Language Selection

தற்கொலைத் தாக்குதல், தன்னைத்தான் கொல்லும் தற்கொலை என்ற எல்லைக்குள்ளுமாய் வாழ்தலை மறுத்தலே, போராட்டமாக மாறிவிட்டது. மறுபக்கத்தில் துரோகம் தியாகம் என்று மனிதரை கொல்லுதல் நியாயப்படுத்தப்படுகின்றது.

எப்படி போராடுவது என்று தெரியாது, போராட முனைபவனை வழிகாட்டத் தெரியாது, உணர்ச்சிக்குள்ளும், தற்கொலைகளாகவும், குடிகாரராகவும், சதா புலம்புபவராகவும்  சமூகத்தை எட்டி உதைக்கின்றனர்.

 

இதன் விளைவுதான் முருகதாசன். அவன் தன் சொந்த முரண்பாட்டையே, தொடர்ந்து போராடுங்கள் என்று கூறிவிட்டு, தான் செத்துப் போகும் அவலம். இதுதான் அவனின் வழிகாட்டல். அவனை வழிகாட்டிய புலியின் அரசியல். தற்கொலைக்கே சமூகத்தை இட்டுச் சென்றவர்கள் தானே புலிகள். இவர்கள் எதை எப்படி உற்பத்தி செய்கின்றனர்? 

 

என் வீட்டில் நடந்த உதாரணம். 11 வயதே நிரம்பிய எனது மகனை, முன்பின் தெரியாத அதே வயதே ஓத்த தமிழ் சிறுவன் அணுகி, 'நீ சிங்களவனா என்று கேட்டு, நீ சிங்களவன் எனின் உன்னைக் கொல்வேன் என்றான்". மகனின் பதிலுக்கு முன்னமே, இதை கூறிவிட்டு செல்லுகின்றான். இதை நாம் முறையிட்டால், இந்த நாட்டின் சட்டபடி கிரிமினல் குற்றம். எம்மை புலிநாட்டு சட்டமோ துரோகி என்று கூறும். ஓரு குழந்தையின் அறியாமை மீது, திணிக்கப்படும் வன்முறையுடன் கூடிய மனிதவிரோத விகாரம் தான் இவை. எம்மினத்தில் இது நஞ்சாக விதைக்கப்படுகின்றது. வன்னியில் அப்பாவி குழந்தைகள், இதன் மூலம் யுத்த முனையில் பலியிடப்படுகின்றனர்.

 

நான் ஏன் போராடுகின்றேன், எதற்கு போராடுகின்றேன் என்ற எந்த அறிவுமற்ற வகையில் சமூகத்தை மலட்டுக் கூட்டமாக்கி, அவர்களை மந்தைகளாக மாற்றி பலியிடுவது பாசிசத்தின் இன்றைய அரசியல் இருப்பாகும்.

 

எந்த ஒரு செயலையும் ஏன், எதற்கு நாம் செய்கின்றோம், இதனால் எம் மக்களுக்கு என்ன நன்மை என்ற தெரிந்துகொள்ளக் கூட முடியாத, அதைக் கேள்வியாக கூட கேட்க முடியாதவர்களாக்கி, எம்மை நாம் பலியிடுகின்றோம். நாமே எம்மை கோமாளிகளாக்குகின்றோம்.

 

தான் போராட முடியாத கோழைத்தனமான தற்கொலையை வீரமாக காட்டி, உணர்ச்சியூட்டி அதை தமிழினத்தின் பெயரால் செய்யத் தூண்டுகின்றனர். மக்கள் போராட்டத்தை வழிகாட்ட முடியாத அரசியலும்;. இதைத் நக்கி தின்னும் கூட்டம் இதைத் தியாகமாக போற்றுகின்றது. ஊடகவியலோ இதை ஊதிப்பெருக்கி வயிறு வளர்க்கின்றது. இப்படி கொலைகாரர்கள், ஊடகவியலாளர்களாக உள்ளனர். இப்படி தற்கொலைக்குள் அழைத்துச் சென்றுவிடுகின்ற  அனைத்து விபச்சாரக் கும்பலும், தனிமனித தற்கொலைகளைத் தூண்டி அதில் குளிர்காய்கின்றது. இதற்குள் விசுவாசமான, நாய் பிழைப்புகள்.

 

வன்னியில் மக்களைக் கொன்று குவிக்கும் வண்ணம், மக்களை சிங்கள பேரினவாதத்தின் குண்டுக்குள் நனையவிட்டு, அதையே அரசியலாக்கி பிழைக்கின்ற கூட்டம் தானே இது. அதை வக்கிரமான குறுகிய உணர்ச்சியாக்கி, அவர்களை தற்கொலை செய்யத் தூண்டும் நயவஞ்சகர்கள், இந்த சமூகத்தின் மாபெரும் கிரிமினல்கள்.

 

இப்படி இந்த தற்கொலையைக் காட்டி, இனி இதற்குள் அரசியல். அதை செய்யத் தூண்டும் மலிவான போற்றுதல்கள். இதற்குள் இலங்கையில் ஊடகவியலளார்கள் என்ற போர்வையில் இயங்கிய புலிக் கும்பல், இங்கு அதை பகிரங்கமாக செய்கின்றனர். ஊடகவியலாளர் என்ற அடைமொழி எதற்கு. கொலைகாரர்கள் என்ற அடைமொழி உங்களுக்கு பொருந்தும். கொலை செய்யவே, மக்களை கொலைகாரன் முன் நிறுத்துகின்றனர். அதை வைத்து கடை விரிகின்றனர். வர்த்தக விளம்பரங்கள் ஊடாக, அது ஊக்குவிக்கப்படுகின்றது. வியாபாரம், விளம்பரம் ஊடாக அதை உள்வாங்கியவன், தற்கொலை செய்கின்றான். வன்முறையில் ஈடுபடுகின்றான். அளவுக்கு மீறி குடிக்கின்றான். இப்படி ஒரு சமூகத்தின் தற்கொலைக்கும், அழிவுக்கும் ஊடகவியலாளர் என்ற போர்வையில் உள்ள புலிகள் வழிகாட்டுகின்றனர்.

 

எதிரிக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடமுடியாத பிழைப்புவாத சந்தர்ப்பவாத அரசியல், அனைத்தையும் தற்கொலை நோக்கி வழிகாட்டுகின்றது. ஆளும்வர்க்கம் முதல் ஏகாதிபத்தியம் வரை நக்கும் அரசியல் எல்லையில் வழிகாட்டும் பிழைப்புவாதிகள், மக்களை உணர்ச்சி ஊட்டி தற்கொலைக்குத்தான் தள்ளமுடிகின்றது. மக்களுக்காக மக்கள் போராடவும், அதை வழிகாட்டவும் விரும்பாத கும்பல், கொலையையும் தற்கொலையையும் தன் பாதையாக தேர்ந்தெடுக்கின்றது. அதை மற்றவர்கள் மேல் திணிக்கின்றது.

 

புலம்பெயர் சமூகத்தில் மக்களை உணர்ச்சி ஊட்டி தக்கவைக்கும் (தற்)கொலைகார அரசியல், அந்த உணர்ச்சி மங்கி மடிய முன்னம் பணத்தை வறுகுவதன் அடிப்படையில் சுறுசுறுப்பாக இயங்குகின்றது. வன்னியில் மக்கள் தம் குழந்தைகள் அல்லது புலிகள் மேல் இருக்க கூடிய அனுதாப உணர்வைக் கூட மழுங்கடிக்கும் வண்ணம், புலியின் நடவடிக்கை அமைந்துள்ளது.

 

கொத்துகொத்தாக அங்கு மக்கள் சாகடிக்கப்பட, இங்கு ஆயிரமாயிரமாக ஈரோக்களாக டொலராக மாறுகின்றது. இப்படி குரூரமான தலைமையின் கீழ், இந்த தற்கொலைகள் உருவாக்கப்படுகின்றது. கொத்துக்கொத்தாக பேரினவாத குண்டுக்குள் மடிய மறுக்கும் மக்கள், இதற்கு உட்பட்டு அங்கு வாழமறுக்கும் மக்கள், புலியின் அசிங்கமான கேவலமான பல்வேறுவிதமான அடக்குமுறைக்கு உள்ளாகின்றனர். இதில் இருந்து தப்பி வந்;துகொண்டிருக்கும் மக்கள், தம் கண்ணீர் கதைகளை கதைகதையாக சொல்லத் தொடங்கிவிட்டனர். மனிதஅவலம் பற்றி புலி ஊடகங்கள் சொன்னது ஒருபக்கம் தான், மறுபக்கத்தை மக்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர்.

 

அங்கிருந்து தப்பி வரும் மக்கள், தம் சொந்த அனுபவத்தில் இருந்து ஓப்பிட்டு, புலியை விட இராணுவம் மேலானது என்று இன்று உணருகின்ற அறியாமை. அதையே அவர்கள் வாய்விட்டுச் சொல்லுகின்றனர். தம் மீது குண்டு போட்ட இராணுவத்தை அவர்கள் எதிர்ப்பதற்கு பதில், தம் மத்தியில் இருந்த குண்டை அடித்து தம்மை இந்த நிலைக்காளாக்கிய புலிக் கதை சொல்லுகின்றனர். இதனால் தான் அவன் எம்மீது குண்டு போட்டான், அடித்தான் என்று கூறுகின்றனர். அப்பழுக்கற்ற மதிப்பீடுகள். இப்படி மக்கள் தப்பி வரும் வழியில் இராணுவம் நடந்துகொள்ளும் முறையை, புலிகள் தமக்கு சொன்னதுக்கு எதிர்மாறாக இராணுவம் நடப்பதைக் கண்டு அதிர்ந்து போய், புலியை காறித் தூற்றுகின்றனர்.

 

உதாரணமாக வரும் தகவல்கள் இதை உறுதி செய்கின்றது. தப்பி வந்த உறவினர் கூறிய ஒரு தகவலை, ஓருவர் எனக்கு கூறினார். இதில் இராணுவம் பெண்களை தொட்டுக் கூட பரிசோதனை செய்யவில்லை என்றார், புலிகள் அப்படியல்ல என்றும், பெண்களின் மார்பகங்களில் கூட புலிகள் தம் துப்பாகியால் இடிப்பதாக சொன்னார். குடிசைகளில் மக்களை இருக்க விடாது, மரங்களின் கீழ் இருக்கும்படி, புலிகள் எப்படி கட்டாயப்படுத்தினர் என்ற கதையை சொன்னார். ஏன் ஏதற்கு என்று தெரியாது என்று இதைக் கூறுகின்றனர். இந்தளவுக்கும் சம்ந்தப்பட்ட உறவினரின் மகள் புலியில் உள்ளார். அவரின் மகனை கடத்திசெல்ல முயன்ற ஓரு நிலையில், அவர்கள் தப்பி வந்தனர்.

 

மற்றொரு கதை. லண்டனில் நடந்த செத்தவீட்டில், இறந்தவரின் குடும்பத்தவர்கள் சொன்ன கதையை உறவினர் சொன்னார். இறந்தவரின் மகளை புலிகள் கடத்தி செல்ல முயன்ற நிலையில், தம் மகளை ஓளித்து விட்டனர். இதனால் தந்தை கடந்த ஒரு வருடமாக புலிகளின் வதைமுகாமில் வாழ்க்கையாகிவிட்டது. இடைக்கிடை அவரை விடுதலையாக்கி, மகளை கண்டு பிடிக்க முனைந்தனர். இப்படி விடுதலையாகி வந்த சமயம், இராணுவம் வீசிய செல் தாக்குதலில் கழுத்தில் பலத்த காயமடைந்தார். மருத்துவ வசதியின்றி மரணம் என்ற நிலையை அவர் உணருகின்றார். அவர் தம் குடும்பத்திடம் கூறியது, என்னைப்போல் நீங்களும் சாகாது தப்பிச்செல்லுங்கள். எனது இந்த நிலையில், உங்கள் மேல் கண்காணிப்பு இருக்காது. நான் எப்படியோ சாகப்போகின்றேன், என்னை இப்படியே விட்டுவிட்டு தப்பிச்செல்லுங்கள்;. மரணத்தில் போராடும் கணவன், தந்தை, இருந்தபோது அவர்கள் இதைப் பயன்படுத்தி தப்பி வந்துள்ளனர். வந்தபின் தந்தையின் கணவனின் மரணச் செய்தி வருகின்றது. இந்த பிணத்தைக் காட்டி, புலம்பெயர் நாட்டிலும் தமிழகத்திலும் மனிதஅவலமாக காட்டி, பிழைக்கும் அரசியல் கொண்டாட்டங்கள். உண்மைகள் மறுபக்கத்தில் அனாதரவாக, மனித மனங்களையே குடைகின்றது. இப்படி பல, பல கதைகள். இவை எதுவும் பொய்யல்ல என்று, காலம் பதில் சொல்லும்.

 

இப்படி தப்பிவரும் மக்கள் மனநிலை எப்படி மாறுகின்றது என்பதற்கு மற்றொரு உதாரணம். மக்களின் போர்வையில் புலிகளும் வருவார்கள் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டு, இராணுவக் கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளும் பரிதாபம். சந்தேகத்தில் கைது செய்வது, தனிமைப்படுத்துவது தவிர்க்க முடியாது என்று எண்ணும் அப்பாவி மனம். மக்கள் இதை விட வேறுவிதமாக சிந்திக்கவும் செயலாற்றவும் முடியாது. 

 

புலிகள் மக்களை மிகக் கீழ்த்;தரமாகவே நடத்திவிட்டார்கள். எப்படி எம் தேசம், தேசியம் தோற்கடிக்கப்பட்டது, தோற்கடிப்படுகின்றது என்பதை, இந்த மக்கள் தம் சொந்த அனுபவத்தின் ஊடாக செய்கின்றனர், அதை வெளிப்படையாக கூறத்தொடங்கிவிட்டனர். அங்கு மக்களின் உணர்வை தமக்கு எதிராக புலிகள் மாற்ற, இங்கு மக்கள் உணர்வை தமக்கு  ஆதரவாக மாற்றி பணத்தை திரட்டும் எதிர்மறை அம்சங்கள். உண்மையில் மக்களின் அவலத்தை வியாபாரமாக்கி, பிழைக்கும் பாசிச மாபியா புலி அரசியல் நடுத்தெருவில் கூத்தாடுகின்றது.

 

பி.;இரயாகரன்
14.02.2009         


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ