கடலடியோடிய கப்பல் செய்தோம்
விண்ணர்களின் கண்களைமிஞ்சிய பறப்பும் செய்தோம்
நெருப்பிடை பாய்ந்து தீயணைத்தோம்
நெஞ்சொடு தேச உயிர் அணைத்தோம்--புலியென
பந்தென ஆடிய படைகளும் எதிர்த்தோம்

அடஎமை விழவிழ விடுதலை வேருறுமென்றவர்
புள்ளடிக் கடதாசியில் கப்பலும் புரட்சியும்...நாளை
எழுவதற் கிதுவாம் என்னரும் பேராசான்
மக்கள் படையொடு -- இடர்களை வீழ்த்தும்
எழுதலைச் சொல்லா இருப்பினை எதிர்ப்போம்..

ஊர் புழுதியில் குளித்தோம் --ஓடிய வெள்ளத்தே
தென்னம்பாளையில் கப்பலும் விட்டோம்
ஒன்றாய் கூடிமகிழ்ந்த காலமது—என்றோபோனது
வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு நீட்சியும்
வாக்குசீட்டில் சுத்தியலும் அரிவாழும் ஒன்றுதான்...

நாளை இளையோர் சிந்தனை தேடுதல்
போலி தேர்தலை ஒதுக்கும் புரிதலை செய்க
சனத்தின் கரத்தினைப் பற்றியே வாழ்வொடு
இனங்களின் இணைதலை உயர்த்துவோம்

தேர்தலால் வீழ்த்தி சோகங்கள் தொலைந்ததா
மாறிமாறி நாசமே தொடர்கதை
மக்கள் அரசினை நிறுவ அணிஅணியாக 
ஆர்ப்பரித்தெழும்பும் பணியினை செய்வோம்.....
இதைவிட மாற்று ஏதெனும் உண்டெனின்
மகிந்தவும் கூட இடதுசாரியாம் ..........