புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில், தோழர் சுடர் எழுதிய கட்டுரைக்கு ரவி சீனிவாஸ் எதிர்வினை புரிந்திருக்கிறார்.அதற்கான மறுப்புக் கட்டுரையின் இறுதிப் பகுதி இது. முந்தைய மூன்று பகுதிகள்   

 

 

ரவி சீனிவாஸ் - க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின்வன்முறை - 1 

ரவி சீனிவாஸ் - க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின்வன்முறை - 2 

ரவி சீனிவாஸ் - க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின்வன்முறை - 3

 

ஏகாதிபத்தியத்தின் சதியே பசுமைப் புரட்சியின் உருவாக்கம்,என்பதை 3 பகுதிகளிலும் பார்த்தோம். ஆனால், ரவி இதை ஒப்புக் கொள்ளமாட்டார். ஏனெனில் அவரது எண்ணமும்,உருவாக்கமுமே பார்ப்பன, பாசிசமாக இருக்கிறது.அதனால்தான் தனது எதிர்வினையில் புதிய ஜனநாயகம் / புதிய கலாச்சாரம் தோழர்களுக்கு, எதுவுமே தெரியாதுதகவல்களை இரவல் வாங்கி, பொய்களை கலந்து எழுதுவதே இவர்களுக்கு வாடிக்கை…’ என்று, கீ போர்டு கூசாமல் அவரால் அடிக்க முடிகிறது.

//தகவல்களை இரவல் வாங்கி பொய்களை கலந்து எழுதும்கும்பலுக்கு பசுமைப் 

புரட்சியின் வரலாறும் தெரியாது, அதன்விமர்சனத்தின் வரலாறும் தெரியாது.//

ஏன் ரவி, நீங்கள் மட்டும்தான் மெத்த படித்தவர் தோழர்கள் படிக்காதவர்கள் ஆராய்ந்து பார்க்காமல் குருட்டாம் போக்கில் அனைத்தையும் எதிர்ப்பவர்கள் என்று நினைக்கிறீர்களா? தப்பு ரவி. தன்னை மட்டுமே உயர்வாக எண்ணுவதும், மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள், பொய்யர்கள், விவரம் அறியாதவர்கள் என எண்ணுவதற்கும் பெயர்தான் பார்ப்பனியம்,பாசிசம்.

நீண்டகால செயல் திட்டத்துடன், மக்கள் திரள் அமைப்பைக் கட்டி, அமைத்து புரட்சிக்கு திட்டமிடும் தோழர்கள், ஒன்றும் தெரியாத முட்டாள்களல்ல. எதையும், எவரையும் எடுத்ததுமே நிராகரிப்பவர்களுமல்ல. ஏற்பதற்கு காரணங்களை முன் வைப்பது போலவே, விலக்குவதற்கான காரணங்களையும் பொதுவில் வைத்து உரையாடுபவர்கள்; உரையாடஅழைப்பவர்கள். தங்களை மறுபரிசீலனை செய்ய என்றுமே தயங்காதவர்கள். அழித்தொழிப்பு, சாகசவாத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்ட் அமைப்பினரை உரையாட தோழர்கள் அழைத்துக் கொண்டே இருப்பதே அதற்கு சாட்சி.

எதுவும் தெரியாமல், ஆனால், எல்லாம் தெரிந்தது போல் பேசக் கூடாது. பசுமைப் புரட்சியின் வன்முறை குறித்து தோழர்கள் மட்டுமல்ல, ‘ஜனநாயகத்தை நம்புபவர்கள் கூட உரையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தோழர்களின் உரையாடலுக்கும், ‘ஜனநாயகவாதிகளின் உரையாடலுக்கும் வித்தியாசமிருக்கிறது. அந்த வேறுபாட்டை உணர்ந்தால்தான் தோழர் சுடரின் கட்டுரையை உங்களால் புரிந்து, உணர்ந்துகொள்ள முடியும். உதாரணமாக,

 //பசுமைப்புரட்சியை தமிழ்நாட்டில் மார்க்சிய வட்டாரங்களில்முதலில் விமர்சித்தது 

எஸ்.என்.நாகராஜன். இந்த விவாதங்கள்1980களில் பரவலாக துவங்கின, அதிகம் வெளியே

 தெரியவந்தன.அதில் முக்கிய பங்கு வகித்தது PPST குழு. நாகராஜன்பார்பனர்,

PPST குழுவிலும் பலர் பார்பனர்கள். அவர்கள்பசுமைப்புரட்சியை கேள்விக்குள்ளாகியவர்கள்.//

என்று எழுதியிருக்கிறீர்கள். இந்த 5 வாக்கியங்களுக்கு இடையில் சீழ் பிடித்துக் கிடக்கிறது உங்கள் சிந்தனை.நாகராஜன் பார்ப்பனர், PPST குழுவிலும் பலர் பார்ப்பனர்கள் என நீங்கள் ஏன் சுட்டிக் காட்டவேண்டும்? பார்ப்பனர்களுக்கு மட்டுமே சமுதாய சிந்தனை, அக்கறை இருக்கிறது என சுட்டிக் காட்டவா அல்லது வேறு எந்த விஷயமும் கிடைக்காததால் காலம்தோறும் மகஇக தோழர்கள் மீது சுமத்தப்படுகிறதே குற்றச்சாட்டு… ‘பார்ப்பன தலைமை என்று அதை மனதில் வைத்து, ‘அவாளும் நம்மளவாதான்…’ என பல்லை இளிக்கிறீர்களா? முட்டாள்தனத்துக்கும்,புறம்போக்குத்தனத்துக்கும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனதுக்கும் ஒரு அளவு இருக்கிறது ரவி

முன்பே சொன்னபடி, எஸ். என். நாகராஜன், ‘பாதுகாப்பான,சோம்பல் நிரம்பிய புரட்சிக்கு வித்திட்டவர்!ஒடுக்கப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும், காலம் காலமாக அடிமையாகவே வைத்திருக்கும் பார்ப்பன வைணவ சித்தாந்தத்தில்(?) மார்க்சியத்தை தரிசித்த கடைந்தெடுத்த பொறுக்கி. அவர், ‘பசுமைப் புரட்சியை எதிர்த்ததையும்,தோழர்கள் எதிர்ப்பதையும் ஒன்று என கருதுகிறீர்களா?

முட்டாள். திருவரங்கம் ரங்கநாதர் சன்னிதியில் பாபாசாகேப்அம்பேத்கர் படத்தை வைத்து, வைணவத்தையே, வைணவ சித்தாந்தத்தையே அதிர வைத்த தோழர்களுக்கும், எஸ். என்.நாகராஜனுக்கும் வித்தியாசமில்லை? ‘திண்ணை மார்க்சியத்துக்கும்‘; விவசாயிகள் - தொழிலாளர்களுடன் ஒன்று கலந்து அமைப்பை கட்டி வரும் நடைமுறை மார்க்சியத்துக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டும் எதிர் எதிர் துருவங்கள். ஒரு பொறுக்கியுடன், தோழர்களை ஒப்பிட வேண்டாம்.

அப்புறம்,

//1983 ல் கிளாட் ஆல்வரிஸ் இந்த விவாதங்களை அப்போதிருந்தஇல்லஸ்டேரட் வீக்லியில் 

எழுதிய கட்டுரை மூலம் பலர்அறியச் செய்தார்.//

என்று சொல்லியிருக்கிறீர்கள். ‘புதிய ஜனநாயகம் இதழ்களில் தோழர் ஆர். கே. இவரைக் குறித்து எழுதியது இருக்கட்டும்.அதை சொன்னாலும் நீங்கள் ஏற்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக, இவருடன், அதாவது இவரிடம் பணிபுரிந்த, எஸ். வி.ராஜதுரை, இந்த கிளாட் ஆல்வரிஸ் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கிறீர்களா?

”…எனது பாதுகாப்பின் பொருட்டும், கொள்கைச் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமலும், அந்த (வடாற்காடு - தர்மபுரி பகுதிகளை குறிப்பிடுகிறார் - சூன்யம்) உண்மை அறியும் குழுவில் வந்திருந்த கோவாவைச் சேர்ந்த சமூகவியல் அறிஞரான கிளாட் ஆல்வாரெஸ் வழங்கிய ஆராய்ச்சித்துறை வேலையொன்றை ஏற்றுக் கொண்டேன்….

அந்த ஆராய்ச்சித்துறைப் பணிகளுக்கு வெளிநாட்டு நிதி உதவியும் கிடைத்து வந்ததை அச்சமயம் நான் அறிந்திருக்கவில்லை. அதை அறிந்துகொண்ட பிறகும் நான் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதைத் தவறாக கருதவில்லை…”
(அழுத்தம் என்னுடையவை - சூன்யம்) ‘மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்… புலவர் கு. கலியபெருமாள் தன் வரலாறு’; பக்கம்: 31, செந்தீ பதிப்பகம், 80, முதன்மைச் சாலை, பெண்ணாடம் - 606105, திட்டக்குடி வட்டம், கடலூர்.

புரிகிறதா ரவி இந்த உண்மையை தோழர்கள் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் பொய், புரட்டு,பித்தலாட்டம், உண்மைக்கு மாறானது என முடிவுக்கு வந்திருப்பீர்கள். ஆனால், ‘பரிமாணம் வழியே நிகழுக்கு வந்த உங்களைப் போன்ற, ஒரு தோழர்தான், சக பயணிதான்,வெளிநாட்டு நிதி உதவியுடன் ஆராய்ச்சி செய்தவர் கிளாட் ஆல்வரிஸ் என்கிறார்!!

ஏன் ரவி, ஏகாதிபத்தியத்திடமே பணம் வாங்கிக் கொண்டு, அந்த ஏகாதிபத்தியத்தையே கிளாட் ஆல்வரிஸ் எதிர்த்திருப்பார் என்று நினைக்கிறீர்களா? தோழர்களையும் அதையே நம்பச் சொல்கிறீர்களா? ஆமாம், அதுதான் உண்மை என கீ போர்ட் அடித்து நீங்கள் சத்தியம் செய்யக் கூடும். காரணம், ‘வெள்ளைக் காக்கா பறக்கிறது என ஏகாதிபத்தியம் சொன்னால் நீங்களும் அதை நம்புவீர்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால்,உங்களுக்கும்(!) படியளப்பவர்கள், அவர்கள்தானே!

சரி, விஷயத்துக்கு வருவோம். கிளாட் ஆல்வரிஸ் எழுதியஅறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை: நவீன மயதாலுக்கு எதிரான எழுச்சி என்ற நூலின் 46ம் பக்கத்தில், ‘பசுமைப் புரட்சியின் அரசியலும் பின் விளைவுகளும் என்னும் அத்தியாயம் இருக்கிறது. தோழர் சுடர் சுட்டிக்காட்டியதையேதான் கிளாட் ஆல்வரிஸும் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், இரண்டுக்கும் பின்னால் இருக்கும் நோக்கங்கள் வேறு வேறு. அது ஏகாதிபத்திய கைக்கூலிக்கும்,புரட்சியாளருக்குமான வித்தியாசம்!

அதேபோல் ‘HOMO FABER: Technology and culture in India, China and the west, 1500 to the present Day’ (இந்த நூலின் மூன்றாம் பதிப்பு,Decolonizing History: technology and culture in India, China and the west, 1492 to the present day என்ற தலைப்பில் வெளியானது), மற்றும் ‘The Science, Development and Violence’ நூல்களைக் குறித்து வரிக்கு வரி உரையாட முடியும். அது இந்த எதிர்வினைக்கு அவசியம் இல்லை என நினைக்கிறேன். காரணம், நாம் உரையாடுவது பசுமைப் புரட்சியின் வன்முறை குறித்துதானே தவிர, கிளாட் ஆல்வரிஸ் குறித்து அல்ல.

HOMO FABER: Technology and culture in India, China and the west, 1500 to the present Day’ நூலைக் குறித்து, 1980ம் ஆண்டு டிசம்பர் ‘படிகள்’ இதழில் சிவராமன், ‘ஏகாதிபத்தியத்தின் பிடியில் இந்திய விஞ்ஞானம்’ என்ற தலைப்பில் விமர்சனம் செய்திருக்கிறார். அதையும் தோழர்கள் வாசித்திருக்கிறார்கள் ரவி!

உங்களுக்காக கிளாட் ஆல்வரிஸ் இணையதள முகவரியை தருகிறேன். ‘நேரம் கிடைக்கும்போது மேய்ச்சல் செய்ய உதவும்!: http://www.typewriterguerilla.com/

பிறகு,

 //நம்மாழ்வாரை பற்றி எழுதியதுடன், இயற்கை வேளாண்மைகுறித்து நூல் வெளியிட்டது 

கழ். கோவை ஞானி அதை செய்யமுக்கிய காரணி நாகராஜன். அப்போது புதிய ஜனநாயகம்

எத்தனை கட்டுரைகளை இயற்கை வேளாண்மை குறித்துவெளியிட்டது என்பதை 

சுடர் எழுதுவாரா?//

என பொங்கி வெடித்திருக்கிறீர்கள். அடப் பாவமே இவ்வளவு அப்பாவியாகவா இருக்கிறீர்கள்? உங்கள் ஆன்மிக குரு எஸ்.என். நாகராஜன் சொல்ல, கோவை ஞானி, நம்மாழ்வார் குறித்துநூல் வெளியிட்டபோது, தோழர்கள் களத்தில் இறங்கி விவசாயிகளை பசுமைப் புரட்சிக்கு எதிராக ஒன்று திரட்டி அமைப்புக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அதாவதுசெயலில் இறங்கியிருந்தார்கள்.

‘மக்கள் கலை இலக்கிய கழகத்துக்கு’ அடுத்தபடியாக கட்டப்பட்ட அமைப்பு ‘விவசாயிகள் விடுதலை முன்னணி’தான். இது மாற்று அமைப்பினருக்கே தெரியும். இதற்கு பிறகுதான் ‘புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ‘பெண்கள் விடுதலை முன்னணி’, ‘புதிய ஜனநாயக தொழிலாளார் முன்னணி’ (அமைப்புகள் தொடரும் ரவி… வெகுமக்கள் இயக்கம் நிற்காது!) ஆகிய மக்கள் திரள் அமைப்புகள் கட்டப்பட்டன.

இறுதியாக ரவி, ‘புதிய ஜனநாயகம் இதழின் முதலாமாண்டிலிருந்தே, ஏகாதிபத்திய - பன்னாட்டு சதிகளுக்கு எதிரான விவசாய தகவல்களும், பசுமைப் புரட்சிக்கு எதிரான வன்முறை குறித்த கட்டுரைகளும் பிரசுரமாகிக் கொண்டுதான் இருந்தன. அவற்றை இங்கு பட்டியலிட ஆரம்பித்தால், பதிவு தாங்காது!

இத்தனைக்கும் அப்போது நீங்கள் கண்காணாத தூரத்திலோ,தொடர்பு எல்லைக்கு அப்பாலோ இல்லை. கோவையில், எஸ்.என். நாகராஜனிடம், தீக்ஷை பெற்றுக் கொண்டிருந்தீர்கள்! ‘நிகழில் பல மொழி பெயர்ப்புகளை செய்து வந்தீர்கள்! எனவே உங்கள் தீக்ஷை காலத்திலிருந்தே செயலில், களத்தில் தோழர்கள் இறங்கியிருந்தார்கள் என்பதை மறக்காதீர்கள்.

அலுப்பாக இருக்கிறது. ‘பசுமைப் புரட்சி சரியே என்று சொல்ல வரும் நீங்கள், ‘உரிய தகவல்களை தந்திருந்தாலாவதுகெத்தாக இருந்திருக்கும். இப்படியா சொதப்புவது? உங்களை இன்னமும் அறிவுஜீவியான வலதுசாரி என நம்புவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்! (ஆமாம் ரவி, இன்னமும் உங்களை நம்பிட்டு இருக்காங்க?!) அப்படியிருக்கும்போது, கொஞ்சமாவது அதற்கு ஏற்ப தகவல்களை தந்திருக்கலாமே? இப்படியா சாயம் வெளுத்துப் போகும்படி எழுதுவது!

சரி சரி விட்டுத் தள்ளுங்கள். இப்போதும் ஒன்றும் குடி முழுகி விடவில்லை. எப்போதுமே நேரம் கிடைக்கும்போதுதான் உங்களால் உரையாட வர முடியும். அப்படி உங்களுக்குகிடைக்கப் போகும் நேரத்துக்காக காத்திருக்கிறோம்.அதுவரை எதிர்வினை, மறுப்புக்கு இடைவேளை!

வா ராசா வா.