"தீபம் தொலைக் காட்சியில் இரண்டு நபர்கள் அரசியலுரையாடலாகத் தோன்றுகிறார்கள்,அவர்களில் ஒருவர் மிகப்பெரிய நீண்ட மீசையோடும் மற்றவர் முழுவதுஞ் சவரஞ் செய்தவராக முகத்தை வைத்திருக்கிறார்.இவர்களது கதையுள்"இலங்கை அரசு இவ்வளவு இனச் சுத்திகரிப்பைச் செய்துபோட்டது,இதுமாதிரி இனச் சுத்திகரிப்பு நிகழ்ந்த கொசவோ

 தனிநாடானமாதிரி ஈழத்தையும் பிரித்தானியா தலையிட்டுப் பிரிக்க இதுதாம் தருணம்" என்கிறார்கள்.புலிகள் எதை விரும்பினாகளோ அது வன்னியில் நடக்கின்றது.எனினும்,பிரித்தானியா ஈழம் பிரிக்குமெனும் உலக அரசியலிருக்கே இதுதாம் தமிழர்களின் அறிவை அளப்பதற்கான அளவுகோலென்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை!"


கம்பூச்சியா குறித்த ஊகங்களினதும்,அச்சத்தினதும் நடுவே நடந்தேறும் யுத்தக் கிரிமினல்களின் வழக்குக் கடந்த முப்பாதாண்டுகளுக்கு முன்னான பொல் போர்ட் கம்பனியினது இலட்சக்கணக்கான மனிதப்படுகொலைகள் குறித்து விசாரிக்கிறது.இது, கடந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான கிரிமினல் நடாத்தை.1975 ஏப்பிரலிலிருந்து 1979 ஜனவரி வரைக்குள் "போலிக் கம்யூனிசத்தின்"பிறப்பில் வீழ்ந்தப்பட்ட மக்கட்டொகை:1.7 மில்லியன்.கம்பூச்சிய மக்கட்டொகையில் காற்பங்கினர் "களையெடுப்பு"என்ற உதவாக்கரை வார்த்தையின் உதவியோடு சொந்த மக்களைக் கொலைக்குள் தள்ளியது கம்பூச்சிய அன்றைய அரசு.

 

இதன் உச்சபட்ச விசாரணைகள் ஆரம்பித்திருக்கும் வேளையில்,இலங்கையில்-உலகத்தில் எதனெதன் பெயராலோ மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.ஈராக்கிலும்,அவ்கானிஸ்தானிலும் மற்றும் சோமாலியாவிலும்,கொங்கோவிலும் இலட்சக்கணக்காக மக்களைக் கொன்று குவித்த அமெரிக்க-மேற்குலக அரசுகளின் கம்பனிகளையும் அவர்களது தலைமைகளையும் எவர் தண்டிப்பார்? இன்னும், பல நூரன்பேர்க்குகள் ஆரம்பிக்கப்பட வேண்டிய இந்தக் காலத்தில் இலங்கையில் இரண்டு யுத்தப் பிரபுகளுக்குப் பின்னே அணிவகுத்துள்ள அந்நிய அரசுகள் இவ்கிரிமினல்களுக்கூடாக இலங்கை வாழ் மக்களில் 10 வீதமானர்களை கடந்த கால் நூற்றாண்டுக்குள் கொன்று தள்ளியபடித் தொடர்ந்தும் மனிதப் படுகொலையைத் தீவிரமாக்கியுள்ளனர்.இதற்கு"ஈடுவிடுதலை"என்று ஒருவனும் மற்றவன் "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்றும்-அமெரிக்கக் கொடுங்கோலரின் கொலைக்கார வாசகத்துடனும், இலங்கையை குருதியாற்றுக்குள் அமிழ்த்தியபடி அந்நியச் சேவையைக் கறாரகச் செய்யத் தமது தரப்பு நியாயங்களை எதெனதன் பெயரால் விளக்குகிறார்கள்.


"Hundreds of civilians have now lost their lives. The situation for families
trapped in between the fighting parties is horrific. Both sides should stop
their operations long enough to allow the civilians to leave and aid to reach
those who can't leave", said Yolanda Foster.


http://www.unhcr.org/refworld/country,,,,LKA,4562d8cf2,4993ea0dc,0.html


இந்த இடருக்குள் இவ் அரசுகள்-உலகங்கள் மக்களின் தலையில் மட்டும் குண்டுகளைப் பொழியவில்லை.தொடர்ந்து அனைத்து வாழ்வாதாரங்கள்மீதும் குண்டுகள் தினமும் பொழியப்படுகிறது.இன்றைய பொருளாதார நெருக்கடி இன்னும் பாரிய யுத்தங்களைவேண்டி நிற்கிறது.தமிழர்களைக் காப்பதற்காகத் தமிழ் தலைமைகள் வேண்டிநிற்கும் உலக நாடுகளில் தினமும் பொருளாதாரத்தின்மீது குண்டுகள் பொழிந்து சிதறுகிறது!அவர்கள்,விழி பிதுங்க தலையில் பித்தம் ஏறப் பிதற்றுகிறார்கள்.ஒவ்வொரு யுத்தத்தினதும் பின்னே ஒளிந்திருக்கும் காரணி பொருளாதார நலன் என்பதும் அங்கே வர்க்க ரீதியான யுத்த நடாத்தையே நிலவுவதாகவும் மார்க்சியம் குறித்துரைக்கிறது.இதைத் தாண்டி, யுத்தங்கள் குறித்து ஆய்வைச் செய்து வேறொரு முகமூடியைத் தேசத்தினதும்,தேசியத்தினதும் பெயரால் பரப்புரை செய்தவர்கள் வந்து நிற்கும் இடம் இன்று தமிழ்பேசும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.பருப்புக்கும்,சர்க்கரைக்கும் இந்தியாவைத் தங்கி நிற்கும் ஒரு தேசம், தனது மக்களுக்குச் சுதந்திரமான தேசியப் பொருளாதாரத்தைக் கவிட்டுவைப்பதைத்தவிர வேறெதைக் கொடுக்கும்?நில ஆக்கிரமிப்புக்கும்,இன அழிப்புக்கும் உட்பட்ட தமிழ்பிரதேசத்தினது இருப்புக்கு, இன்றுவரை மக்கள் செத்துவருவதென்பதில் மேலோட்டமாகவிருக்கும் நியாயம் அதன் உட்புகுந்திருக்கும் நலனினது வெளியில் "எப்போதும்" உயிர்ப்பலி மக்களது விடுதலைக்கானதென்பது தவறாகவே பார்க்கப்படுகிறது.இங்கு எந்தவொரு மண்ணும் எவருக்கும் நிலையானது இல்லை!நீ வருவாய் போவாய்,நிலம் இருக்கும் வேறு-வேறான உருவங்களில்!


//Die Krise ist da und die erste Auswirkung dieser Krise ist die Fülle von
Zahlen und Daten, die über unsere Köpfe ausgeschüttet wird. Täglich und
stündlich werden wir mit neuen Aktienkursen, Indexzahlen und
Wirtschaftsprognosen bombardiert. Täglich tauchen neue Milliarden Euro auf, die
irgendwem fehlen oder fehlen könnten, und die dann vom Regierungskonto auf das
Unternehmenskonto umgeschaufelt werden. Klar ist bei all dem nur, dass die
Regierung die Milliarden, die sie derzeit verteilt, gar nicht hat. Wer kann da
den Überblick behalten? //-

http://de.indymedia.org/2009/01/240705.shtml


தமிழீழம் என்ற வரையறை மூலமாகத் தமிழ்ப் பிரதேசங்களைத் தமிழ்பேசும் மக்களது வாழ்வாதாரமாக்கும் போர் என்பது எவ்வளவு தவறாகுமோ அவ்வளவு தவறு சிங்கள அரசு செய்யும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரென்னும் பொய் கோசத்தினதூடாகச் செய்யும் இனவழிப்பு-புலியழிப்புப் போராட்டம்!இலங்கையில் இனங்களுக்கிடையிலான இனமுரண்பாட்டைத் திசை திருப்பிப் பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் அரசியலென்பது இலங்கையினது கண்டுபிடிப்பல்ல.இது,முற்று முழுதான இந்திய-பார்ப்பனியக்கூட்டுடனான ஒத்துழைப்பில் மேற்குலகத்தின்வழி தமிழர்களது தலையில் குண்டுபோடும் அராஜக அரசியலாகும்!


//"This is a very clear indication of all the precautions we are taking. We are
taking casualties to prevent civilians getting hurt. This is a factor we are
very concerned about. Otherwise we could have used so much artillery and just
moved in," the Defence Secretary has told. //-

http://www.defence.lk/new.asp?fname=20090217_04

 

இஃதை வெறுமனவே புலிகளது பிராண்டல்தனமான கோசங்களாலோ அல்லது வெகுளித்தனமான புலம்பெயர்-தமிழ்நாட்டு ஆ(ர்)ப்பாட்டக் கோசங்களாலோ தடுத்து நிறுத்த முடியாது.இத்தகைய ஆ(ர்)ப்பாட்டம் மற்றும் புலிவழிப் போராட்டங்களுடாகத் தமிழ்பேசும் மக்கள் வந்தடைந்திருக்கும் இந்த நிலைக்கு தமிழ்பேசும் முழு மக்களைப் பொறுப்பாக்கும் புலிகளது பினாமிகள் மற்றும் தத்துவம் புகட்ட முனையும் விடலைகளது கூக்குரல் மீளவும் புலிகளினது வரலாற்றுத் தவறை அவர்கள் உணர்ந்து, சுயவிமர்சனஞ் செய்து அடுத்த நகர்வைச் செய்வதைத் தடுப்பதாகவே முடியப் போகிறது.

 

தத்துவங்களைக் கடந்து மக்களது யதார்த்த வாழ்வுக்கு எந்தப் புனைவுகளும் அவசியமின்றிக் கிடக்கிறது.அங்கே,இன்றைக்குப் புடுங்கவேண்டியது,புலிகளையும்,அரசையும் அம்பலப்படுத்தி யுத்தத்துக்கு எதிரான அணித்திரட்சிகொள்வது.இதனூடாக உலக மக்களையும்,முற்போக்குச் சக்திகளையும் திரட்டி இலங்கைக்குப் பின்னாலும்,புலிகளுக்குப் பின்னாலும் நிற்கும் கொலைக்காரர்களை மட்டுப்படத்த முடியும்.இவர்களது அடவாடித்தனமான இந்த மூர்க்கத்தனமான மக்கள்விரோத யுத்தப் படுகொலைக்கு வெறுமனவே ஊரைக்கூட்டிப் புலியின் குரலாக ஒப்பாரி வைப்பதில் எதுவுமே நடக்காது.அரசும்,புலிகளும் மக்கள் விரோதிகளாக நின்று மக்களைக் கேடயமாக்கியுள்ளதை உலகமே புரிந்திருக்கும் இன்றைய நிலையில், நாம் புலிகளின்வழி இதை நியாயப்படுத்த இலங்கை அரசுக்கு முழுப் பொறுப்பையுஞ் சுமத்துகிறோம்.

 

உலகத்தினது இன்றைய நியாயம்-நீதி எனும் தர்ம விளக்கங்கட்கமையச் சிந்திப்பவர்கள் இதை எதன் பொருட்டும் வகைப்படுத்தட்டும்.எனினும்,இன்றைய வன்னி மக்களது அவலத்துக்குப் புலிகளது அரசியல் நடாத்தையும்,சிங்கள அரசினது அந்நியக்கூட்டுக்களுமே காரணமாக அமைகிறது.இது,ஒரு காலத்தினது அரசியல் தேவையாக முன் தள்ளப்பட்ட பொருளாதார நகர்வுக்கு அவசியமானவொரு யுத்தத் தேவையாக விரிவுறுவதை எதன் பொருட்டும் குறுக்கி, இலங்கை அரசினது இனவழிப்பு அரசியலின் தொடர்ச்சியில் வைத்துப் பார்ப்பது ஆபத்தானது.இதன்வழி நாம் உலகினது நகர்வை எந்த விமர்சனமுமின்றித் தட்டிக்கழித்து மீளவும் பிழையான இடத்திலிருந்து நகர்வதில் முடியும்.இது,புலிகள் இன்று வந்தடைந்த நிலையைவிட மேலும் ஆபத்தான பக்கத்தையும்,அடிமை வாழ்வையும் இலங்கையின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் வழங்கும்.இன்றைய இவ் நிலைமைகளைச் சரியாக மதிப்பிட்டு எதிரிகளைமிகத் தெளிவாக வரையறை செய்து மக்களை விடுவிப்பதற்கு முதற்படி புலிகளையும்,அரசையும் ஒரே தட்டில் வைத்து விமர்சித்து அம்பலப்படுத்துவதே.மக்களுக்கு விரோதமாக நடாத்தும் இவர்களில் ஒருவரை,ஏதாவதொரு நலத்தின் அடிப்படையில் மறைத்தபடி-மறந்தபடி-நியாயப்படுத்தியபடி வன்னியில் சாகும் மக்களுக்காகக் குரல்கொடுப்பதென்பது மிக மோசமான கபடத்தனம்.

 

"இலங்கைக்குள் இரண்டு தேசங்களை உருவாக்கப் புறப்பட்ட பிரபாகரனது தேசியத்தலைமை உலகத்தின் பொருளாதார மற்றும் சமூக விஞ்ஞானத்திலும் உலகப் புரட்சியிலும் மிகக் கறாரான விமர்சனங்களை வைத்தபடியேதாம் ஈழத்துக்கான புரட்சியை முன்வைத்தது."இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரை தமிழீழம் முடிந்த முடிவு என்று அவர்கள் சொல்வதைக் கேட்டுப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பூரிப்படைகிறார்கள்.இதற்கு வலுச் சேர்பதுபோல் இயக்குனர் சீமான் தயாரித்து,இயக்கி வரும் ஈழப் புரட்சிக் காவியம் புலம் பெயர்ந்தவர்களை ஒரு கலக்குக் கலக்கிறது!அவர்கள் விசில் அடித்து வீரகாவியம் மீட்டுகிறார்கள்!நான் வன்னியில் சாகும் மக்களது தலைவிதியை நினைத்து நொந்து போகிறேன்!


//நாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் .//- விடுதலைப்புலிகளின் போர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி

 

http://thesamnet.co.uk/?p=7651


எங்கும்,பொய்யும் அது சார்ந்து போரும் தொடர்கிறது!அப்பாவிகளைக் கேடயமாக வைத்திருக்கும் புலியினது அழிவுக்காகத் தொடர்ந்து காரியமாற்றும் இந்தியா இலங்கை அரசினது அனைத்துவைகைப் பண்புகளையும் அழித்து மிகக் கொடூரமானவொரு தேசமாக இலங்கையை மாற்றிவிட்டுள்ளது!இலங்கையினது பெயரளவிலான ஜனநாயகம் அதன் இராணுவத்தின் கால்களில் சிதைந்தபின்பு,இன்று தமிழ்பேசும் வன்னிப் பகுதி மக்களது அழிவில் முழுப் புலிகளையும் துடைத்தெறிவதில் இந்தியத் தரகு முதலாளியத்தின் விருப்பு அரசியல் நாகரீகமாக விரிகிறது.இலங்கைக்குள் இந்திய அரசியல் போக்குகள் நிலவும்வரைத் தமிழ்பேசும் மக்கள்மட்டுமல்ல இலங்கையின் முழுமொத்த உழைப்பாள மக்களும் பாதிப்படைவதைத் தவிர வேறொருவழி கிடையாது.இதைப் புரிந்துகொண்ட எந்தவொரு பொருளாதாரப் போக்கும் இலங்கைக்குள் தீர்மானகரமானவொரு அரசியல் சக்தியாக உருவாகி, இலங்கையையும் அதன் மக்களையும் காப்பதற்காக தமது சொந்த மக்களது தயவில் அரசியல் நடாத்தும் சூழல் இதுவரை நிகழவில்லை.இனியும் இலங்கையில் தேசியவாதப் போக்குகள் குறுகிய இனவாதக் குறுந்தேசியவாதம் பேசும் நிலைமைக்கே இலங்கைக் கட்சி-இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் அந்நியச் சக்திகள் இட்டு வருகின்றன!இதன் தொடர்ச்சியாகப் புலிகளது மலிந்த பிரச்சார உத்திகள்-காயடிப்புகளை இலங்கை அரசே அம்பலப்படுத்தும்வரை தமிழ் நெற்றினது அறிவுப் புரட்சி கொடிகட்டிப்பறக்கிறது!தமிழர்களின் தலைவிதி-விடலைகள் செய்யும் பல்கலைக்கழகப் படிகட்டுகளைத்தாண்டிக் குதிக்கும் பருவக் கோளாறு இஃது!தூ...


//To smother its humiliating string of defeats at the hands of the Sri Lankan
security forces LTTE propaganda clouts have taken to what they have known best
over the years 'manipulation and distortion' of true ground situations, what is
viewed as rough efforts to satisfy the war mongering diaspora communities world
wide. //
http://www.defence.lk/new.asp?fname=20090218_04

 

இதன் தொடர்ச்சியில் இன்னொரு வகை அரசியல் சிறுபிள்ளைத்தனத்தைக்கொண்டு,நமது மக்களைக் காப்பதற்கான தெரிவாகத் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இலங்கையைமட்டும் குற்றஞ்சாட்டிவருவதால் உலகத்தின் எந்தவொரு நியாயப்பாடும் அவர்களைக் கவனிக்கவில்லை!தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்களின்மீது உண்மையான அக்கறையிருப்பதானால் வன்னியில் மக்களைப் போரில் பலி கொடுப்பதற்காகவே ஒரு வகை யுத்தக் கருவியாகப் பயன்படுத்தும் யுத்தப் பிரபுகளையும் அம்பலப்படுத்தியாகவேண்டும்.இதைச் சம்பந்தன் மிகக் கவனமாகக் கையாளவதாகக் கருதிப் புலுடா விடுகிறார்.புலிகளதும்,இலங்கை அரசினதும் இன்றைய இந்த யுத்த நடாத்தைக்குள் நிலவும் சூழலின் மதிப்பீடென்ன?தமிழ்த் தேசியக்கூட்டமைப்புத் தம்மைத்தாம் ஏமாத்தலாம்-உலகை?

 

//"More than 2000 Tamils have been killed while more than 4500 injured in Vanni
due to the unrelenting attacks by the three armed forces of Sri Lanka government
in the recent past,"// -Sampanthan said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28446


"We have clear indications that the LTTE has intensified forcible recruitment of
civilians and that children as young as 14 years old are now being targeted,"
Philippe Duamelle, Unicef's chief in Sri Lanka, said.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7893970.stm


இந்த நிலைமையில் அப்பாவி மக்கள் தினமும் செத்து மடியும் தருணங்களை காட்சிப்படுத்தும் இக் கிரிமினல்கள்(இலங்கை மற்றும் புலிகள்-தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு) தமது அரசியல் இருப்புக்காக மக்களைக் கொல்வதில் மிகவும் ஒருமைப்படுகிறார்கள்,என்கின்றேன்!

 

பிணங்களின் நடுவே அரசியல் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இன்றைய இலங்கையர்களது வாழ்வு நாசமாக்கப்பட்டுள்ளது.இதை நியாயப்படுத்த உலககுக்கு ஒவ்வொரு தரப்பும் நியாய வாதங்களை அடுக்கினாலும்,உலகப் பொது அமைப்புகள் இவர்களை மிகவும் அம்பலப்படுத்துவதில் கணிசமானவெற்றிகளை எட்டியுள்ளன!எனினும்,இலங்கையில் அழியும் மனிதவுயிர்களை இவர்களால் தடுத்து நிறுத்தும் உடனடிக் காரியங்களைச் செய்ய முடியாதுள்ளது.இதைச் சாதகமாகப் பயன்படுத்தும் இலங்கைச் சர்வதிகார மகிந்தா குடும்பம்,பிரபாகரன் குடும்பமும் இலங்கை மக்களது எத்தகைய அழிவிலும் தத்தமது இருப்புக்கானதும்,சொந்த அரசியல் இலாபத்துக்குமாக மக்களைப் படுகொலை செய்வதில்"தேசநலன்" எனும் நியாயத்தை கொச்சைப் படுத்துகிறார்கள்.

 

இவர்களனைவரினதும் பிரச்சாரப் பீரங்கிகள் உலகம் பூராகவும் மனிதவிரோதப் பக்கங்களை மகத்தான பணியாகத் திட்டமிட்டுப் பரப்புரை செய்கின்றன.அழிகின்ற மக்களது உயிரைத் துச்சமாக மதிக்கும் இவர்கள், மக்களது இத்துயரைக் குறித்து உலகத்தில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.இந்த முரண்பாட்டை இனங்கண்டு அம்பலப் படுத்தும் பொதுவமைப்புகள் இங்ஙனம் கூறுகின்றனர்:


>>>Laws-of-war violations by one side never justify violations by the other. The government and the LTTE appear to be holding a perverse contest to determine who can show the least concern for civilian protection.<<<-Brad Adams, Asia director at Human Rights Watch.

http://www.hrw.org/en/news/2009/02/03/sri-lanka-disregard-civilian-safety-appalling


Sri Lanka: Government and Tamil Tigers violating laws of war

http://www.unhcr.org/refworld/country,,,,LKA,4562d8cf2,498178c65,0.html


Vorwürfe auf beiden Seiten in Sri Lanka:

Colombo. Tamilische Politiker haben der srilankischen Regierung am Dienstag
vorgeworfen, im Kampf gegen die Rebellenorganisation Befreiungstiger von Tamil
Eelam (LTTE) Zehntausende Zivilpersonen zu gefährden. Mehr als 2000 Unbeteiligte
seien bei den jüngsten Gefechten getötet worden. Die Hilfsorganisation UNICEF
beschuldigte die Rebellen unterdessen, verstärkt die Zwangsrekrutierung von
Kindern zu betreiben. Seit 2003 seien 6000 solcher Fälle registriert worden.Die
Streitkräfte drängten in den vergangenen Monaten die LTTE auf ein Gebiet an der
Nordostküste zurück, in dem nach Schätzungen des Roten Kreuzes auch 250000
Zivilpersonen eingeschlossen sind.(AP/jW)


http://www.jungewelt.de/2009/02-18/008.php

 

இவற்றைப் பக்கச் சார்பானதெனவும்,உண்மைகள் அற்றதெனவும் இலங்கை யுத்தப்பிரபுகள் இருவரும் நிராகரித்துவருகிறார்கள்.இங்கே,இவர்களது இத்தகைய மக்கள் விரோத அரசியல் பாதை இவர்களது நடாத்தைகளால் தீர்மானிக்கப்பட்டதல்ல.இலங்கையின் பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்திருக்கும் உடமைவர்க்கத்தின் தெரிவில் நிகழும் இப் படுகொலை அரசியற் பாதைக்குப் பலமாகவிருந்து வழிகாட்டுபவர்கள் அந்நியத் தேசத்து நலன்களை இலங்கைக்குள் திணிக்க முனையும் பெரும் பகாசூரக் கம்பனிகளாகும்.

 

இலங்கையர்கள் நாம் அனைத்து உரிமைகளையும் இலங்கையின் யுத்தப் பிரபுகளிடம் பறிகொடுத்துக் கொலையாகி வருகிறோம்.இவர்களைத் தண்டிப்பதற்கான வலு மக்களது அமைப்புகளிடம் இல்லை.அத்தகைய அமைப்புகள் உலகம் பூராகவும் இயங்கிடினும் இவர்களால் அழியும் உலக மக்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.பாசிசம் காட்டாட்சி செய்யும் இலங்கைபோன்ற சர்வதிகாரச் சூழலில் பொதுவமைப்புகள் வெறுமனவே ஓலமிடும் நிலையிலேயே பலவீனமான அரசியலைக் கைக்கொள்கின்றன.இந்த நிலையில் இலங்கையினது யுத்தக்கிரிமனல்களையும் அவர்களது எஜமானர்களையும் தண்டிப்பதற்காக இலங்கை மக்கள் நாளாந்தம் உயிர்ப்பலி கொடுத்தபடி இன்னொரு முப்பதாண்டுகாலம் பொறுத்திருக்கவேண்டுமா?

 

உலக அநுபவங்களின்படி இவ்வுலகத்தைப் புரிவதென்பது நிலவும் வாழ்நிலைகளின்வழியேதாம் சாத்தியமாகிறது.இலங்கையினது இன்றைய வாழ்நிலையில் மக்களிது தெரிவு சாவதென்பதாக இருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்துவதற்காகவேனும் முதலில் இவ்யுத்தக் கரிமினல்களின் அதிகாரத்தைப் பறிப்பதற்காக இலங்கை மக்கள் யாவரும் யுத்தத்துக்கு எதிராகத் திரண்டெழவேண்டும்.எனினும்,பாழும் இனவாதப் பரப்புரைகள் அவர்களை அதற்குள் மயக்கிய நிலையில் இதை எங்ஙனஞ் சாத்தியப்படுத்துவது?

 

எனவே, இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்களை அழித்தபடி புலிகளை பூண்டோடு இலங்கை அழிப்பதை எவருமே தடுத்துவிட முடியாது.இதுவே, இனிவரும் காலத்தில் வரலாறாகவும் பதியப்படுப்போகிறது.இங்கே,இன்னுமொன்றும் கூடவே ஊகமாகப் பேசப்படும்.அது,புலிகளது "பயங்கரவாதத்தை"அழிப்பதற்காக இந்தியா தனது பரீட்சார்த்தக் களமாக இலங்கையைப் பயன்படுத்தித் தனது அயலக எதிரிகளையும் மற்றும் உள்நாட்டுத் தீவிரவாத அமைப்புகளையும் ஒடுக்குவதற்கு முனைந்ததெனப் பதியப்படும்.அத்தோடு இந்தியத் தரகு முதலாளியத்தில் பொருளாதார நலன்களை இவற்றுக்குள் மறைப்பதற்கான தெரிவுகளை இந்தியப் புலானாய்வுத்துறை மிக இலகுவாகப் பின்தொடர்ந்து இந்தியத் தரகு முதலாளியக் குடும்பங்களைக் காக்கும்,ஜனநாயகத்தினதும்-காந்தியினதும் பெயரால் மட்டுமல்லக் கூடவே இந்தியப் பாதுக்காப்பு மற்றும் பிராந்திய நலனின் பொருட்டென்றும்!


ப.வி.ஸ்ரீரங்கன்
18.02.2009