Language Selection

சிங்கள பேரினவாதம் தன் சுதந்திரமாக பிரிட்டிஸ்சார் கொடுத்த சுதந்திரத்தையே கருதியது முதல், தமிழினத்தை ஓடுக்குவதன் மூலம் தான் சிங்கள மக்களை ஏமாற்றி வந்தது. தமிழ் தலைமைகள் இதனுடன் ஓத்துழைத்தும், விலகி வந்த நிலையில், சிங்கள பேரினவாத ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடும் ஆயுதப் போராட்டமாக அது மாறியது. இப்படி கடந்த 30 வருடமாக பண்புமாற்றம் பெற்ற இந்த போராட்டத்தை பயன்படுத்தி, ஒரு இன அழிப்பாகவே பேரினவாதம் நடத்திவருகின்றது.

கடந்த காலத்தில் சிங்கள இனவாதத்தை எதிர்கொண்ட தமிழ் தலைமைகள், ஏன் இந்த இனவாதம் என்ற அடிப்படையில் இருந்து அதை எதிர்கொள்ளவில்லை. மாறாக அதை பயன்படுத்தி, அரசியல் செய்யும் தம் சொந்த பிழைப்புத்தனத்தையே தமிழின உணர்வாக்கினர். இதன் அடியில் இருந்து வந்த ஆயுதப்போராட்டம் அதை மீறவில்லை. புலிகள் ஒரு தனி சர்வாதிகார பாசிச மாபியாக் கும்பலாகவே சீரழிந்தது. அரசியல் ரீதியாக செத்துப் போனவர்கள், மக்களிடமும் அரசியல் ரீதியாக தோற்றனர். இதனால் ஆயுதங்கள் மூலம் தமிழ்மக்களை ஓடுக்கியவர்கள், இன்று சிங்கள பேரினவாத எதிரியுடன் தம் ஆயுதங்களைக்கொண்டு மக்கள் மேலான தம் ஓடுக்குமுறையை தக்கவைக்கமுடியாது தோற்று வருகின்றனர்.

 

இப்படி சிங்கள ஓடுக்குமுறைக்குள் தமிழ் சமூகம் செல்லுகின்றது. புலிகள் அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தோற்றுப்போகும் நிலையில், இந்த தோல்வி ஊடாக ஏற்படும் மனிதஅவலத்தை கொண்டு, தம்மை தக்கவைக்க முனைகின்றனர். மனிதஅவலம் தான், இன்று புலியை பாதுகாக்கும் இறுதி ஆயுதமாகியுள்ளது.

 

இந்தவகையில் சிங்கள பேரினவாதம் தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்துவிடும் ஓடுக்குமுறையை சார்ந்தே, புலிகள் இருப்பு என்ற நிலைக்கு அவர்கள் தரம் தாழ்ந்து போனார்கள். இந்த அடிப்படையில், சிங்கள பேரினவாதத்தை உசுப்பேற்றி, அதன் மூலம் தமிழன் அழிவை உருவாக்குவது புலிகளின் இருப்புடன் தொடர்புடைய ஒன்றாகிவிட்டது.   

            

தமிழ்மக்களை கொல்வதும், அவர்களின் அவலத்தை அன்றாடம் சொல்வதும், புலி ஊடகவியலின் அரசியலாகிவிட்டது. முன்பு இரணுவத்தை கொன்றும், தாக்குதலை நடத்திக் காட்டி செய்த பிரச்சார அரசியல், இன், மனித அவலத்தை காட்டி பிராச்சாரம் செய்யும் நிலைக்குள் அவை சுருங்கிவிட்டது.

 

இதனால் இந்த மனித அவலம் தொடர வேண்டும் என்பது, அதை உருவாக்குவதுமே இன்றைய புலி அரசியல். இந்தவகையில் மக்களை பலியாடாகவே, பேரினவாதத்தின் முன் புலிகள் நிறுத்துகின்றனர். எந்த புலி 'மனிதாபிமானியும்" இதில் இருந்து மக்களை மீட்க முன்வரவில்லை, முனையவில்லை.

 

மக்கள் யுத்த முனையில் கொல்லப்படவும், அவர்கள் தப்பிவரும் வழிகளில் அழிக்கப்படவும், தப்பி வந்தபின் திறந்த வெளியில் அடைக்கப்படுகின்றதுமான நிலையில் உள்ளது, மக்களின் அவலம். இந்த நிலையை சிங்களப் பேரினவாதம் தன் இன அழிப்பின் ஊடாக செய்கின்றது என்பது, வெளிப்படையான உண்மை. ஒரு உண்மை மற்றொரு உண்மையை மறைக்க முடியாது.

 

தமிழ் மக்கள் சந்திக்கின்ற அவலங்கள்; நெருக்கடிகள் தான், புலியின் இன்றைய அரசியலாக இருக்கின்றது. மக்களை இந்த அவலத்திலும் நெருக்கடியிலும் தள்ளுதல் தான், புலியின் இன்றைய நடத்தையாகி செயலாகிவிட்டது.

 

மனிதஅவலத்தில் தாம் வாழ்தல் என்பதால், மக்களை பணயக் கைதியாக்கி உள்ளனர். மக்களின் பிணத்தையும், மக்களின் ஓப்பாரியையும் காட்டி புலிகளின் இலட்சிய அரசியல் என்ற நிலைக்குள், புலிப்பாசிசம் வக்கற்றுப்போனது.

 

மக்களை இதில் இருந்து விடுவிப்பது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது, அவர்கள் பேரினவாத சித்திரவதைகளை சந்திக்காமல் வாழ்வை உருவாக்குதல் என்ற அடிப்படையில், புலிகள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

 

அரசு குறைந்தபட்சம் பிரச்சாரத்துக்கு தன்னும், மக்களி;ன் பாதுகாப்பைப் பற்றி பேசுகின்றது. பாதுகாப்பு பிரதேசத்தை உருவாக்குகின்றது. பாதுகாப்பாக வரும் இடைத்தங்கல் முகாம்களை உருவாக்குகின்றது.

 

இப்படி அது தன் சொந்த பாசிசத்தை மூடிமறைக்க, குறைந்தபட்சம் மக்களை தனிமைப்படுத்தி வெளியேற்ற முனைகின்றது. அதைக் கோருகின்றது. ஆனால் புலிகள் இதற்கு எதிர்மறையாக, மக்களை கொல்லப்படுவதை விரும்புகின்றது. இப்படி புலி அரசியல் முதல் நடத்தைகள் வரை, இதற்குள் எல்லைப்பட்டு அதற்குள் கோசங்கள் பிரச்சாரங்கள் என்று மக்களின் அவலத்தை உற்பத்தி செய்கின்றது.

 

இதை இன்று காட்டாது தமிழ்நாடு முதல் புலம்பெயர் தமிழன் வரை, தம் பின்னால் ஒரு போராட்டத்தைக் கூட வழிநடத்த முடியாதநிலை.

 

தமிழினத்தை கொடுமைக்கு உட்படுத்தி அரசியல் செய்யும் புலிகள். புலிப் பினாமிகள் உலகெங்கும் இந்த கொடுமையைக் காட்டி, உணர்ச்சி வசப்படுத்தி நக்கும் அரசியல் அவலம்;. தமிழன் என்று கூச்சல் எழுப்புவது, அந்த மக்களுக்காக தாம் போராடுவதாக கூறிக்கொண்டு, அவர்களை கொன்று குவிக்கும் நடைமுறையை ஊக்குவித்துக் கொண்டு, தமிழரின் அந்த அவலங்களின் மேல் அரசியல் செய்கின்றனர்.

 

இங்கு தான் பேரினவாதம் வெற்றிபெறுகின்றது. முன்பு மாற்று கருத்தாளர்களை கொன்றும், ஓடுக்கியும், எதிரியின் பின் அணி திரளவைத்தனர். இப்படி மாற்றுக் கருத்து என்பது, சிங்கள பேரினவாதத்தின் தயவில் என்ற நிலைக்கு, புலிகள் தம் பாசிச வழியில் வழிகாட்டினர். இன்று மக்களை பணயம் வைத்து நடத்துகின்ற புலி அரசியல், மக்களின் பாதுகாப்பே பேரினவாதம் தான் என்று, மக்கள் எண்ணுமளவுக்கு மக்களை புலிகள் கொடுமைக்குள்ளாக்குகின்றனர். மக்கள் இந்த எல்லையில் தான், தாமாக புலியை மீறி தப்பிவருகின்றனர். தன்னால் தான் புலி அழிகின்றது.

 

பி.இரயாகரன்
13.02.2009


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ