ஊழ்

நம்பிக்கை நலிந்த
குருட்டு விழிகள் பாதைகளைக் காட்டுகின்றன
குழறுபடிகளின் வருகைக்குப் பின்
மனிதர்களின் மண்டையோடுகள்
மரணத்துக்கு முன்னைய காலங்களுக்குள் சிதறிக்கொண்டன

 

குருதியுள் முளைத்த ஈக்களோ
வாழ்ந்து பார்த்து
நித்தியம் குறித்துத் தும்மிக்கொண்டன!

மெல்லிய காற்றுள்
உந்தப்படும் தூசியின் இருப்பைச்
சுட்டெரித்த காலம் கொடியதே என்று நீ புலம்புகிறாய்
 

hbpr65on_4906ec3914d9_pxgen_r_220xa
எதிர்காலமோ
அன்றி நிகழ்காலமோ
கடந்தகாலமோ
இதுவரை எனக்குள்ளோ
வெளியுள்ளோ கிடையாது

மீண்டுவிட்ட வினாவுக்குள்
கருத்தரித்த நித்தியம்
ஒடுங்கி விரியும் உயிரின் இருப்போ
காலத்தைக் கிழித்துக்கடாசியது எனக்குள்

மெல்ல உதிரக் காத்துக்கிடக்கும்
நரை அரித்த விதையோ
முளைப்பதற்குள் மரணித்தாக வேண்டும்
ஆசையின் இருட்டில்
ஒன்றுபட்டுக் கிடக்கிறது ஊழ்

பிரித்தெறி
தூரத்துக்குத் துரத்திவிடு
எட்டப் போவதற்குள்
எதற்குள்ளோ பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு
மண்டையோடுகளுக்குள் சிறைப்படுவதற்கு விருப்பற்றவை

http://srirangan62.wordpress.com/