Language Selection

பிரபாகரனுக்கு முந்தைய காலத்தின் அனைத்து மனித விரோத சமூக விரோத தவறுகளுக்கும், புலிகளே பொறுப்பு என்கின்றனர். இப்படி கூறுகின்ற அரசியல் பொதுத்தளத்தில், எதிர்ப்புரட்சி அரசியல் ஒரு அரசியல் கூறாக மீளவும் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தான் இனியொருவும், அசோக்கும் கூட, தமக்குத்தாமே லாடமடித்து அரசியல் வித்தைகாட்ட முனைகின்றனர். இதற்கமைய பொய், புரட்டு பித்தாலாட்டம், சூழ்ச்சிகள் இன்றி, இந்த வண்டியை ஓட்ட முடியாத வண்ணம் கடந்தகால அரசியல்.

 

அசோக்கின் இந்த கட்டுரை மக்களுக்காக போராடுபவர்கள் முன், ஒரு பலமான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. கடந்த காலத்தில் மக்களுக்காக போராடிய மனித வரலாற்றை, அதன் போர்க்குணாம்சத்தை கொச்சையாக்கி, அதை மிக இலகுவாக தமக்கு ஏற்ப சேறடிக்கின்றதும், அதைத் திரித்து புரட்டுகின்ற போக்கையும், அதன் எதிர்ப்புரட்சிகர அரசியல் குணாம்சத்தை எம்முன்னால் எடுத்துக் காட்டுகின்றது. கடந்தகால வரலாற்றையும், அதன் ஆவணங்களையும் தேடி முன்வைக்க வேண்டிய பாரிய பொறுப்பை, எமக்கு உறைக்கும் வண்ணம் முகத்திலறைந்து கூறியுள்ளது. செய்யவேண்டிய அரசியல் பணியில் (இதை நாம் முன்பே தொடங்கி இருந்தோம்) இதுவும் முதன்மையானது என்பதை, இந்தப் புரட்டான புரளிக் கட்டுரை எடுத்துக்காட்டியுள்ளது.

 

புலிகள் கடந்தகால வரலாறுகள் அனைத்தையும் சேர்த்துதான், தம்முடன் அழித்தனர். இதனால் வரலாற்றை எப்படி திரிக்கலாம் என்ற துணிச்சல் பலருக்கு. உதாரணமாக தீப்பொறி, புளாட்டின் மனித விரோத சமூக விரோதத்திற்கு எதிராக, அதன் உட்படுகொலையில் இருந்து தப்பியோடிய போது, அவர்களை கொல்ல யார் யார் அவர்களுக்கு எதிராக எப்படி எங்கே யாருடன் நின்றனர் என்பதை சொல்லும் நிலையில், இதன் அரசியல் வரலாற்றை தொடர்ச்சியுடன் கூட யாரும் இன்று இல்லை. இதைப் பயன்படுத்தி இன்று வரலாற்றை திரிக்கின்றனர். இதை நாம் இனியும் அனுமதிக்க முடியாது.

 

கடந்தகாலத்தின் மனித விரோத, சமூக விரோத அரசியல் போக்குகள் புலிகளுடன் மட்டும் இருந்ததல்ல. அப்படி கூறுவது காட்டுவது முற்றிலும் தவறானது. இதுவே திட்டமிட்ட ஒரு எதிர்ப்புரட்சி அரசியலாகும்.

 

கடந்தகாலத்தின் மனித விரோத, சமூக விரோத அரசியல் போக்குகள்

 

1.புலிகள் எல்லாவற்றையும் அழித்து அதன் ஏக பிரதிநிதிகளாக இருந்ததால், அவர்கள் மேல் மட்டும் குற்றம்சாட்டுவது புலியல்லாத அரசியல் போக்காக இருந்தது. இதை நாம் மறுத்து வந்திருக்கின்றோம்.

 

2.மற்றொரு பிரிவு அரசுடன் நிற்கின்ற கூலிக் குழுகளின் ஊடாக மனித விரோத, சமூக விரோத அரசியல் போக்குகளை இனம் காட்ட முனைகின்றனர். இதையும் நாம் மறுத்து வந்திருகின்றோம்.

 

3.இவ்விரண்டையும் கடந்து மனித விரோத, சமூக விரோத அரசியல் போக்குகள், மேலும் இரண்டு பிரதான தளத்தில் இயங்கியது.

 

1.புலிகள் மாற்று இயக்கங்களை அழிக்க (1983-1986) முன்னமே, அனைத்து பெரிய இயக்கங்களும் மனித விரோத, சமூக விரோத அரசியல் போக்குகளையே தங்கள் அரசியலாக நடைமுறையாக கொண்டிருந்தனர். (இது இந்த அமைப்புகளில் இருந்த அனைவரையும் குற்றம் சாட்டுவதல்ல. இனியொருவும், அசோக்கிசமும் தம்முடன் இருந்த ஆண் குற்றவாளிகளை பாதுகாத்து, தம்மை பாதுகாக்க நாம் பெண்களைக் குற்றம்சாட்டுவதாக கூறினர். ஆனால் நாங்கள் ஆண்களே இதற்கு பல வழிகளில் முயன்றதாகவே கூறினோம். எந்த பெண்ணையும் இங்கு குறிப்பிடவில்லை. இப்படியிருக்க இதை திரித்துக் காட்டி அரசியல் செய்வது போல், இங்கும் அனைவர் மேலும் குற்றம் சொல்வதாக சொல்ல முற்படுவார்கள். இந்த வங்குரோத்து அரசியலை நாம் பின்னால் விரிவாகப் பார்ப்போம்.)

 

2.புலிகள் அல்லா பிரதேசங்களில் (கொழும்பு முதல் புலம்பெயர் நாடுகள் வரை) உருவான மாற்று அரசியல் தளத்திலும், மனித விரோத, சமூக விரோத அரசியல் போக்குகள் இருந்தன. (இதுவும் அனைவரையும் குற்றம் சாட்டுவதல்ல)

 

இங்கு நாம் மட்டும் தான், இந்த நான்கு பிரதான அரசியல் தளத்தில் இயங்கிய எதிர்ப்புரட்சி கூறுகளை அரசியல் ரீதியாக வகைப்படுத்தி, அதற்கு எதிராக கருத்துரைத்து போராடுகின்றோம். இதுவே எமக்கும் மற்றவர்களுக்குமான, இணக்கம் காண முடியாத அரசியல் முரண்பாடு. இதைத்தான் அசோக் இரயாகரனின் "அரசியல் தற்கொலை" என்கின்றார். இதனால், இந்த அரசியல் தற்கொலை தான் எமக்கும் விளைவாக கிடைக்கும் என்றால், அன்று இதற்காக போராடி தம் உயிரை இழந்தவர்களுக்கு காணிக்கையாக்கி "அரசியல் தற்கொலை" செய்ய தயாராகவே இருக்கிறோம்.

 

கடந்த எம்மைச் சுற்றிய  வரலாறு, மனித அவலத்தை விளைவாக்கியது. இந்த அவலத்தை அரசியலாக இயக்கியவர்கள், தங்களை சுயவிமர்சனம் செய்யாது புதிய வே~ம் போட அனுமதிக்க முடியாது. அரசியலில் ஈடுபடுவர்களின் நேர்மையற்ற தனம், அதைச் சுற்றி கட்டமைக்கும் அயோக்கியத்தனம், மனித அவலத்தை கொச்சைப்படுத்தி தங்கள் புதிய எதிர்ப்புரட்சி அரசியலுக்கு ஏற்ப லாடமடிக்க முனைகின்றனர்.

 

மனித அவலத்தை உருவாக்கி மனித விரோத சமூக விரோத அரசியலுக்கு எதிரான போராட்டம் கடந்தகாலத்தில் நடத்துள்ளது. அது எதைக் கோரியது? என்ன அரசியலை முன்வைத்தது? அதை யார் இன்னும் முன்னிறுத்துகின்றனர்? அது சந்தித்த நெருக்கடிகள் பல. அது எதிர்கொண்ட அவலங்கள் எல்லையற்றது. தன் போராட்டத்தின் போது சந்தித்த மரணத்தை, எதிர்ப்புரட்சி கும்பல் அதை "தற்கொலை" என்றும், அர்த்தமற்ற மரணங்கள் என்றும் கேலிசெய்யலாம். இந்தப் போராட்ட வரலாற்றை, வரலாற்றில் இருட்டடிப்பு செய்யலாம். அதைத் திரித்து புரட்டி, இதற்கு எதிரான தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி அரசியல் வரலாற்றை இதுவாக இட்டுக்கட்டி காட்டலாம்.

 

ஆனால் எதிர்ப்புரட்சிக்கு எதிரான கடந்தகால அரசியலும், அதன் தியாகமும், புரட்சியாளர்களின் ஆயுதம். அவர்களையும், அவர்களின் அரசியலையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு புரட்சியாளனின் முதன்மையான இன்றைய அரசியல் கடமையாகிவிட்டது. இன்று எம்மை சுற்றி இயங்கும் எதிர்ப்புரட்சி வரலாற்றுப் போக்கினால், எம் பணிகள் இதனால் பலமடங்காகி வருகின்றது. இது "அரசியல் தற்கொலை" என்கின்றனர். ஆம் அதை நாம் செய்யத்தான் போகின்றோம். சவப்பெட்டியை தயார் செய்யவும்.

 

தொடரும்

 

பி.இரயாகரன்
29.11.2009

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ