கடந்த வருடம் குபஃகபா என்ற கியூபா நாட்டு இசைக் கலைஞர் முதன் முதலாக நியூயோர்க் நகரில் தனது இசைக் கச்சேரி முடிந்த பின்னர் கியூபாவுக்கும் தனக்கும் இடையேயுள்ள பகைமையான உறவுகளைக் காரணம் காட்டி, அக் கலைஞருக்குச் சேர வேண்டிய சம்பளத் தொகையை கொடுக்க விடாது தடுத்து நிறுத்தியுள்ளது அமெரிக்கா அரசாங்கம். இச் சாதாரண உதவியை தட்டிப் பறித்திருக்கும் அமெரிக்காதான் உலகெங்கிலும் மனித உரிமைகளின் ஏகபோக காவலனாக தம்பட்டம் அடித்து வருகிறது. என்ன வேடிக்கை!