ஜுலை 7, 2009 அன்று தாம்பரம் அருகேயயுள்ள மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யா சாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘குரு பூர்ணிமா’ என்று சொல்லி ஆசிரியரின் கால்களை மாணவர்களை கழுவி விட வைத்துள்ளனர் (தினமணி 07/07/2009).
முதலில், எதற்காக மாணவர்கள் ஆசிரியரின் காலை கழுவி விட வேண்டும்?
வேறு எந்த நாட்டிலாவது இது மாதிரி கொடுமைகள் நடைபெறுவதுண்டா?
இது மனித தன்மையுள்ள செயலா?
உண்மையில், ஆசிரியர் மாணவனை அன்பாக நடத்த வேண்டுமா? அல்லது அடிமையாக நடத்த வேண்டுமா?
கல்வியில், பார்பனியத்தின் கொடுமைக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?
இந்த நவீன காலத்திலே இப்படி என்றால், கடந்த 2000 வருடங்களாக மக்கள் தொகையில் 95 சதவீதமாக ஆக உள்ள உழைக்கும் மக்கள் பட்ட கொடுமைகள் கொஞ்சமா?
http://rsyf.wordpress.com/2009/07/31/ஆசிரியரின்-காலை-மாணவர்கள/