இதுவரை வீட்டில் பொத்திப் பொத்தி வளர்த்த உங்கள் அருமை மகன்/ள் ஒரு சில மணி நேரம் உங்களை விட்டுப் பிரிந்து போக வேண்டிய அந்த நேரம் வந்து விட்டது!

ஆம்! பள்ளிக்கு அனுப்ப வேண்டும்!
இதுவரை ஏதோ கேட்டதற்கு பதில் சொல்லி, அல்லது, தன் கருத்துகளைப் புகட்டி, பாங்குற வளர்த்த காலம் இதோடு முடிவடைகிறது!
இனி, வெளியுலக நன்மை, தீமைகளை எதிர் கொள்ளப் போகும் நேரம் அவர்களுக்கு!
இப்போதுதான் கொஞ்சம் தீவிரமாகவே, நீங்கள் பாலியல் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தருணம்!
சரி, பாலியல், பாலியல் என்கிறீர்களே, பாலியல் கல்வி என்றால் என்ன நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தகவல்களைத் தெரிந்து கொண்டு,[Information] பாலியல் பற்றியதான ஒரு வரைமுறைகளையும்,[attitudes] நம்பிக்கைகளையும்,[beliefs] பாலியல் அறிமுகத்தையும்[Sexual identity], உறவுகளின் மேம்பாட்டையும்,[relationships] நெருக்கத்தையும்[intimacy] "நீங்கள்" தெரிந்து கொள்ள வேண்டிய நேரம்!
என்னடா இவன்! இதெல்லாம் எனக்குத் தெரியமலா பிள்ளைகளைப் பெற்றிருக்கிறேன் எனக் கோவியார் [ஏன்? நீங்களும்தான்!] கேட்பது காதில் விழுகிறது!
நீங்கள் அறிந்து பழகியது வேறு! 
இப்போது நீங்கள் எதிர் கொள்ளப் போவது வேறு!
பட்டும் படாமலோ, அல்லது முயலாமலோ, நம் பெரியவர்கள் செய்யாததை, செய்ய வேண்டாம் என விட்டதை, செய்யத் தவறியதை, நாம் செய்ய வேண்டிய நேரம்!
மாறிக் கொண்டே இருக்கும் உலக நியதியின் கட்டாயம்!
சம்மதத்துடன்[Informed Choices] செய்து கொள்ள வேண்டிய சில முடிவுகளை அவர்கள் தெரிந்து கொள்ள , தனது நம்பிக்கையையும்,[Self confidence] சுய மரியாதையையும்[Self-respet] காப்பற்றிக் கொள்ள வேண்டியதின் அவசியத்தையும், 
இதன் மூலமே அவர்கள் தவறான தூண்டுதல்களை[abuse] , துஷ்பிரயோகம் செய்தலைத் தவிர்த்தலை,[exploitation] விரும்பத்தகாத உறவுகளை[Unintended practices] ஒடுக்க, நாம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நேரம்.
தருணமிதைத் தவற விடுவாயோ?
5 முதல் 7 வயது வரைக் குழந்தைகள் தனது பாலியல்[] பற்றி தெரிந்து கொண்டு இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறுவர்கள் தன் வயதொத்த சிறுவர்களுடனும்,... 
சிறுமியரும் அதே போலவும்,...
நட்பு பழக முற்படுவார்கள்.
"சீ போ! நீ பொம்பளை! எங்கிட்ட வராதே!
" போடா! உங்கூட யார் வந்தா? வெக்கமில்லை ஒனக்கு!" 
என்ற வசனங்களை இப்போது அதிகம் பார்க்கலாம்.
குழந்தைகள் எப்படி வருகின்றன என்ற முந்தையக் கேள்வி இப்போது அதிகம் வலுப் பெற்று, சற்றுத் தீவிரமாகவே கேட்கப்படும்!!
இப்போது அதை எப்படிக் கையாள்வது எனப் பார்ப்போம்!
" நான் எப்படிம்மா ஒன் வயத்துக்குள்ளே வந்தேன்"
" எப்படி வந்திருப்பேன்னு நீ நினைக்கிறே?"
இப்படிக் கேட்பதின் மூலம், அது என்ன நினைக்கிறது என்று அறிந்து கொள்ள ஒரு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
அப்படிக் கேட்காமல், அதி புத்திசாலித்தனமாக ஏதோ சொல்லப் போய் ஏடாகூடமாக வாய்ப்பிருக்கிறது!
மேலும், என்ன, எவ்வளவு சொல்லலாம் என்று உங்களை நிதானித்துக் கொள்ள ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது!
அதற்கு எவ்வளவு தெரியும் இதுவரை என அறியவும் முடியும்!
ஒரு கோழிமுட்டையை எடுத்துக் காட்டி, 
"இதுலேர்ந்துதான் ஒரு கோழி வருதுன்னு தெரியுமில்லை உனக்கு! அது மாதிரி நீ என் வயத்துக்குள்ளே ஒரு சின்ன முட்டையா இருந்தே! அப்படியே பெருசாகி அப்புறம் நீ பொறந்தே!" 
எனச் சொன்னால் அதுவே அக்குழந்தைக்கு சமாதானமாகிவிடும்!
தனக்குத் தெரிந்த ஒன்றைக் காட்டியே அம்மா சொன்னாள் என்று தன் புத்திசாலித்தனத்தை மெச்சியபடி, 'பெருந்தன்மையாய்' உங்களை 'மன்னித்து' விட்டுவிடும்!
'தன்னால் எதுவும் செய்ய முடியும்' என்ற உணர்வை சொல்லிக் கொடுப்பதே இவ்வயதுக் குழந்தைகளுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்!
இப்படிச் சொல்கிறேன் எனத் திகைக்க வேண்டாம்.
தன் அளவு தெரிந்த எந்தக் குழந்தையும் அதைத் தாண்டிச் செல்லாது.
இதுதான் உண்மை!
அளவு[Limitations] தெரியாத குழந்தைகள் தான் ஆழம் தெரியாமல் காலை விடுகின்றன.
ஆண் என்றால் இது, பெண் என்றால் இத்தனை என அளவுகோள்களை நிர்ணயிக்காமல், உனக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது; அதை வளர்க்க, செயல்படுத்த, நான் உறுதுணையாய் இருப்பேன் என்னும் உணர்வை இவ்வயதில் விளைப்பது அவர்களது தன்னம்பிக்கையையும், உங்கள் மேல் உள்ள பாசத்தையும், மதிப்பையும் மேம்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இந்த வயதில்தான் தனது பிறப்பு உறுப்புகளைப் பற்றிய கவனம் தெரிய வருகிறது.
சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள்!!
[இது போல 'நான்' கேட்கவில்லையே என மறுக்காதீர்கள்! காலம் மாறிவிட்டது! இதற்குள், உங்கள் குழந்தை, நீங்கள் அதன் வயதில் இருந்த போது பார்த்திராத பல காட்சிகளை டெலிவிஷன் மூலமோ, அல்லது இன்ன பிற வகையிலோ அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்!!]
"எனக்கு ஏன் ராஜுக்கு இருக்கற மாதிரி ஒண்ணுக்கு போற இடம் இல்லை?"
"நான் எங்கேர்ந்து வந்தேன்னு நீ காட்டுறியா?"
"ராஜு ஏன் நின்னுகிட்டே ஒண்ணுக்கு போறான்? நான் ஏன் ஒக்காந்துகிட்டு போவணும்?"
"என்னாலேயும் கொழந்தை பெத்துக்க முடியுமா?"[ஆண் குழந்தை கேட்பது]
இதற்கு நம் பதில் என்னவாக இருக்கலாம்?
1. உனக்கு எப்பவுமே அது இல்லை. ஏன்னா நீ ஒரு பொண்ணு. பொண் குழந்தைகளுக்கு ஆம்பளைப் பசங்க மாதிரி நீட்டா கிடையாது. சரியா? அதான் ஒன்னோட ஸ்பெஷாலிடி![Speciality]
"2. நீ என்னோட ரெண்டு காலுக்கும் நடுவுல இருக்கற ஒரு இடத்து வழியா வந்தே! அதை உனக்கு நான் காட்ட முடியாது! ஏன்னா, அது என்னோட தனிப்பட்ட, மறைக்கப்பட்ட[private] இடம்! இப்ப நான் உனக்கு ஒரு புக்[Book] காட்டறேன், அதுல இது மாதிரி இருக்கும், அப்போ உனக்குப் புரியும், சரியா?
"3. ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் இயற்கையிலேயே தனித்தனியா இடம் இருக்கு ஒண்ணுக்கு.-- அது பேர் சிறுநீர்-- போறதுக்கு. இப்ப இந்த ஹோஸ் பைப் வழியா தண்ணி எப்படி சொய்ய்ங்ன்னு விழுது! அது மாதிரி ஆம்பளைங்களுக்கு இருக்கு. அதனால், அவங்களால நின்னுக்கிட்டு போக முடியுது. உன்னால முடியாது. ஏன்னா உனக்கு அப்படி இல்லை.
"4. பொம்பளைங்கதான் குழந்தை பெத்துக்க முடியும். ஏன்னா, அவங்களுக்குத்தான் யுடிரஸ்,[Uterus] கர்ப்பப்பைன்னு ஒண்ணு இருக்கு. ஆம்பளைங்களுக்குக் கிடையாது. ஆனா, உன் அப்பாதான் குழந்தை வர்றதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணினாரு! நீயும் பெரியவனான உடனே,.. வேணுமின்னா அப்பாவாகலாம்!"
இதெல்லாம் ஒரு சில உதாரணங்களே! 
நீங்கள் இதை எப்படி வேண்டுமானாலும், உங்கள் கருத்திற்கேற்ப மாற்றி வடிவமைத்துச் சொல்லலாம்.
....இன்னும் இந்த முக்கியமான வயதைப் பற்றிச் சொல்ல வேண்டியிருப்பதால்......