Language Selection

தவறை புரிந்துள்ளதாக தம்மைக் காட்டிக்கொண்டு நியாயவாதம் செய்பவர்கள், ஓரு நாணயத்தின் இரண்டு பக்கமாகவும் இருக்க முனைகின்றனர். ஓரு பக்கம் தவறு உண்டு என்பதும், மறுபக்கம் தவறை தொடர்வதுமாக உள்ளனர். இவர்கள்தான் ஆபத்தான நயவஞ்சகப் பேர்வழிகள். தமிழினம் அழிக்கப்படும் இன்றைய நிலையிலும், அதில் குளிர்காய்கின்ற குள்ளநரிக் கூட்டங்கள்.

எம் போராட்டத்துக்கு ஏன் இந்தக் கதி எற்பட்டது? அதை திருத்த மறுக்கின்ற, அந்த தவறை சொல்ல மறுக்கின்ற, அதற்கு எதிராக போராட மறுக்கின்றவர்கள் தான், தமிழினத்தின் அழிவில் பிழைக்கின்றவர்கள்.

 

புலிகளின் பின் நின்ற பலர், புலிக்கு வெளியில் நிற்பதாக பாசாங்கு செய்தபின் இன்று புலியுடன் ஓட்டிக்கொண்ட ஓட்டுண்ணிகள், போராட்டத்தின் தவறே இன்றைய எம் நிலைமைக்கு காரணம் என்று வெளிப்படையாக கூறுகின்றனர். அதேநேரம் புதிய தவறை நியாயப்படுத்திக்கொண்டு மூச்சுவாங்க அடியும் வாங்குகின்றனர்.

 

இவர்கள் தவறாக கருதுவதோ புலிப்பாசிசம் தன்னைத்தான் அம்பலப்படுத்தும் வகையில் செய்தவையைத்தான். அம்பலப்படமல் செய்வதையே, இவர்கள், தவறற்ற போராட்டமாக கருதுகின்றனர். இப்படி தமிழினத்துக்கு எதிராக புலிகள் இருப்பதை, தவறாக கருதுவது கிடையாது. அவை அம்பலப்படாமல் இருத்தலையே தவறற்ற போராட்டம் என்கின்றனர்.  

 

போராட்டத்தில் தவறு என்பவர்கள், தவறு எது என்பதை சொல்லாது இருக்கவும், அதை திருத்தவும் முனையாது, தவறுகளையே தேசிய போராட்டமாக காட்டுகின்றனர். இதை மூடிமறைக்க, புலியைவிட்டால் வேறு என்னவென்று கூறி அதை ஆதரிக்கின்றனர். இப்படி தவறான போராட்டத்தின் பின்னால் ஓடுகின்றனர். இப்படி தவறுகள் மூலம் தமிழ் மக்களை அழிக்க, மொத்தத்தில் துணை போகின்றனர்.

 

தமிழ் சமூகம் இவை எதையும் சுயமாக உரசிப் பார்க்கத் தயாராகவில்லை. அந்தளவுக்கு மந்தைக் கூட்டமாக, அனைத்தும் அலை மோதவைக்கப்படுகின்றது.

 

எதைப் போராட்டமாக காட்டி சித்தரிக்கப்பட்டதோ, அது இன்று தோற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் இருந்து மீளவே, மக்களை பணயம் வைத்து அரசியல் செய்கின்றனர். அவர்களின் பிணங்களைக் காட்டி, உலகை இரஞ்சுகின்றனர். உலகத்தலைவர்கள், தொலைக்காட்சிகள் எல்லாம் இதை பார்த்து, இதற்காக தலையிட்டு, தமக்கு ஓரு மீட்சி தராதா என்று ஏங்குகின்றனர். இப்படி தவறான போராட்டம் முட்டுச்சந்தியில் நிலைதடுமாறுகின்றது.

 

வேறு சிலரோ குறிப்பிட்ட சில கடந்தகாலத் தவறுகள் பற்றி புலம்புகின்றனர். ஆனால் நிகழ் கால தவறுகளை செய்தபடி, அதை நியாயப்படுத்துகின்றனர். உண்மையில் தவறுகளே மீண்டும் மீண்டும் போராட்டமாக காட்டுகின்றனர். கடந்கால தவறு என்னவென்று ஆராயமறுக்கும் அதேதளத்தில், புதிய தவறுகளை சமூகம் மீது திணிக்கின்றனர்.

 

புலிகளோ என்றும் தவறுகளை சுயவிமர்சனம் செய்ததில்லை

 

பேரினவாதத்தின் கொடூரங்களை எல்லாம் காட்டிக்கொண்டு உருவான புலிகளோ, மிக மோசமான பாசிட்டுகள். தம் மாபியாதனத்தின் மேல் கட்டிய கோட்டையை
சுற்றி உருவான அகழியில், மக்களின் பிணத்தைக்கொண்டு நிரப்பியவர்கள். இப்படி மொத்த போராட்டமும், தவறுகளின் மொத்த வடிவமாகியது.

 

1. தம் அமைப்பில் உட்கட்சி ஜனநாயகத்தை மறுத்தனர். சர்வாதிகார முறையில் அமைப்பை தனிமனிதன் பின் நிறுவினர். அந்த தனிமனித சொந்த வக்கிரங்களையே போராட்டமாக்கினர்.

 

2. மக்களை தம் சொந்த தனிமனித சர்வாதிகார அமைப்புக்கு கீழ் அடிமைப்படுத்தினர்.

 

3. தமக்கு கட்டுப்படாதவர்கள் மேல் ஈவிரக்கமற்ற கொலைகளை செய்து, சமூகத்தை அச்சத்தினுள் ஆழ்த்தினர்.


  
4. மாற்று இயக்கங்கள், கொள்கைகள் கொண்ட குழுக்களையும், தனிமனிதர்களையும்  கொன்று குவித்தனர்.

 

5. மாற்று சிறுபான்மை இன மக்கள் மேல் வன்முறையை ஏவிவிட்டதுடன், அவர்களின் சொத்துக்களை எல்லாம் புடுங்கிய பின் துரத்தியடித்தவர்கள்.

 

6. சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களை தம் எதிரியாக காட்டியதுடன், அவர்களின் எல்லைப்புற கிராமங்களில் புகுத்து நரைவேட்டை ஆடியவர்கள்

 

7. சமூகத்தில் நிலவிய சமூக முரண்பாடுகளை, நிலவிய அதிகார எல்லைக்குள் அச்சுறுத்தி அதற்குள் உறையவைத்தனர்.

 

8. தேசத்தின், தேசியத்தின் அடிப்படையான சுயநிர்ணய உரிமைகளை மக்களிடமிருந்தே  காயடித்தனர். அதை எதுவுமற்ற ஒன்றாக்கினர்.

 

9. கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை மொத்த  தமிழ் மக்களுக்கு மறுதலித்தனர். 

  

10.தேசிய உற்பத்திகள் முதல் தமிழ் மக்கள் நுகர்ந்த ஓவ்வொரு பொருளுக்கும் பலமுறை பலவழிகளின் வரிவிதித்தனர்.

 

11.ஆயுதங்களை வழிபட்டவர்கள், மக்களை அதற்கு கீழாக கீழ்படுத்தினர்.


.
12. சுனாமி பெயரில் திரட்டிய பல நூறு கோடி பணத்ததை, அந்த மக்களுக்கு கொடுக்காது   ஏப்பமிட்டவர்கள்.
 
13. மக்களை பேரினவாதம் கொல்வது, போராட்டத்தை வலுப்படுத்தும் என்பதே புலியின் அடிப்படையான தத்துவம். இந்த வகையில் மக்களை பலியிடும்வண்ணம், மக்களை போராட்டத்தில் பலியிடுவது பலி அரசியலாகியது. அதை வைத்து பிரச்சாரம் செய்வது, அதனுடாக  மக்களை ஏமாற்றி தன் பின் வைத்திருப்பது தான் புலியின் அரசியலாக நடைமுறையாக இருந்தது.

 

14. நிலவிய பிரதேச ரீதியான, சமூக ரீதியாக சமூக வேற்றுமைகளை ஆழமாக விதைத்தனர். இதன் மூலம் சமூகத்தை பிளந்து பிரித்தாண்டனர்.

 

15. மக்களின் உரிமைகளை, கடமைகளை மறுத்து, தமக்கு சேவை செய்தையே போராட்டமாக்கினர்.

 

இப்படி எண்ணிக்கையற்ற பல தவறுகள். தொடர்ந்த பல தவறுகள், இன்று வரை யாரும் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இன்றும் அந்த தவறுகள் நியாயப்படுத்தப்படுவதுடன், இதையே இன்றும் விடுதலைப் போராட்டமாக சித்தரிக்கின்றனர். அதற்கு அமைய புதிய தவறுகளை, சமூகம் மீது திணிக்கின்றனர்.

 

கொலை, கொள்ளை, கப்பம் புலியிசமாக, சிறைகளும் சித்திரவதை கூடங்களும் மனிதர்களின் வாழ்விடமாக, மலிவான இழிவான மிகையான பிரச்சாரம் தமிழ் இனத்தை குருடாக்கியுள்ளது.    

 

இப்படி தமிழினத்தை அழித்து அதில் வாழவிரும்பும் கும்பல்களின் மனிதவிரோத செயல்கள்தான், இன்று புலிப் போராட்டமாகவுள்ளது.

 

பி.இரயாகரன்
10.02.2009
 
 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ