"KG ஷா எங்களுடைய ஆள். நானாவதிக்கு பணத்தின் மீது தான் ஆசை" "(குஜராத் வன்முறை) குற்றவாளிகள் நானாவதி-ஷா ஆணையம் குறித்து பயப்பட வேண்டிய தேவையில்லை" என குஜராத் அரசு சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா தெரிவித்தான்.

தெஹல்கா:
வன்முறை கலவரங்களின் போது யார் முன்னின்று நடத்தினார்?

 

பாண்ட்யா: சிலர் இருந்தார்கள் இன்னும் சிலர் இல்லை என்று சொல்லுவதே தவறாகும்.... சம்பவ இடங்களுக்குச் சென்ற ஒவ்வொருவர்களும் பஜ்ரங்தளிலிருந்தும் விஹெச்பியிலிருந்தும் போனார்கள்....

தெஹல்கா: ஜெய்தீப்பாய் சம்பவ இடத்திற்குப் போனாரா?

 

பாண்ட்யா: ஜெய்தீப்பாய் கூட போனார்... எந்தெந்த தலைவர்கள் எங்கெங்கே போனார்கள், யாருக்கு நேரடியான பங்கு (தொடர்பு) இருந்தது, யாருக்கு சந்தேகபடும் படியாக பங்கு (தொடர்பு) இருந்தது - ஆணையத்திறகு முன்பால் இந்த விளக்கங்கள் எல்லாமே இருக்கிறது, எல்லா கைதொலைபேசி எண்களும், யாரெல்லாம் எங்கே சென்றார்கள்..... இடங்கள் கூட எங்களிடம் உள்ளன......

 

தெஹல்கா: ஆம் சில சர்ச்சைகள் கூட நடந்தனவே.....

 

பாண்ட்யா: அது இப்போதும் உள்ளது.... இன்னும் யாருடைய கைதொலைபேசி எண்கள் அங்கே இருந்தது என்பதும் எனக்குத் தெரியும்..யார் யார் எவர்களிடம் எங்கிருந்து பேசினார்கள்.... என்னிடம் பேப்பர்கள் உள்ளது....

 

தெஹல்கா: எனவே இதனால் ஹிந்துக்களுக்கு ஏதேனும் சில பிரச்சனைகள் இருக்குமா?.... ஜெய்தீப்பாய்க்கு இன்னும்.......

 

பாண்ட்யா: ஐயா, நான் தான் வழக்குகளை எதிர்கொள்கிறவன்..... கவலைபடாதே.... இதுபற்றி கவலைபடாதே!, பிரச்சனைகள் ஏதும் இங்கே ஏற்பட போவதில்லை. ஒருகால் பிரச்சனை ஏதும் ஏற்பட்டாலும் நான் அதை தீர்தது விடுவேன்.......... நான் யாருக்காக இத்தனை ஆண்டுகளையும் செலவழித்துள்ளேன்?... எனது சொந்த இரத்தத்திற்காக.

தெஹல்கா: ஆணையத்தின் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு எதிராக போக வாய்ப்பு இருக்கிறதா?

 

பாண்ட்யா: இல்லை, இல்லை.... காவல்துறையினருக்கு சில பிரச்சனைகளை இது உருவாக்கலாம்.... அது அவர்களுக்கு எதிராக போகலாம்... பாருங்கள், நீதிபதிகள் காங்கிரஸால் தேர்வு செய்யபட்டவர்கள்.

 

தெஹல்கா: ஆம்...நானாவதி... இன்னும் ஷா.

 

பாண்ட்யா: அது மட்டுமே பிரச்சனை.... அந்த நேரத்தில் நம்முடைய தலைவர்கள் அவசரத்தால் சர்ச்சைக்குள் மாட்டிக் கொண்டனர்....... அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், நானாவதி சீக்கியர் கலவரம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளதால்..... காங்கிரஸ் நீதிபதியை அவர்கள் பயன்படுத்தினால் சர்ச்சைகள் வராது.....

 

தெஹல்கா: நானாவதி முழுமையாக உங்களுக்கு எதிராகவே உள்ளாரா?

 

பாண்ட்யா: நானாவதி சாமர்த்தியமான ஆள்... அவருக்கு பணம் வேண்டும்.... KG ஷா புத்தி கூர்மையுடையவர்... அவர் எங்களுடைய ஆள்... அவர் எங்களிடத்தில் அனுதாபம் உடையவர்....... நானாவதி பணத்திற்கு பின்னால் இருப்பவர்.....

 

தெஹல்கா: அவர் பணம் பெற விரும்புகிறார் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்......

 

பாண்ட்யா: அது உள்விவகாரம்......

 

தெஹல்கா: நானாவதி-ஷா ஆணையம் ஹிந்துக்களுக்கு எதிராகப் போகலாம்....

 

பாண்ட்யா: அவர்கள் ஆணையத்தை ஆண்டுகள் கணக்கில் நடத்துகிறார்கள்... அவருக்குப் பணம் வேண்டும், வேறு ஒன்றும் இல்லை... அவர் காங்கிரஸ்காரர்.....

 

தெஹல்கா: ஷா?

 

பாண்ட்யா: இல்லை. ஷா, அவர் எங்களுடைய ஆள்...... நானாவதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இன்னும் ஷா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்...

 

• ••

 

பாண்ட்யா: கலவரம் தொடர்பான வழக்குகளின் அரசு சிறப்பு சட்ட ஆலோசகராக நான் இருக்கிறேன்... நான் இரண்டு விஷயங்களை மட்டுமே குறித்து வைத்துக் கொண்டேன்.... விஹெச்பியில் எவரும் ஆணையத்திடம் ஒருபோதும் வரகூடாது என நான் சொன்னேன்.... நீங்கள் என்னுடன் தொடர்பில் இருந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான்.... நான பாஜகவிடமும், "நீங்கள் என்னுடன் தொடர்பில் இருந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான்" என்றே கூறினேன்.... எங்கெல்லாம் நான் முகாம் நடத்துகிறேனோ அங்கு வரும்போது பெரும் பலத்துடன் வரவேண்டாம் இன்னும் மிக அறிந்த முகமுடையவர்களும் வர வேண்டாம் என சங்பரிவாரிடம் கூறினேன். நீங்கள் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.... எனக்கு ஏதேனும் தேவைபட்டால், உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும் அதற்கு மேல் எதுவும் இல்லை......... முகாம்கள் நடத்தப்பட்ட எல்லா இடங்களுக்கும் நான் சென்றேன். நானும் சொந்தமாக முகாம்கள் நடத்தினேன். உள்ளுர்வாசிகளின் ஆதரவை வென்றெடுப்பதற்காகவே நான் முகாம்களுக்குச் சென்றேன்... இது எப்படி நடக்க வேண்டும், என்ன நடக்க வேண்டும்.....

 

தெஹல்கா: வேறுவகையான பிரச்சனைகளை அது உருவாக்கியதா.....

 

பாண்ட்யா: வேலைபார்க்கும் பாணியே வித்தியாசமானது..... ஆணையம் என்னும் மனோநிலையை முழுமையாக உருவாக்கியவனே நான் தான்... அதனால் தான் முஸ்லிம்கள் தங்கள் களப்பணியாளர்களிடம் இந்த விவரத்தைக் கொடுத்தார்கள்.... பல்வேறு பேச்சுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் சில நுண்ணறிவு குழுவாலும் (Intelligence Bureau) பதிவு செய்யபட்டுள்ளது. அதாவது ஹிந்துவோ அல்லது ஹிந்து தலைவரோ சம்பந்தபட்டிருந்தால் அது ஆபத்தானது, ஆனால் அரவிந்த் பாண்ட்யா சம்பந்தபட்டிருந்தால் 2000 மடங்கு ஆபத்தானது.

 

தெஹல்கா: உங்களுக்கு எதிராக ஏதேனும் விசாரணை உள்ளதா?

 

பாண்ட்யா: ஒன்று தெஹல்கா சம்பந்தபட்டது.... நான் காவல்துறை அதிகாரி RB ஸ்ரீகுமாரை மிரட்டினேன்.... அந்தத் தகவல் வெளியே கசிந்து தொலைகாட்சிகளில் நாள் முழுவதும் ஓடி கொண்டிருந்தது.... ஆனால் முந்தைய தெஹல்கா.....பகுதி 5 நிறைவுற்றது.

 

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/