, மார்க்சியவாதிகளின் அரசியல் பற்றி எந்த அக்கறையும் நோக்கமும் கிடையாது.

 

இதற்கு மத்தியில் மே18 இயக்கத்தின் உத்தியோகபூர்வத் தளமாக, தேசம்நெற் தன்னைக் காட்டிக்கொள்ள முனைகின்றது. ஜான் என்ற தனிநபர் தேசம்நெற் ஆசிரியருடன் கொண்டுள்ள தனிப்பட்ட உறவை கொண்டு, ஜானின் துணையுடன் மே 18 இயக்கத்தையே தேசம்நெற் தளம் மகிந்த சிந்தனைக்கு பயன்படுத்துகின்றது.

 

இங்கு மே 18 இயக்கம், தன் அரசியல் சந்தர்ப்பவாதம் மூலம் தேசம்நெற்றை விமர்சிப்பதில்லை. இதேபோல் தான் தேசம்நெற்றுடன் அசோக், நாவலன் போன்றவர்கள் சேர்ந்து நடத்திய கூத்துகள் ஒருபுறம்;. தேசம்நெற்றின் மகிந்த சிந்தனையை இவர்கள் யாரும் விமர்சிப்பது கிடையாது. கூடிக்குலாவி நடத்திய சுத்துமாத்து அரசியலும், தங்கள் காரியவாத உள்ளடக்கத்துடன் கூடிய அரசியலும் அதை அனுமதிப்பதில்லை.

 

சந்தர்ப்பவாதம் மூலமான நகர்வுகள் தான் இவர்களின் அரசியல். தம்மைப் சுற்றி பல சுத்துமாத்து அரசியல் நகர்வுகளை மூடிமறைத்துக் கொண்டு, அவர்களுடன் கூடிக் குலாவிக்கொண்டும், ஒரு  சந்தர்ப்பவாதத்தையே தங்கள் அரசியலாக முன் நகர்த்துகின்றனர்.

 

ஒரு எதிரியையும், ஒரு செயலையும் காட்டிக் கொண்டு, தங்களைச் சுற்றி சுத்துமாத்துகளையும் மக்கள் விரோத அரசியலையும் எதிர்ப் புரட்சி நகர்வையும் மூடிமறைக்கின்றனர்.

 

கடந்தகாலத்தில் இயக்கங்கள் தோன்றிய போது, எதிரியைக் காட்டிபபடி தங்களுக்குள்ளும் தங்களை சுற்றியும் உருவான எதிர்ப்புரட்சி அரசியலை இனம் காட்டாது எதிர்ப் புரட்சி அரசியலையே புரட்சி அரசியலென மாற்றினர். அதே நடத்தையை, தங்கள் காரியவாத சந்தர்;ப்பவாதத்துடன் கூடிய எதிர்ப்புரட்சி அரசியலையே இன்றும் கையாளுகின்றனர். தம்மைச் சுற்றிய அணிகளை ஏமாற்றிக்கொண்டும், தமக்குள் மட்டும் இதைப்பற்றி பேசிக்கொண்டும், வெளிப்படையாக சந்தர்ப்பவாதத்தை முன்தள்ளுகின்றனர். இதன் மூலம் தங்ளைச் சுற்றிய  அணிகளை, மீண்டும் படுகுழியில் தள்ள இவர்களின் இந்தச் சந்தர்ப்பவாதமே போதுமானதாக இன்று உள்ளது.

 

கடந்தகாலத்தில் என்ன நடந்தது என்ற சுயகற்கை மூலமான தெளிவின்றியும், இந்த நகர்வுகளை முன்னெடுக்கின்றவர்கள் கடந்தகாலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தனர் என்ற தெளிவான அரசியல் பார்வையின்றி, எந்த தனிமனித கண்ணோட்டமும் மக்களுக்கு எதிரானதாக மாறும் அல்லது சுய தற்கொலைக்கே இட்டுச்செல்லும்.

 

பி.இரயாகரன்

16.02.2010


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ