சமர் இதழ்கள் 5-6 இல் தேசிய சக்திகள் தொடர்பான கட்டுரையினுடாக மனிதத்தின் கரிகாலன் எழுதிய தேசிய சக்திகள் தொடர்பான கட்டுரையை விமர்சித்தோம். இதைத் தொடர்ந்து மனிதம் இதழ் 18 இல் இவ் விமர்சனத்தை விமர்சனமா? தாக்குதலா? என்ற தலைப்புடன் ஒரு விமர்சனத்தை மனிதம் ஆசிரியர் குழு முன் வைத்திருக்கின்றது

.

குறித்த இவ் விமர்சனத்தில் மாற்றுக். கருத்து உள்ளோரை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் வேண்டும், மாறாக மாற்றுக் கருத்துள்ளோரை எதிரணிக்குத் தள்ளுதல் என குறிப்பிட்டுள்ளது. சமரின் இதே கட்டுரையில் தூண்டில் உயிர்ப்பு மீதான எமது விமர்சனத்தில் மாற்று கருத்துக்களை அங்கீகரித்து ஆரோக்கியமான போக்குகளைக் கொண்டோம். அவர்களைத் திரிபுகள் என்றோ அல்லது வேறு பெயரிலோ நாம் சுட்டிக்காட்டவில்லை. நாம் எப்போதும் மாற்றுக் கருத்துக்களை அங்கீகரிக்கின்றோம். அதேநேரம் அவைகளை விமர்சிக்கின்றோம். குறித்த கரிகாலனின் கட்டுரையில் மாற்றுக்கருத்துக்களாகவே பார்த்து அக் கருத்துக்களையே விமர்சித்தோம். குறித்த கருத்து அடிப்படை மார்க்சியத்தையே நிராகரித்து, மார்க்சிசத்தை திரித்து விடுவதையே மீண்டும் உறுதியாக திரிபுவாதம் என்று சுட்டிக் காட்டுகிறோம். திரிபை திரிபு என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது. கரிகாலனையோ மனிதம் பத்திரிகையையோ நாம் வேண்டுமென்று திரிபுகள் என முத்திரை குத்த வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. இது வரை நாம் மனிதத்தையோ கரிகாலனையோ சந்தித்தது கிடையாது. அப்படியிருக்க நாம் ஏன் முத்திரை குத்த வேண்டும். சஞ்சிகையில் வெளிவந்த கருத்துக்களைக் கொண்டு, கருத்துகள் திரிக்கப்பட்டிருந்தால் அவைகளை திரிபுகள் என நாம் கூறுகின்றோம்.

 

இதை மாவோ மார்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை நிராகரித்தால், அதன் அனைத்தும் தழுவிய உண்மையை நிராகரித்தால் அது திரிபுவாதமாகும். திரிபுவாதமென்பது முதலாளித்துவ வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவம். சோசலிசத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்துக்குமிடையிலுள்ள வேறுபாடுகளை திரிபுவாதிகள் மறுக்கின்றனர்..அவர்கள் வக்காளத்து வாங்குவது உண்மையில் முதலாளித்துவ மார்க்கத்திற்கன்றி சோசலிச மார்க்கத்துக்கல்ல.

 

நன்றி சீன கம்யுனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மகா நாட்டு உரை(மாவோ 12 மார்ச் 1957)

 

திரிபு வாதம் அல்லது வலது சந்தர்ப்பவாதம் என்பதொரு முதலாளித்துவ வர்க்க சித்தாந்த ஒட்டமே. இது வரட்டுவாதத்தை காட்டிலும் மேலும் அபாயமானது. திரிபுவாதிகள், வலதுசந்தர்ப்பவாதிகள், மார்க்சியத்துக்கு சொல்லளவில் சேவை செய்கின்றனர். அவர்கள் கூட வரட்டுவாதத்தை தாக்குகின்றனர். ஆனால் அவர்கள் உண்மையில் தாக்குவது மார்க்சியத்தின் மிக அடிப்படை அம்சங்களே ஆகும். அவர்கள் பொருள்முதல்வாதத்தையும், இயங்கியலையும் எதிர்க்கின்றனர். அல்லது திரித்துப் புரட்டுகின்றனர். மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பாத்திரத்தையும் எதிர்க்கினறனர் அல்லது பலவீனப்படுத்த முயல்கின்றனர். சோசலிச மாற்றத்தையும், சோசலிச நிர்மாணத்தையும் எதிர்க்கின்றனர் அல்லது பலவீனப்படுத்த முயல்கின்றனர்.

 

நன்றி மத்தியில் உள்ள முரண்பாடுகளை சரியாக கையாளுவது பற்றி(மாவோ)

 

எதிரணிக்கு தள்ளுதல் என்றால் யார் எதிரி? வெறும் புலிகள் மட்டுமா? இல்லை, புலிகளும் மற்றும் குழுக்களும் போராட்டத்துக்கு நேரடியாக எதிராக தெரியலாம். ஆனால் திரிபுவாதமும், பிழைப்பு வாதமும் முதுகில் குத்தும் எதிரியே. இதுவே சோவியத் முதல் சீனா வரை நடந்தது. முற்போக்கென்று சொல்லும் எல்லோரின் கருத்துக்களின் மீதும் நாம் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க இன்றைய நிலை கோருகின்றது. இது எதிரணிக்கு தள்ளுவதை விட போராட்டத்திற்கும் பலம் கொடுக்கும். இக் கருத்துக்களை எதிரணிக்கு தள்ளுவதென பார்ப்பவர்களே மாற்றுக் கருத்துக்களை மறுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

 

"மனிதத்தில் கரிகாலன் எழுதிய கட்டுரை என்று கூறப்படும் பத்திரிகை நெறியை கடைப்பிடிக்க தவறியதே சமர் செய்த கடுமையான தவறு" இது எப்படியென புரியவில்லை. ஒரு பத்திரிகை சில நோக்கங்களை மையமாக வைத்தே வெளிவருகிறது. இதை மனிதம் இதழ் 13 இல் ஆசிரியர் தலையங்கத்தில் ஆக்கங்களுக்கு ஆக்கதாரர்களே பொறுப்பு. என்று கூறும் சமூகப்பொறுப்புணர்வுள்ள பத்திரிகைகள் கூட உதாரணமாக யாழ்நகரிலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேறியது சரியான நடவடிக்கையென்று ஒருவர் கட்டுரை வரைந்தால் அதை பிரசுரிக்கவா போகிறது. இந்த வகையில் தான் எமக்கென்றும் சில வரையறைகள் உண்டென்பது உண்மை. சமூகநலனை நோக்கிய ஆக்கங்களையே பிரசுரிக்கின்றோம். தொடர்ந்தும் பிரசுரிப்போம். (ஆக்கங்களுக்கு ஆக்கதாரர்களே பொறுப்பு.)மனிதம் ஆசிரியர்குழு இக் கூற்றை அங்கீகரிப்பதுமில்லை, பத்திரிகையில் தாஙகி வருவதுமில்லை. இக்கூற்றை பத்திரிகைகள் பிரசுரிப்பதன் மூலம் ஆக்கங்களுக்குரிய பொறுப்பை ஆக்கதாரர்களிடமே முழதாக விட்டுவிட்டு, தமது பொறுப்பை தட்டிக் கழிப்பதாக அர்த்தப்படுகின்றது என்ற வரையறையில் மனிதம் இக்கட்டுரையில் கருத்தின் மீது பொறுப்புள்ளதை சுட்டிக் காட்டுகின்றோம். அந்த வகையில் மனிதம் மீது எமது விமர்சனம் பத்திரிகைத் தர்மத்துக்குட்பட்டதே.

 

இக் கருத்து தொடர்பாக மனிதம் குறித்த எமது விமர்சனத்தின் பின் கூட கருத்து கூற மறுப்பதை என்னவென்பது, இதை வேண்டுமென்றால் சந்தர்ப்வாதம் என்றே சொல்ல வேண்டும். இது முத்திரை குத்தல் அல்ல. ஒரு கருத்தின் மீது கருத்து சொல்ல மறுப்பது ஏன்? இது பற்றி எமக்கு தெரியாது அல்லது கற்க வேண்டும் எனில் நாம் சொன்ன கருத்தை திரிபு அல்ல எனச் சொல்லும் தார்மீகப் பலம் உங்களுக்கு கிடையாது. இதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் நடுநிலையென்று ஒன்றுமேயில்லை. ஒரு கருத்தின் மீது சரி, பிழை ஆராயும் சக்தி எல்லா சாதாரண மனிதனுக்குமுண்;டு. மனிதம் இன்று எது சரியெனப்படுகிறதோ அதைச் சொல்லியிருக்க வேண்டும். சொல்லாமல் விடுவது என்பது சந்தர்ப்பவாதமாகும்.

 

ஆக்கங்களுக்கு ஆக்கதாரர்களே பொறுப்பு என்பதை மனிதம் ஏற்பதால் ஒரு ஆக்கதாரரின் கட்டுரையை பிரசுரிக்கும் அதேநேரம் அதில் உடன்பாடில்லாதிருப்பின் தமது விமர்சனத்தையும் முன்வைப்பதனுடாக விவாதத்தைத் தூண்டுவதுடன் மனிதம் சஞ்சிகை மக்களுக்குத் தங்கள் அரசியல் நிலையை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து மௌனமாக விட்டுவிடுவது பொதுப்படையாக திரிபல்ல என சொல்லுவதனுடாக மனிதத்துக்கு அக் கருத்தேயுள்ளதென மக்கள் எண்ணுவார்கள். ஒரு பத்திகையென்பது ஸ்தாபகர் அப் பத்திரிகை தாங்கிவரும் கருத்தை வைத்து மக்கள் அதன் பின் அணிதிரட்டப்டுகிறார்கள். அந்த வகையில் மனிதம் ஒவ்வொரு கருத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும். அக் கருத்தில் சரி, பிழையை தங்கள் சார்பில் விடும் (விளம்பரப் பத்திரிகை போல்) நிலையில் மனிதம் இருந்திருக்கின்றதா என்ற சந்தேகம், விமர்சனமா? தாக்குதலா? என்ற விமர்சனத்தினூடாக எழுகிறது. குறித்த கட்டுரையை திரிபுவாதம் என்று குறிப்பிடப்பட்டதை மனிதம் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை என்று சொன்னவர்கள் கரிகாலன் தூண்டில், சமர், உயிர்ப்பு பற்றி சொன்ன மூலவர்கள் சொன்னதை பொருத்தமுயல்வது, பழமைவாதம் எனச் சொன்னதைப் பற்றி மௌனம் சாதிப்பது என்பது மனிதம் அதை ஏற்றுக்கொண்டதாக அர்த்தப்படுகிறது. ஒரு கட்டுரையாளருக்கு கருத்துக்களை பழைமைவாதம் எனச் சொல்லும் உரிமையுள்ளது. அது எப்படி என்பதை ஆதாரத்துடன் புரியவைக்க வேண்டும். அப்படி இல்லையேல் கரிகாலன் சொன்ன முறை தான் முத்திரை குத்தல். எந்தக் கட்டுரையாளரும் எக் கருத்தையும் ஒன்றுடன் பொருத்தும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். ஆனால் அப்படி பொருத்தும் போது அது எப்படி? என புரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது முத்திரை குத்தலாகவே அமையும். இவற்றை ஏறறுக்கொள்ள மறுப்பது பத்திரிகை தார்மீகமாகாது.

 

மற்றும் எமது விமர்சனத்தில் வசனத்தைப் பிரித்தெடுத்து விமர்சனத்தை முன்வைத்த போக்கு விமர்சனத்தை தடைசெய்யும் போக்கென்;றும் கருத்தை சிதைத்துள்ளதென்றும் மனிதம் கூறியதென்பது அடிப்படையில் ஒரு விமர்சனம் கட்டுரையின் மீது நடைபெறுவதாகயிருக்க வேண்டும். பொதுவான விமர்சனம் என்பது மயக்கமானதாகவும், வாசகர்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத வகையிலானதுமே. இதே கரிகாலன் உயிர்ப்பின் மீதான விமர்சனத்தை இதே போல் செய்திருந்தார். அது பற்றி மௌனம் சாதித்த மனிதம் எம் மீது இதையொரு குற்றச்சாட்டாக முன் வைத்துள்ளனர். கரிகாலனின் உயிர்ப்பு மீதான விமர்சனமுறை (வசனத்தை பிரித்தெடுத்து) சரியானது. ஒரு கட்டுரை மீதான விமர்சனமென்பது கட்டுரையில் ஒவ்வொரு வசனம் மீதும் அமையும். இது தவிர்க்க முடியாதது. இN,த முறை மார்க்ஸ் முதல் மாவோ வரை செயதுள்ளனர். நாம் பிரித்தெடுத்தன் ஊடாக கட்டுரையின் கருத்தினை சிதைத்துள்ளதெனில் நாம் சுய விமர்சனத்துடன் ஆராயத் தயாராகவுள்ளோம். அதை மனிதம் சுட்டிக்காட்ட வேண்டும்.

 

மனிதத்தின் கட்டுரையில் தாக்குதலா? என்று கேட்பதனூடாக வாசகர்களுக்கு தமது கருத்தை சொல்லாமல் பிரச்சனையை திசை திருப்புவதையோ இவை முத்திரை குத்தல் எனச் சொல்லி மௌனம் சாதிப்பதையோ கை விடக் கோருகிறோம். ஏனெனில் குறித்த கட்டுரையில் பிரித்தெடுத்த ஒவ்வொரு வரி மீதும் நாம் தெளிவான விமர்சன வழியை முன்வைத்தே அது எப்படி திரிபாக உள்ளதென சுட்டிக்காட்டினோம். இது திரிபல்ல எனின் எப்படி என்பதையும், இது தாக்குதல் எனின் எப்படி என்பதையும் எமது ஒவ்வொரு கருத்தின் மீதும் விமர்சனத்தை முன்வைக்கும்படி மனிதத்திடம் கோருகின்றோம்.

 

ஆசிரியர்-குழு