தளபதிகளும் தவறு செய்வர்!
அரசின்
படையின்
பாடசாலையின்
பல்கலைக்கழகத்தின்
இணையதளத்தின் -  ஏன்
உலகின் ஒவ்வொன்றின்
அதிபதிகளும்
தவறுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள் அல்லவே!


சிவகேரம் எனும்
“பேர்”-ஆசிரியர் - இதை
சமூக விஞ்ஞானத்தில்
காணலையோ?


இனியொரு நாவலனுக்கும்
தேசம்நெற்றின் ஜெயபா(வ)லனுக்கும்
இவர்களின் இன்னோரன்னோருக்கும்
சாமரை வீசுகின்றார்!
தேசம்நெற்றில் - உங்களை
உங்களைப் போன்றோரை
உங்கள் தமிழ் இணையத்-தள-பதி
கீபோட்
சொகுசு மார்க்சிஸவாதி என்கின்றார்


நீங்களும், - நாவலனும்,
ஜெயபாலனும், - மே 18-காரர்களும்
புலிகளிடம் கோருவதையே,
ரயாகரன் - தமிழரங்கத்தில்
உங்களிடம் - உங்கள்
இணைத்-தள-பதிகளிடம்
கோருகின்றார். - இதில் 
தவறென்ன கண்டீர் – கீபோட்
சொகுசு – மார்க்சிஸப் 
“பேர்”-ஆசிரியரே!