பல்வேறு விசயங்கள் சம்பந்தமாக நான் ஒப்படைத்த ஐந்து அல்லது ஆறு தொகுதி கேள்விகளைப்பற்றி, தலைவர் மாவோ 12 இரவுகள் வரை என்னுடன் கதைத்திருக்கிறார். ஆனால் அதில் குறிப்பிட்ட சில சம்பவங்களில் தனது சொந்தக்கடமைகள் பற்றி அல்லது தன்னைப்பற்றி அவர் ஒருபோதும் குறிப்பிட்டதில்லை.

அத்தகைய தகவல்களை அவர் எனக்கு தருவார் என்று நான் எதிர்பார்ப்பது பயனற்றது என்று நான் நினைக்கத் தொடங்கியிருந்தேன். தனிப்பட்டவர்கள் அல்லது அவர்களின் செயற்பாடுகள் வெகு முக்கியத்துவம் குறைந்தவை என்று அவர் வெளிப்படையாகவே கருதினார். நான் சந்தித்த ஏனைய கம்யூனிஸ்டுகளைப்போலவே குழுக்கள் நிறுவனங்கள், படைகள், தீர்மானங்கள் சமர்கள், தந்திரோபாயங்கள், வழிவகைகள் மேலும் பற்பல விசயங்கள் பற்றி கதைப்பதையே அவர் வழிமுறையாக கொண்டிருந்தார். தனிப்பட்ட அனுபவங்களைப்பற்றி அவர் ஒருபோதும் கதைத்ததில்லை.

இலக்கு தழுவாத விடயங்களைக்கூட விரித்துரைப்பதில் அவர் காட்டிய தயக்கமும், தனிப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவரது தோழர்களது அருஞ்சாதனைகளைப்பற்றி கூறுவதில் காட்டிய தயக்கமும் தன்னடக்கம் காரணமாகவோ அல்லது என்னைப்பற்றிய பயம் அல்லது சந்தேகம் காரணமாகவோ அல்லது இந்த மனிதர்களில் பெரும்பாலானோர்களின் உயிர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பணய விலை பற்றிய உணர்வு காரணமாகவோ ஏற்பட்டிருக்கலாம் என்று நான் சில காலமாக நினைத்தேன். இதற்கான காரணங்கள் நான் மேற்குறிப்பிட்ட விடயங்களல்ல, கம்யூனிஸ்டுகளில் பெரும்பாலானவர்கள் உண்மையாகவே தங்கள் தனிப்பட்ட சாதனைகள் பற்றிய விடயங்களை ஞாபகத்தில் கொண்டிருக்கவில்லை என்பதை நான் பிற்காலத்திலேயே உணர்ந்தேன். நான் தனிப்பட்டவர்களின்வாழ்க்கை வரலாறுகளை தொகுக்கத்தொடங்கியபோது இந்தக் கம்யூனிஸ்டுகள் , தங்கள் இளமையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பற்றிச் சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற போதிலும் செங்சேனையின் வீரர்களாக தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை எங்கோ மறந்துவிட்டார்கள் என்பதை நான் மீண்டும் கேள்விகள் கேட்டாலொழிய அவர்களைப்பற்றி ஒருவரும் ஒன்றும் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் ரணுவம் சோவியத் அமைப்புகள் கட்சி ஆகியவை பற்றிய விடயங்களே அவர்களிடமிருந்து வெளிவந்தன. சமர்கள் பற்றிய திகதிகள், சூழ்நிலைகள் இதுவரை கேள்விப்பட்டிராத ஆயிரம் இடங்கலிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நகர்வுகள் பற்றி இந்த மனிதர்கள் காலவரையறையற்ற முறையில் கதைப்பார்கள். ஆனால் இந்த நிகழ்வுகள் கூட்டு முயற்சி என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுபோல் தோற்றமளிக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அந்த இடத்தில் வரலாறு படைத்திருந்தார்கள் என்பதால் அல்லது செஞ்சேனை அந்த இடத்தில் களிச்சாதனை புரிந்திருந்தது என்பதினால் தான் அவர்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அத்தோடு ஒரு கோட்டின் முழுமையான அடிப்[படை உந்து சக்தியின் பிரதிநிதிகளாக அவர்கள் சண்டையிட்டிருந்தார்கள் என்னைப்பொருத்தமட்டில் இது ஒரு ருசிகரமான கண்டுபிடிப்பு. ஆனால் எனது தகவல் சேகரித்து வெளியிடும் பணியில் இது ஒரு சிரமமான விடயம்.

ஏனைய கேள்விகள் அனைத்திற்கும் திருப்திகரமான முறையில் பதில்கள் வழங்கப்பட்ட பின்பு ஓர் இரவில் நான் தனிப்பட்ட வரலாறு என்று தலைப்பிட்டிருந்த பட்டியலை தலைவர் மாவோ பார்த்தார். அதில் ஒரு கேள்வியை பார்த்துவிட்டு புன்முறுவல் பூத்தார். நீங்கள் எத்தனை முறை திருமணம் செய்துள்ளீர்கள்? நான் தலைவர் மாவோவிடம் உங்களுக்கு எத்தனை மனைவிகள் உண்டு என்று கேட்டதாக ஒரு வதந்தி பின்பு பரவியது. இருப்பினும் ஒரு சுய வாழ்க்கை வரலாற்றுத்தொகுப்பிற்கான விடயங்களை வழங்குவதன் அவசியத்தையிட்டு அவர் பற்றுறுதி அற்றவராக காணப்பட்டார். ஆனால் அது ஒரு வகையில் ஏனைய விடயங்கள் பற்றிய தகவல்களை காட்டிலும் அதிகரித்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நான் வாதிட்டேன். நீங்கள் எத்தகைய மனிதர் என்று மக்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். நீங்கள் கூறுவதை அவர்கள் படிக்கும்போது உங்களைப்பற்றிக்கூறப்படும் சில பிழையான வதந்திகளையும் உங்களால் தவிர்க்கமுடியும் என்று நான் அவரிடம் கூறினேன்.

 




 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அவர் இறந்துவிட்டார் என்று கூறப்படும் பல்வேறு தகவல்களை அவருக்கு ஞபகமூட்டினேன். அவர் ஆற்றொழுக்காகபிரெஞ்சு மொழி பேசக்கூடியவர் என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் அவர் ஒரு படிப்பறிவற்ற விவசாயி என்று கூறுகின்றனர். அரை உயிரோடு உள்ள ஒரு காசநோயாளி என்று வேறொரு அறிக்கை கூறுகிறது. வேறு சிலர் அவர் ஒரு பைத்தியக்கார தீவிரவாதி என்று கூறுகின்றனர், என்றெல்லாம் அவருக்கு நான் ஞாபகப்படுத்தினேன். தன்னைப்பற்றிய விடயங்களையிட்டு விவாதிப்பதில் மக்கள் ஏன் தங்கள் காலத்தை வீணாக்கவேண்டும் என்பது குறித்து ஓரளவு ஆச்சிரியப்பட்டவர் போன்று அவர் காணப்பட்டார். தன்னைப்பற்றிய இந்த தகவல்கள் திருத்தப்படவேண்டும் என்று அவர் ஒத்துக்கொண்டார். பின்பு நான் எழுதிக்கொடுத்த வரிசையின் படி அந்த விடயங்கலை மீண்டும் ஒருமுறை பார்த்தார்.

சரி நான் உமது கேள்விகள் அனைத்தையும் வெறுமனே ஒதுக்கிவிடுகிறேன். அதற்க்குப்பதிலாக என்னுடைய வாழ்க்கை பற்றிய பொதுவான தோற்றத்தை தருகிறேன். இது சிறிதளவு கூடுதலக்க விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்தோடு இறுதியில் உமது அனைத்துக்கேள்விகளுக்கும் பதில்கள் வழங்கப்பட்டும் இருக்கும். தொடர்ந்து இரவுகளில் இடம்பெற்ற பேட்டிகளில் நாங்கள் ஒரு வகை சூழ்ச்சிக்காரர்கள் போலவே தோற்றமளித்தோம். அந்தக்குகையினுள்ளே சிவப்புத்துணி விரிக்கப்பட்டிருந்த ஒரு மேசையில் எங்களிருவருக்குமிடையே ஒளிவிடு மெழுகுதிரிகளின் வெளிச்சத்தில் முடங்கியபடி எங்கள் கடமையில் ஈடுபட்டோம். எனக்கு நித்திரை வரும்வரை நான் எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கருகிலேயே வூ லியாவ் பிங் இருந்துகொண்டு மென்மையான தென் பகுதிப்பேச்சு வழக்கு மொழியில் மாவோ எனக்கு கூறியவற்றை விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார். வடபகுதிப்பேச்சு வழக்கு மொழியிலிருந்து அது வினோதமான பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. மாவோ அவரது நினைவிலிருந்த அனைத்து விடயங்களையும் கூறினார். அவர் பேசப்பேச நான் எழுதிகொண்டிருந்தேன். இவை மீள மொழிபெயர்க்கப்பட்டு திருத்தப்பட்டு அதன் விளைவாகத்தான் இந்த வரலாற்றுத்தொகுப்பு உருவாயிற்று. பொறுமை வாய்ந்த வூ அவர்களின் சொற்றொடர் அமைப்பில் மேற்கொண்ட சில அவசியமான திருத்தங்களைத்தவிர இந்தத்தொகுப்பிற்கு இலக்கிய நயம் ஊட்டும் எந்த முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை.

சியாங் தான் மாவட்டத்திலுள்ள ஷாங் ஷாங் என்ற ஊரில் நான் பிறந்தேன். ஹூனான் மாகாணத்திலுள்ள இந்த ஊரில் நான் 1833ஆம் ஆண்டு பிற்றந்தேன். எனது தந்தையார் பெயர் மாவோ ஜென் ஷெங், திருமணமாகும் முன்பு என் தாயாரின் கன்னிப்பெயர் லென் சி மென்.

எனது தந்தையார் ஒரு ஏழை விவசாயி. அவர் இள வயதிலேயே கடுமையான கடன் தொல்லை காரணமாக ராணுவத்தில் சேரவேண்டி ஏற்பட்டது. அவர் பல வருடங்கள் ராணுவ வீரனாக கடமை புரிந்தார். பின்பு அவர் ஊர் திரும்பினார். அங்கு நான் பிறந்தேன். கவனமாக சேமிப்பதன் மூலமும் சிறு வர்த்தகங்கள் மூலமும் ஏனைய முயற்சிகள் மூலம் சிறிது பணத்தை சேர்த்தெடுத்து அவரால் தனது நிலங்களை மீள வாங்கிக்கொள்ள முடிந்தது.

நடுத்தர விவசாயிகளாக இருந்த எங்கள் குடும்பம் அப்போது 15 மு (ஒரு ஹெக்டேருக்கு சமம்) நிலப்பரப்புள்ள காணியை கொண்டிருந்தது. இந்தக்காணியிலிருந்து 60 ரான் (ஒரு ரான் என்பது 133 ராத்தலுக்குச்சமம்) அரிசியை அவர்கலால் உற்பத்தி செய்ய முடிந்தது. எங்கள் குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களும் 35 ரான் அரிசியை உணவாகக்கொண்டனர். அதாவது ஒருவருக்கு 7 ரான் அரிசி. இதன் மூலம் வருடாந்தரம் 25 ரான் அரிசி மேலதிகமாக மிகுந்திருந்தது. இந்த மேலதிகமான வருவாயை பாவித்து எனது தந்தையார் ஒரு சிறிய மூலதனத்தை செர்த்தெடுத்தார். காலப்போக்கில் மேலும் 7 மு பரப்புக்கொண்ட காணியை வாங்கினார். இது எங்கள் குடும்பத்திற்கு பணக்கார விவசாயிகள் தகு நிலையை கொடுத்தது. அப்போது எங்களால் 84 ரான் அரிசியை உற்பத்தி செய்து கொள்ள முடிந்தது.

எனது அப்பா ஒரு நடுத்தர விவசாயியாக இருந்த சமயம் தானிய போக்குவரத்து விற்பனை முயற்சிகளிலும் ஈடுபட்டார். இதன் மூலம் அவர் சிறிது பணத்தை சேர்த்துக்கொண்டார். அவர் பணக்கார விவசாயியாக வந்த பின்பு தனது நேரத்தில் பெரும்பகுதியை மேற்படி வியாபாரத்தில் செலவிட்டார். அவர் ஒரு முழு நேர பண்ணைத் தொழிலாளியை வேலைக்கமர்த்திக் கொண்டதோடு தனது மனைவியையும் மக்களையும் பண்ணை வேலையில் ஈடுபடுத்தினார். பண்ணைக்கடமைகளில் நான் ஆறு வயதாக இருக்கும் போது ஈடுபடத்தொடங்கினேன். எனது தந்தையாரின் வியாபாரத்திற்கென்று கடை எதுவும் இருக்கவில்லை. அவர் ஏழை விவசாயிகலிடமிருந்து தானியங்கலை வாங்கி நகர்ப்புற விcவசாயிகளுக்கு அவற்றை விற்றர். அங்கு அவற்றிற்கு சிறிய கூடிய விலை கிடைத்தது. அரிசி மாவாக அறைக்கப்படும் மாரிக்காலத்தில், பண்ணை வேலைக்காக மேலும் ஒரு தொழிலாளியை வேலைக்கமர்த்திக்கொண்டார். ஆகவே அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் ஏழு பேருக்கு உணவு வழங்க வேண்டியிருந்தது. எனது குடும்பம் சிக்கனமாகவே உணவுப்பொருட்களை பயன்படுத்தியது. ஆனால் எப்போதும் அவை எங்களுக்கு போதுமான அளவாக இருந்தது.

எனக்கு எட்டு வயதான போது நான் ஒரு உள்ளூர் ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயின்றேன். 13 வயது வரை அங்கேயே தொடர்ந்து கல்வி பயின்றேன். அதிகாலையிலும் இரவிலும் நான் பண்ணையில் வேலை செய்தேன். பகலில் நான் கன்பூஷியன் அனலெக்ற்ஸ், நான்கு புராதன் இலக்கியங்கள் ஆகியவற்றை படித்தேன். எனது சீன ஆசிரியர் கடுமையான கட்டுப்பாட்டைப் பேணும் வகுப்பைச்சார்ந்தவர். வெகு கடுமையானவர். அவர் மாணவர்கலை அடிக்கடி அடிப்பார். இதன் காரணமாக, எனக்கு 10 வயதாக இருக்கும்போது நான் பாடசாலையை விட்டு ஓடிப்போனேன். வீட்டிலும் நான் அடிவாங்க வேண்டி வரும் என்பதால் நான் வீட்டிற்கு திரும்புவதற்கு பயப்பட்டேன். எங்கோ ஒரு சமவெளிப்பகுதியில் இருக்கும் என்று நான் நினைத்திருந்த நகரத்தை நோக்கி நான் நடங்தேன். அவ்வாறு மூன்று நாட்கள் அலைந்து திரிந்தேன். இறுதியில் எனது குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டேன். எனது பயணத்தின்போது ஒரு சுற்று வட்டப்பாதையில் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தேன் என்பதையும் வீட்டிலிருந்து ஒரு 8 லீ அளவுதான் எனது பயணம் முன்னேறியிருந்தது என்பதையும் பிற்பாடு அறிந்து கொண்டேன்.

நான் வீட்டுக்கு திரும்பிய பின்பு ஆச்சரியத்திற்குறிய வகையில் நிலைமைகள் ஓரளவு முன்னேற்றமடைந்தன. எனது தந்தையார் ஓரளவு புரிந்துணர்வோடு நடந்து கொண்ட அதேவேளை எனது ஆசிரியரும் சிறிது கட்டுப்பாடாக நடந்து கொண்டார். எனது ஆட்சேப நடவடிக்கையின் பெறுபேறு என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு வெற்றிகரமான வேலை நிறுத்தமாக அமைந்தது.

நான் சிறிதளவு கல்வியை பெற்றவுடனேயே குடும்பத்தின் கணக்குப்புத்தகங்களை நான் எழுதத்தொடங்கவேண்டும் என்று எனது தந்தையார் விரும்பினார். கணிதமானியை பயன்படுத்துவதற்கும் நான் பழகவேண்டும் என்றும் அவர் விரும்பினார். இதை எனது தந்தையார் வலியுறுத்தியமையால் இந்தக்கணக்குகளை இரவில் நான் செய்யத்தொடங்கினேன். அவர் ஒரு கடுமையான வேலை வாங்குபவர், நான் சோம்பியிருப்பதை அவர் வெறுத்தார். கணக்கு வேலைகள் ஒன்றும் இல்லாவிட்டால், பண்ணைக்கடமைகளில் என்னை அவர் ஈடுபடுத்தினார். அவர் ஒரு முன்கோபக்காரர், அவர் என்னையும் எனது சகோதரனையும் அடிக்கடி அடிப்பார். அவர் எங்களுக்கு எவ்வித பணத்தையும் தரமாட்டார். ஒவ்வொரு மாதம் 15ம் திகதியும் தனது தொழிலாளர்களுக்கு சலுகையாக அரிசியோடு முட்டையும் வழங்குவார், ஆனால் ஒருபோதும் இறைச்சி கொடுக்கமாட்டார். என்னைப்பொருத்தவரை எனக்கு முட்டையும் தரமாட்டார், இறைச்சியும் தரமாட்டார்.

எனது தாயார் ஒரு கருணை நிறம்பிய பெண்மணி, தாராள குணமும் இரக்க சிந்தனையும் கொண்டவர். தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருப்பார். அவர் ஏழைகளுக்காக இரக்கப்பட்டார். பஞ்ச காலங்களின் போது யாராவது அரிசி கேட்டுவந்தால், அவர்களுக்கு அவறை வழங்குவதை வழமையாக கொண்டிருந்தார். ஆனால் எனது தந்தையின் முன்னிலையில் அவ்வாறு அவரால் செய்ய முடியாது, அவர் தான தருமங்களை அனுமதிக்கவும் மாட்டார். இந்த விடயத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் பல தடவை சண்டை பிடித்திருக்கிறோம்.

எங்கள் குடும்பத்தில் இரண்டு குழுக்கள் இருந்தன, ஒரு கட்சியில் வீட்டு ஆளுனரான அப்பா இருந்தார். எதிர்க்குழுவில் நான் அம்மா தம்பி சில வேளைகளில் வீட்டு தொழிலாளியும் இருந்தோம். இந்த எதிர்க்கட்சியின் கூட்டு முன்னணியில் கருத்து வேறுபாடு ஒன்று இருந்தது. எனது தாயார் மறைமுகமான தாக்குதலை ஆதரித்தார். உணர்ச்சிகளை வெளிப்படையாகக்காட்டுவதையும் வெளிப்படையான புரட்சி முறைகளையும் கண்டித்தார். இதை சீன பண்பாட்டு முறை என்று அவர் கூறுவார்.

எனக்கு 13 வயதாக இருந்தபோது தந்தையாருடன் விவாதிப்பதற்கான, ஒரு வலிமைமிக்க எனது சொந்த விவாதக்கருப்பொருளை நான் கண்டுபிடித்தேன். அவரது பாணியிலேயே புராதன இலக்கிய நூலிலிருந்து நான் அவற்றை உணர்ந்திருந்தேன். என் மீதான என் தந்தையாரின் விருப்பமான குற்றச்சாட்டுகள், எனது பெற்றோர் மீது நான் காட்டும் அவமரியாதை, சோம்பேறித்தனம் ஆகியவையாகும். இதற்குப் பதிலுரையாக புராதன இலக்கிய நூலிலிருந்து நான் சில எடுத்துக்காட்டுகளைக் கூறினேன். அதில் மூத்தவர்கள் அன்பும் பாசமும் காட்டவேண்டும் என கூறப்பட்டிருந்தது. நான் சோம்பேறி என்ற குற்றச்சாட்டுக்கு பதிலுரையாக இளையவர்களைக்காட்டிலும் பெரியவர்கள் கூடுதலாக வேலை செய்யவேண்டும் என்றிருந்ததை எடுத்துக்காட்டி கூறினேன். அதோடு எனது தந்தையார் என்னைக்காட்டிலும் 3 மடங்கு வயது கூடியவர், ஆகையால் அவர் கூடுதலாக வேலை செய்யவேண்டும் என்று நான் கூறினேன். நான் அவரது வயதை அடையும் போது அவரைக்காட்டிலும் மேலும் உத்வேகத்துடன் பணியாற்றுவேன் என்று பிரகடனம் செய்தேன்.

தகப்பனார் தொடர்ந்து செல்வத்தைச் சேர்த்தார். அந்தச் சிறிய கிராமத்தில் அது ஒரு பெரிய பொக்கிசமாக கருதப்பட்டது. அவர் தானக மேலும் பல காணிகளை வாங்கவில்லை, ஆனால் அவர் ஏனைய மக்களுடைய காணிகளின் மீதான பல கடன் ஈடுகளைச்செலுத்தி அக்காணிகளைக் கையேற்றார். அவரது மூலதனம் 2000 அல்லது 3000 சீன டொலர்களாக உயர்ந்தது. (மாவோ சீனப்பணமான யுவான் என்ற சொல்லையே பயன்படுத்தினார். இந்தச்சொல் பெரும்பாலும் சீன டொலர் என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. 1890வது ஆண்டில் சீனாவின் கிராமப்புறத்தில் 1000 யுவான் காசாகக் கையிறுப்பானது ஒரு பெருந்தொகையாகக் கருதப்பட்டது)

எனது அதிருப்தி அதிகரித்தது. எங்கள் குடும்பத்தில் எழுந்த இச்சொற் போராட்டம் தொடர்ந்து விருத்தியடைந்தது. (மேலே குறிப்பிட்ட அரசியல் கலைச்சொற்களை தனது விளக்கங்களில் மாவோ நகைச்சுவையாக பயன்படுத்தினார். இந்த நிகழ்சிகளை நினைவுகூறும் போது சிரித்துக்கொண்டே கூறினார்) ஒரு நிகழ்ச்சி எனக்கு விசேடமாக நினைவிலிருக்கிறது. எனக்கு வயது 13ஆக இருந்தபோது எனது தந்தையார் பல விருந்தினர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார். அவர்கள் அங்கு இருக்கும்போது எனக்கும் தந்தையாருக்கும் இடையே ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அவர்கள் அனைவர் முன்னிலையிலும் என்னை சோம்பேறி பிரயோசனம் இல்லாதவன் என்று அப்பா ஏசினார்.இது எனக்கு கோபமூட்டியது நானும் அவரை ஏசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். அம்மா என்பின்னால் ஓடி வந்து என்னை வீட்டுக்கு திரும்புமாறு இணங்கவைக்க முயன்றார். நான் குளத்தின் விளிப்பிற்குச்சென்று யாரவது என்னை நெருங்க முயன்றால் குளத்தில் குதிக்கப்போவதாக அவரை அச்சுறுத்தினேன். இந்த சூழ்நிலையில் கோரிக்கைகளும் எதிர்கோரிக்கைகளும் உள்நாட்டு உத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விடுக்கப்பட்டன. நான் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் நிலத்தில் விழுந்து வணங்கவேண்டும் என்றும் அப்பா வலியுறுத்தினார் நான் முழங்காலை தாழ்த்தி வணங்குவதாகக் கூறினேன். அதுவும் அப்பா என்னை அடிக்கக்கூடாது என்று உறுதியளித்தால் தான் அவ்வாறு செய்வதாகக் கூறினேன். இதன் மூலம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இவ்வாறு நான் வெளிப்படையான கிளர்ச்சி மூலம் எனது உரிமைகளை பாதுகாக்க முனையும் போது அவர் விட்டுக்கொடுத்தார், ஆனால் நான் பல்கீனமாகவும் கீழ்படிவாகவும் நடந்தால் என்னை அவர் ஏசவும் கூடுதலாக அடிக்கவுமே செய்தார்.

இதன் பிரதிபலனாக அப்பாவின் கடுமை இறுதியில் அவரைத்தோற்கடித்தது. நான் அவரை வெறுக்கத்தொடங்கினேன். நாங்கள் அவருக்கு எதிராக ஒரு உண்மையான ஐக்கிய முன்னணீயை உருவாக்கினோம். அந்த வேளை இது எனக்கு பெரும்பாலும் நன்மையாகவே முடிந்தது. இது என்னை எனது வேலைகளில் மிகவும் கவனமும் திறமையும் உள்ளவனாக்கியது. அவர் என்னை குறைகூறி தண்டிப்பதற்கு இடம்தராத வகையில் எனது கணக்குப்புத்தகங்களை கவனமாக எழுதவைத்தது. எனது தந்தையார் இரண்டு வருடம் பாடசாலையில் பயின்றிருந்தார், அத்துடன் கணக்குப்புத்தகங்கள் எழுதுவதற்குப் போதுமான கல்வியும் கற்றிருந்தார். எனது தாயார் முழுமையான கல்வியறிவு இல்லாதவர். நான் புராதன இலக்கிய நூல்களை படித்துள்லேன் ஆனால் அவறை வெறுத்தேன். பண்டைய சீன கற்பனைக்கதைகளையே நெஆன் விரும்பிப்படித்தேன். விசேடமாக புரட்சிகள் பற்றிய கதைகளை விரும்பினேன். யோ பெய் சுவான் (யோ பெய்யின் வரலாற்றுத்தொகுப்பு) சுய் ஹூ சுவான் (தண்ணீர் விளிம்பு) பான் ராங் (ராங்கிற்கு எதிரான புரட்சி) சான் குவோ (மூன்று முடியாட்சிகள்) சி யூன் சீ (மேற்குப்பகுதியில் பயணங்கள்) ஆகிய நூல்களை நான் படித்தேன். வெகு இளமையிலேயே இந்த தடை செய்யப்பட்ட புத்தகங்களை தீய புத்தகங்கள் என்று வெறுத்த எனது முதிய ஆசிரியரின் தீவிர கண்காணிப்பின் மத்தியிலும் இவற்றை நான் படித்தேன். இவற்றை நான் பாடசாலை நேரங்களிலும் படித்தேன். ஆசிரியர் என்னைக் கடந்து செல்லும் போது அவற்றை புராதன இலக்கிய நூலால் உருமறைப்பு செய்து கொள்வேன். இதுபோன்றே எனது பாடசாலை நண்பர்களும் படித்தார்கள். நாங்கள் இந்தக்கதைகளை மனதில் இருத்தக்கூடிய அளவிற்கு படித்தோம். இவற்றைப்பற்றி பல தடவைகள் விவாதித்தோம். கிராமத்தில் உள்ள முதியவர்களைக்காட்டிலும், இந்த நூல்களை நாங்கள் அதிகம் படித்திருந்தோம். அந்த முதியவர்களும் இந்தக்கதைகளை விரும்பினார்கள். அத்தோடு இந்தக்கதைகளை அவர்கள் எங்களோடு பகிர்ந்து கொள்வதுமுண்டு. மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வயதில் படித்த இந்த நூல்களினால் நான் வெகுவாக ஆளுமைப்படுத்தப்பட்டேன் என்று நம்புகிறேன்.

 

http://senkodi.wordpress.com/2010/01/21/mao-3/