தேவையான பொருட்கள்
சிக்கன் - 3துண்டு இஞ்சி பூண்டு விழுது- -1 தேக்கரண்டி சில்லிசிக்கன் பொடி-தேவையான அளவு தயிர்- 1 தேக்கரண்டி எலுமிச்சை ஜீஸ்- -1 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு தோசை மாவு- 2 கப் வெங்காயம்- 2 பச்சை மிளகாய்- 3 கொத்தமல்லி தழை-2 கொத்து எண்ணை தேவைக்கேற்ப்ப வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிவைக்கவும் அதனை மிளகுதூள் உடன் கலக்கி வைக்கவும் ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் இஞ்சி பூண்டு ,தயிர்,சில்லிசிக்கன் பொடிபோட்டு நன்கு கலக்கி எலுமிச்சை ஜீஸ் போட்டு 5 மணிநேரம் ஊறவைத்து கிரில் அல்லது தோசைகல்லில் வைத்து வேக வைத்து எடுக்கவும் அதனை பொடியாக நறுக்கிவைக்கவும் ![]() ,பின்பு தோசைக்கல் சூடானதும் மெல்லிய தோசையாக தேய்க்கவும் உடனே அதன் மேல் சிக்கனை மேலே தூவவும்
அதர்க்கு மேல் வெங்காய கலவையை போடவும்[இந்த தோசை என் குழந்தைக்கு சுட்டதால்வெங்காயம் சேர்க்கவில்லை] நன்கு அமுக்கி விடவும்
தோசை சுற்றிலும் சிறிது எண்ணை விடவும் தோசை கிரிஸ்பாக வந்ததும் திருப்பி போடாமல் எடுக்கவும் சூடாக காரச்சட்னியுடன் பரிமாறவும் |