Language Selection

இந்தத் தெரிவில் முக்கிய பங்கு புலிக்கு உண்டு. சமாதானம் மேல் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள், யூ.என்.பி யை ஆதரித்து அவர்களை வெல்லவைத்து தம்மை தோற்கடித்த விடுவார்கள் என்று புலிகள் பயந்தனர். சமாதானம் மூலம் தம் எதிர்காலம் சிக்கலுக்குள்ளாவதை தடுக்கவும், யுத்தம் மூலம் தம் நிலையை இலகுவாக்க முடியும் என்று புலிகள் நம்பினர்.

இந்த அடிப்படையில் யுத்தத்தை வெல்ல விரும்பிய புலிகள், அப்பாவி வேஷம் போட்ட மகிந்தாவை தம் தேர்தல் பகிஸ்கரிப்பு மூலம் தெரிவு செய்தனர். தமிழ் மக்களை தேர்தலில் வாக்களிக்கவிடாது தடுத்து, தேர்தல் பகிஸ்கரிப்பாக மாற்றி யூ.என்.பி யைத் தோற்கடித்தனர். வன்னியில் ஓரேயொருவர் வாக்கு போட்டபோது, அவனின் கட்டை விரலையே புலிகள் வெட்டினர். இப்படி யூ.என்.பிக்கு வீழ்ந்த ஓரு வாக்கு மூலம், மகிந்த வெற்றி பெற்றார். மகிந்தாவை வெல்ல வைத்த இந்த இரகசிய சதிப் பேரத்தின் பின்னணியில், சில சலுகைகளை மகிந்தாவிடம் புலிகள் கோரினர். பணம் முதல் கருணாவை தம்மிடம் ஒப்படைத்தல் வரை அது நீண்டது.

 

புலியைப் போல் மகிந்தாவும் பாசிட்டாக இருந்ததால், சிலதைக் கொடுத்து புலிகளை இலகுவாக ஏமாற்ற முடிந்தது. புலிகள் தாம் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, அதை எதிர்கொள்ள வடக்கில் 'மக்கள் படை" என்ற பெயரில் தொடர்ச்சியான தாக்குதலை இராணுவம் மீது நடத்தினர். இப்படி மகிந்த பதவியேற்ற ஒரு மாதத்துக்கு உள்ளாகவே, உத்தியோகபூர்வமற்ற தாக்குதலை புலிகள் தம் சொந்த சதித்திட்டத்தினூடாகவே ஆரம்பித்து வைத்தனர். இன்று யுத்தத்தை நிறுத்து என்று கோசம் போடும் பினாமிகள், அன்று தலைவா! பொறுத்தது போதும் யுத்தத்தை நடத்து என்று அறிக்கைகள் பல விட்டனர். இவையெல்லாம் அவர்களின் பத்திரிகைகளில் காணமுடியும்.

 

இப்படி 'மக்கள்படை" தாக்குதல் நடத்த, இவை தாமல்ல என்று பல்லுத்தெரிய தமிழ்ச்செல்வன் பல அறிக்கைகள் வெளியிட்டவர். அதை கண்டுபிடிப்பது அரசின் பொறுப்பு என்றனர். இப்படி பாசிசம், தன் பாசிசத்தை அழிக்க பாசிசத்தை தெரிவு செய்யக் கோரியது.

 

ஆம் 'மக்கள் படை" காணாமல் போவபவராக, கடத்தப்படுபவராக, படுகொலை செய்யப்படுபவராக மாறி, புலியின் 'மக்கள் படை"யின் கதையே முடிந்தது. யாழ் குடாவில் புலியின் கதை முடிந்தது. இப்படி பாசிச வழியில் புலியை ஓடுக்கும் பணி, நாட்டின் முழுபகுதிக்குமானதாக மாறியது. இராணுவத் தளபதி, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய மீதான தற்கொலைத் தாக்குதல் தோல்வியும், இறுதியில் புலிகளின் வால் வரை சட்டத்தின் எல்லையைக் கடந்த பாசிச வழிகளில் அழிக்கப்பட்டது. புலிகள் அல்லாத பிரதேசத்தில், புலிகள் முற்றாக செயலிழந்தனர்.

 

புலிகளின் மாபியாத்தனம் மற்றும் விலைக்கு வாங்குவன் மூலம் ஆட்டிப்படைக்கும் இராணுவ வடிவங்கள், முற்றாக முடக்கப்பட்டு அவையும் அழிக்கப்பட்டது. தன்னார்வக் குழுக்களை பணம் மூலம், பெண் மூலம், தம் சார்பு செயலாக மாற்றிய அதன் எஞ்சி எச்சங்களைத் தான், இன்று அரசு தன் பாசிச வடிவத்தில் அடிபணிய வைக்கின்றது. இந்தப் பாசிசமின்றி புலியை வெல்ல முடியாது என்பதால், தானே பாசிசத்தை பதிலடியாக வைத்தது.

 

இந்த பாசிச வடிவம் அம்பலமாவதைத் தடுக்க, தம் எதிரணிகளை இதே பாசிசத்தைக்கொண்டு ஒடுக்கத்தொடங்கியது. மொத்தத்தில் தொடரும் மனித உரிமை மீறலை மூடிமறைக்க, பாசிசத்தைவிட்டால் அரசிடம்  வேறுவடிவம் கிடையாது.  

    

புலிகள் தொடங்கிய இரகசிய யுத்தம், அதை அழித்தொழிக்க அரசு தேர்ந்த வழிகள், பாசிசத்தின் வருகையை வெளிப்படையாக்கியது. இதன் பின் தான் புலிகளின் மாவிலாறுத் தாக்குதல், மூதூர் மூஸ்லீம் மக்களை அழித்தொழிப்பு தாக்குதல், என்று எல்லாம் என தொடர்ந்தன.

 

புலிகள் பாணியில் புலிகளை அழிப்பதை, பேரினவாத பாசிசம் தன் தேர்வாக்கியது. இதைத்தான் 'நாம் அல்லாத அனைவரும் புலிகள்" என்ற கோத்தபாய கூறுகின்றார். இப்படி இலங்கை ஒரு இருண்ட பாசிசத்தின் வழியில் ஆளப்படுகின்ற சூழல்தான், இன்று அரங்கேறுகின்றது. உள்நாட்டு யுத்தம், அதன் பின்னான பாசிசம், மொத்ததில் இதன்பின் அரசியல் துரோகமே அச்சாக உள்ளது.

 

மறுபக்கத்தில் சர்வதேச பொருளாதார நெருக்கடி, 40 லட்சம் வெளிநாட்டு சென்ற  தொழிலளார்கள் வேலை இழக்கும் அபாயம், இலங்கையில் வேலையையிழக்கும் நிலை,  உள்நாட்டு யுத்தம், நாட்டில் அமைதியின்மை உருவாக்கின்றது. நாட்டில் நிச்சயமற்ற எதர்காலத்தை உருவாக்கின்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடி, இதனால் பாசிசம் ஆளும் வர்க்கத்தின் பொதுத் தேர்வாகவுள்ளது. புலிகளுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், நாட்டை ஆளவும், பாசிசம் தான் ஓரே தேர்வாக உள்ளது.

 

இந்த தேர்வு அமெரிக்கா பிரஜாவுரிமை பெற்று அங்கு வாழ்ந்த மகிந்தாவின் தம்பி கோத்தபாய மூலம் அரங்கேறுகின்றது. மிக மோசமான பாசிசக் கண்ணோட்டம் கொண்ட, அமெரிக்க ஜனாதிபதி புஸ், பயங்கரவாதத்துக்கு எதிரான தம்முடன் இல்லாத அனைவரும்; பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்களே என்று கூறியதை, சரி என்று கூறிய கோத்தபாயவின் கூற்று தற்செயலானதல்ல.  

 

தாமல்லாத அனைத்தும் புலிகள் என்று முத்திரை குத்தி, பாசிசத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த பாசிசம் இரகசியமாக நடத்திய கொலைவெறியாட்டங்கள், இன்று  வெளிப்படையாக அரங்கேறத் தொடங்கியுள்ளது. அதுவே இன்று இலங்கை கொள்கை கோட்பாடாக வெளிபடுகின்றது.

 

இதன் கீழ் இலங்கையில் ஜனநாயகத்துக்கு இடமில்லை. கூலிக் குழுக்களைக் கொண்ட பாசிச ஆட்சி நிறுவப்படுகின்றது.   
        
பி.இரயாகரன்
08.02.2009


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ