குலைக்கிற சொறிநாய் கடிக்காது உதை வாங்குற சொறிநாய் குலைக்காது - சொறிநாயை ஒழிப்போர் சங்கம்


தலைப்பில் உள்ள பாட்டு அனைவருக்கும் அறிமுகமானதே. 'புதுபேட்டை' படத்தில் ரவுடிகள் என்ற சொறிநாய்களுக்கான பாடலாக அது வரும். தற்போது CPM அடைந்துள்ள பரிணாம வளர்ச்சிக்கும் அந்த பாடல் பொருத்தமாக உள்ளது. சில நாட்கள் முன்பு CPM சொறிநாய்கள் பம்மி பதுங்கி ஓடிய சம்பவம் குறித்தே இந்த பதிவு.

ஏற்கனவே பல்லாவரத்தில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடிற்கு பிரச்சாரம் செய்யப் போன புஜதொமு தோழர்களிடம் வம்பு செய்து விழி பிதுங்கி போயுள்ளது CPM சொறிநாய். (கிளைக் கதை: பல்லாவரம் பிரச்சினையில் புஜதொமு கொடுத்துள்ள FIR பதிவு செய்யப்படும் நிலையில் உள்ளது. அது பதிவு செய்யப்பட்டால் ரவுடித்தனம் செய்த CPM சொறிநாய்களின் உத்தியோகத்துக்கு ஆப்பு ஆகிவிடும். இப்போது தங்களது நிரந்தர கூட்டணியில் உள்ள போலீசை வைத்து கெஞ்சியும், மிரட்டியும் வருகிறார்கள். போலீசுக்கும் ரவுடிக்கும் இருக்கும் கூட்டணியில் இது ஒரு வகை).

இந்நிலையில், ஆவடியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடிற்கு பிரச்சாரம் செய்யப் போன இளம் தோழர்களிடம் இதே போல ரவுடித்தனம் செய்துள்ளனர் CPM சொறிநாய்கள். "வேற ஏரியாவுல இருந்து இங்க வந்து ஏண்டா பிரச்சாரம் செய்கிறீர்கள்" என்று வம்பு செய்துள்ளனர் CPM சொறிநாய்கள். எங்க ஏரியா உள்ள வராதே என்று புதுப்பேட்டை சொறிநாய்கள் ஸ்டைலில் கூவியவர்களிடம் இருந்து ஒதுங்கி வந்துள்ளனர் தோழர்கள். சிறிது நேரத்திற்கு பிறகு இந்த இளம் தோழர்கள் ஒரு மூத்த தோழர் துணையுடன் அங்கு மீண்டும் பிரச்சாரம் செய்ய சென்றுள்ளார்.

மீண்டும் வந்த CPM சொறிநாய்களிடம் மூத்த தோழர் நடத்திய உரையாடல் பின்வருமாறு போனது:

புஜதொமு தோழர்: ஏரியா விட்டு ஏரியா வந்துதாண்டா பிரச்சாரம் செய்வோம் உன்னால என்ன புடுங்க முடியுமோ, புடுங்கிக் கோடா.

CPM சொறிநாய்கள்: இல்ல தோழர், அது... நாங்க சும்மா விசாரிச்சோம் அவ்வளவுதான்....

மூத்த தோழர் குறித்து அறிந்திருந்த CPM சொறிநாய்கள், இப்படியாக பம்மி, பதுங்கி, குலைந்து, தமது வாலை ஆட்ட வழியின்றி பின்னால் சொருகிக் கொண்டு ஓடியுள்ளனர். அதிமுக, திமுக, பாமக கட்சிகளிடம் இருக்கும் நாகரிகம் கூட CPM இடம் இல்லை என்பதும். இந்தியாவிலேயே ஆகக் கேவலமாக சீரழிந்த கட்சியாக, சொறிநாய்களின் தலைமை சக்தியாக CPM இருப்பதும் கடந்த சில வருடங்களில் தொடர்ந்து சந்தி சிரித்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று. ஏரியா பிரித்து ரவுடியிசம் செய்யும் கட்சியாக அது வளர்ந்துள்ளது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை குறுக்கு வழியில் அடைவோம் என்று சொன்னவர்கள் இப்போது சொறிநாய்களின் மொள்ளமாறித்தனத்தையே அடைந்துள்ளனர்.

கலகம் என்ற தோழரின் கவுஜ(சில மாற்றங்களுடன்):

சிவப்பு சாயம்
வெளுத்து போச்சு டிங் டிங் டிங்

பன்னி வேசம்
கலஞ்சு போச்சு டிங்டிங்டிங்

தீக்கதிரும்
குப்பையாச்சு டிங்டிங்டிங்

போலி விடுதலைக்கு
பைத்தியம் முத்தி டிங்டிங்டிங்

CPM சொறிநாயின்னு தெரிஞ்சு
போச்சி வொவ் வொவ் வொவ்...

சூரியன்

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] ! 
காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்! 
போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !
அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!
அமர்நாத் - சோம்நாத்
ஜனநாயகம் என்பது RSS போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு மட்டுமே உரியது - கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !!!
சி.பி.எம். அம்பிகளின் தீக்கதிரும், பத்திரிக்கா தர்...
”கழிசடையைவிட கூவம் எவ்வளவோ மேல்”, “சிபிஎம் கட்சியை...