Language Selection

1983 க்கு பின்பாக தமிழக அரசியல் தளத்திலான பிழைப்புவாதம், ஈழத்தமிழர் விவகாரம் ஊடாகவே நடந்தேறி வந்துள்ளது. தமிழன், தமிழினவுணர்வு என்ற முகமூடியை தரித்துக்கொண்டு, ஈழ ஆதரவு போராட்டங்கள் ஊடாக பிழைத்துக்கொள்ளவும் தமக்கேற்ப கூலிக் குழுக்களை உருவாக்கினர்.

 

 

ஆயுதம், பணம், பயிற்சி, அரசியல் என்று, ஒரு இனத்தின் சொந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தி, வெறும் கூலிக் குழுக்களின் போராட்டமாக ஈழ ஆதரவு என்ற பெயரில் சிதைத்தனர். இப்படி உருவான கூலிக் குழுக்கள், சொந்த மக்களை ஒடுக்கத் தொடங்கியது.

 

இதன் பின்னணியில் தான் அன்று இந்திய அரசு முதல் இன்று போலிக் கம்யூனிஸ்டுகள் வரை இயங்குகின்றது. இப்படி ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரான போராட்டத்தை உருவாக்கியதன் மூலம், இந்த மனிதவிரோத செயலை செய்தனர். அதையே அரசியலாக ஊக்குவித்தனர். இவர்கள் கொடுத்த ஆதரவு, எதிர்ப்பு என்று அவை எந்த நிலையில் இடம்மாறினாலும், இது ஈழ மக்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. அதாவது இவர்கள் எதைச் செய்தாலும், அது ஈழத்தமிழ் மக்களுக்க எதிராகவே இருந்துள்ளது.

 

ஈழ ஆதரவு பிழைப்புவாதிகளின் விருப்பம் மற்றும் துணையுடன் அத்துமீறி ஆக்கிரமித்த இந்தியா, இதன் மூலம் புலிகளை அவமானப்படுத்தியும் ஈழத் தமிழ்மக்களை படுகொலையும் செய்தனர். இதனால் ராஜீவ் புலிகளால் கொல்லப்பட்டார். இதன் பின் ஈழ ஆதரவு பிழைப்புவாதம் எதிர் நிலைத்தன்மை பெற்றதுடன், புலி எதிர்ப்பு ஆதரவு என்று குறுகி இரண்டு அணிகளாகியது. இங்கு பிழைப்புவாதம் சார்ந்து வெளிப்படையாகவே புலியெதிர்ப்பு, புலியாதரவு என்று தன்னை கன்னை பிரித்துக் கொண்டது. இதற்கூடாக தம் பிழைப்பு வாதத்தை நடத்தத் தொடங்கியது. தமிழ் மக்களை இவை கண்டு கொள்ளவில்லை.

 

இவ்விரண்டும் இந்திய மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டு இயங்கியதுடன்,  புலியை ஆதரிக்கக் கோரியது அல்லது எதிர்க்கக் கோரியது. இப்படி புலியைச் சுற்றி இயங்கியது,  இந்த பிழைப்புவாதம். இது ஈழத் தமிழ் மக்களையிட்டும், அதன் நலனில் இருந்தும், அன்று முதல் இன்று வரை சிந்தித்தது கிடையாது. தன் சொந்த மக்களை ஏமாற்றி பிழைக்கும் இந்தக் கும்பல், அதே போல் ஈழ மக்களையும் நட்டாற்றில் விட்டுத்தான் பிழைத்தது.    

 

இன்று புலிகள் தாம் தப்பிப்பிழைக்க, ஈழ மக்கள் கொல்லப்படுவதாக காட்டி நடத்தும் பலி அரசியலை வலிந்து செய்யத் தொடங்கினர். எவ்வளவு மக்கள் பலியாகின்றனரோ, அதுவே தாம் தப்பிப்பிழைக்கும் அரசியல் பிரச்சாரத்துக்க உதவும் என்பது புலி அரசியல். அதற்கு அமைய மக்களை பலியிட்டு வரும் புலிகள், தமக்கு ஆதரவான இந்திய விஸ்தரிப்புவாதிகளின் துணையுடன் ஈழத்து எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கினர்.

 

இப்படி உருவான அரசியல் எழுச்சி, ஈழ ஆதரவு புலிப் பிழைப்புவாதிகளுடன் மட்டும் நிற்கவில்லை. மாறாக புலியெதிர்ப்பு பிழைப்புவாதிகளையும், அம்பலப்படுத்தியது. இதற்கு அப்பால் ஈழ மக்களுக்கான ஆதரவு அலை, படிப்படியாக இந்திய அரசுக்கு எதிரான, அதன்  விஸ்தரிப்புவாதத்துக்கு எதிரானதும், பிழைப்புவாதத்துக்கு எதிரான அரசியல் போராட்டமாக மாறியுள்ளது. இன்று அது தேர்தல் புறக்கணிப்பு முதல் தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டமாக மாறி வருகின்றது. இதில் இனவுணர்வும், தேசிய உணர்வும் கொண்ட அலையை, சர்வதேசிய உணர்வு கொண்ட ஒன்றாக கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு சர்வதேசியவாதிகளின் உடனடிக் கடமையாக உள்ளது.  

    
 
இந்த நிலையில் புலி ஆதரவு கொண்ட கட்சிகள், தேர்தல் பிழைப்புவாதத்தில் தம்மை மூழ்கடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக தேர்தல், ஊசலாட்டத்தை சந்தர்ப்பவாதத்தை, பிழைப்புவாதத்தை உருவாக்கி வருகின்றது. இதற்குள் உள்ள தமிழின உணர்வாளர்களை, தேர்தலை பகிஸ்கரிப்பதா இல்லையா என்ற ஒரு முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கின்றது.

 

இந்த இந்தியத் தேர்தலை குறைந்தபட்சம் உண்மையான தமிழின உணர்வாளர்கள் யார் என்பதை, அவர்கள் எடுக்கும் முடிவுகள் தான் இன்று தீர்மானிக்கின்றது. புலி ஆதரவு ஈழ ஆதரவு பிழைப்புவாதத்தை, ஒரு அணியில் நின்று தேர்தலில் பிழைப்பதுதான் மாற்று என்கின்றனர். புலி சார்பு ஈழ ஆதரவு குரல்கள் எல்லாம், இப்படி பம்முகின்றது. ஆனால் இதை வைத்து பிழைத்த பிழைப்புவாதிகள், இதனால் பிழைப்புக்கு வழியில்லை என்பதால் தம் கூட்டாளிகளை களத்தில் அடையாளத்துக்காகவேனும் போராடக் கோருகின்றனர். தேர்தல் பிழைப்புக்காக nஐயலலிதா திடீரென களத்தில் இறங்குகின்றார். பிழைப்புக்கான தேர்தல் கூட்டு, போல் ஈழ ஆதரவு கூத்துகள்;. இவை எல்லாம் எம் மக்களின் பிணத்தில் மேல் அரங்கேறுகின்றது.

 

இவர்கள் அமைக்கும் எந்தக் கூட்டும், இந்திய விஸ்தரிப்புவாதத்தின் அரசியல் எல்லைக்குள் ஈழத்தமிழனை ஒடுக்கவே செய்யும். இதற்கு மாறாக இந்தப் போலியான பிழைப்புவாத ஆளும் வர்க்கத்தின் தேர்தலை புறக்கணித்து, புரட்சிகரமான வழியில் தேர்தல் பகிஸ்கரிப்பதை தம் அரசியலாக கொண்டு மக்களுக்காக போராடுவது அவசியம். இதன் மூலம்தான், ஈழ தமிழ் மக்களுக்கு, தமிழக மக்கள் அரசியல் உணர்வுடன் உதவிவிடமுடியும்.  

 

பி.இரயாகரன்
07.03.2009

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ