நாடார் குல சிங்கம் என்ற
சுவரொட்டிகள் இரங்கல்
தெரிவிக்கின்றன உனக்கு
முத்துக்குமரா
சாதிபெருமையில் நீ
வாழவில்லை
சாதிபெருமை சொல்லி
நீ சாகவில்லை

தெளிவாய் கூறிவிட்டாய்
தானொரு
தமிழ் சாதியென்று
அதன் மூலம்
உன் தியாக சூரியனை
மறைக்க முயன்ற சாதி
மேகத்தை
உன் மரணசாசன சூறைக்
காற்றால் கலைத்துவிட்டாய்!

பிணம் திண்ணும் கழுகுகளை
போல, ஓட்டுபொறுக்கிகள்
உன் தியாகத்தை சுற்றி சுற்றி
வருகின்றனர்.
முத்துக்குமரா
“விடமாட்டோம்
புரட்சிகர போராட்டம் என்ற
கத்தியை கொண்டு
அக்கழுகுகளை வெட்டி
கூறுபோடுவோம்”!

பற்றி எரியும் ஈழத்தை
அணைக்க நீ பற்றி எரிந்தாய்
முத்துக்குமரா
உன் தியாக சுடர் பற்றிய
மாணவர் போராட்டத்தால்
இனி தமிழகமே பற்றி எரியும்!

ஈடுயிணையற்ற
உன் இழப்புக்கு
இழப்பீட்டு தொகை
2 இலட்சமாம்
அறிக்கை மலம் அள்ளி
வீசுகிறான் அய்யோக்கியன்
கருணாநிதி
முத்துக்குமரா,
கந்தல் துணியால் கஞ்சி
பானையை மூடலாம்
பந்தல் துணியால் பசிபிக்
கடலை மூட முடியாது!

வறுமையும் வருமானமின்மையும்
அல்ல
ஈழத்தமிழரின் அவலமே
உன்னை வாட்டியது
முத்துக்குமரா,
அதுதான் உன் தியாகத்தை
உலகிற்கு அடையாலம்
காட்டியது
மூங்கில் காடாய் கிடந்த
மாணவர் வர்க்கத்திடம்
போராட்ட தீயை மூட்டியது
உணர்வற்று கிடந்த
நடமாடும் பிணங்களுக்கு
தமிழ் உணர்வை ஊட்டியது!

பற்றி எரியும் போது
அய்யோ அம்ம
என்று கதறுவார்கள்
முத்துக்குமரா,
நீயும் கத்தினாய்
அய்யோ அம்மா
எறிகிறதே எறிகிறதே
ஈழம் பற்றி எறிகிறதே என்று
தன் வலி பொறுத்து
தாயக குமுறலை உன்
வாய் பிளிர்ந்தது.
மாவீரனே உன் தியாகம்
ஈழத்தின் விடுதலை தாகம்!

கோழைத்தனத்தில்
துணிச்சல் மிக்க வடிவமே
தற்கொலையாம்
முத்துக்குமரா,
நீ செய்தது தற்கொலை அல்ல
ஈழததமிழ் மக்களின்
சுயநிர்ணய உரிமைக்கான
தற்கொடை
உன் கொடையால்
வெகுண்டெழும் உணர்வு
படை
அது இந்திய மேலாதிக்கத்தை
முறியடிக்கும் வெற்றிபடை!

ஒரு நாள் கூத்தல்ல
உன் தியாகம்
முத்துக்குமரா,
மெச்சுவிட்டு பின்
மறந்துபோவதற்கு
தமிழரின் வரலாற்று மூளையில்
அது நீங்காத நினைவலைகள்!

உயிரோடு இருந்தபோது
ஈழவுணர்வில் எரிந்தாய்
உயிர்விடுபோது
தீ பற்றி எரிந்தாய்
எரிந்து முடித்த பின்
தமிழகத்தின் போராட்டமாய் நீ
பற்றி எரிகிறாய்
முத்துக்குமரா
அரசின் அடக்கு
முறையாலும்
ஊடக மறைப்பு முறையாலும்
அணைக்க முடியாத
அணையா தீபம் நீ!

கொக்கரித்த பார்ப்பன
கும்பலின் கொட்டம்
சத்தம் கேட்கவில்லை
முத்துக்குமரா,
அவையின் குரல்வளையை
அறுத்து எரிந்துவிட்டது
உன் உயிராயுதம்!

உன் அறை தோட்டத்தில்
பல புத்தக மலர்கள்
முத்துக்குமரா,
அனைத்தும் மார்க்சிய
மலர்களாய் இருந்திருந்தால்
21ம் நூற்றாண்டின்
பகத்சிங்காய் எங்கள்
மனங்களில் வாசம்
வீசியிருப்பாய்

ஆனாலும் என்ன?
ஒப்பற்ற தியாகியாய்
உன்னை நாங்கள்
முகர்ந்து கொள்கிறோம்!

40 மலம் திண்ணும்
பன்றிகள்
234 இரத்தம் குடிக்கும்
ஓநாய்கள்
102 நகராட்சி பேய்கள்
12500 கிராமத்து
தருதலைகள்
இவைகளின் அடியாட்கள்
அல்லக்கைகள் யென
யாராலும் யெழவைக்க
முடியாத மரணித்து
கிடந்த மாணவர் பேரெழுச்சியை
தனியொரு மனிதாய்
எழவைத்தாய்
முத்துக்குமரா,
இனி
ஈழத்தை மூடியுள்ள
இருள் விலகிவிடும்!

- நக்சல்பாரியன்