மோடியை பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள்.

நரேந்திர மோடி எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானச் செயல் திட்டங்களுக்குத் தனது ஆதரவையும், ஒப்புதலையும் அளித்தான் என்பது பற்றி பாஜக, RSS, விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் ஆகிய சங்பரிவார அமைப்புகளைச் சார்ந்த முக்கிய நபர்கள் வெளிப்படையாகவே பேசினார்கள்.

மேலோட்டம்

கோத்ரா சம்பவத்திற்குப் பின், நரேந்திர மோடியின் கோபம் தெளிவாக அறியக் கூடியதாக இருந்தது. அவன் (மோடி) பழிதீர்க்கச் சபதம் செய்தான். பஜ்ரங்தள் உடைய தேசிய ஒருங்கிணைப்பாளரான ஹர்சத் பட் என்பவனும் ஒருவனாக கலந்துக் கொண்ட ஒரு சந்திப்பின் போது நரேந்திர மோடி, "அடுத்த மூன்று தினங்களுக்கு அவர்கள் என்னென்ன செய்ய விரும்புகிறார்களோ அவை அனைத்தும் செய்து கொள்ளட்டும்" என்று (மோடி)சொல்லியுள்ளான். அதன் பிறகு அவன் எங்களை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். அனைத்தும் நிறுத்தப்பட்டது என பட் தெரிவித்தான்.

அஹ்மதாபாத் நகர விஹெச்பி தலைவனான ராஜேந்திர வியாஸ்க்கு மோடி ஆறுதல் கூறும் போது,"ராஜேந்திர பாய் அமைதியாக இருங்கள். எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஆறுதலளித்தானாம்.

மோடியின் அரசு, வன்முறை கும்பல்களுக்கு அவர்களின் வெறி கொண்டத் தாக்குதல்கள் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் நடத்திட அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், குற்றம் செய்தவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பதற்கும் முயன்றது. நரோடா பாட்டியா வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கி என்பவன் மவுண்ட் அபுவிலுள்ள குஜராத் பவனில் தங்குவதற்கு நரேந்திர மோடியே எல்லா ஏற்பாடுகளையும் செய்ததோடு, அவனுக்கு பெயில் கிடைக்க உதவிடும் வகையில் இரண்டு நீதிபதிகளையும் மாற்றம் செய்துள்ளான்.

குஜராத் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால், காவல்துறையினர் ஹிந்துக்களுக்கு சார்பாக நடந்து கொள்ள வேண்டும் என மோடி உத்தரவிட்டதால், அது கலவரக்காரர்களுக்கு எவ்வித கட்டுபாடும் இல்லாமல் சுதந்திரமாக மூன்று நாள்கள் செயல்பட உதவியது. எதுவரையில் என்றால் இராணுவம் வரவழைக்கப்பட வேண்டும் என்னும் அதிகப்படியான நெருக்குதல்கள் மேலிட்டத்தில் இருந்து வரும் வரையிலுமாகும்.

 

நரோடா பாட்டியாவில் நிகழ்நத மனித இனப்படுகொலைகளுக்குப் பின்னர், முதலமைச்சரே சம்பவ இடத்திற்குச் சென்று, நரோடா பாட்டியா படுகொலைகளில் முக்கியமாக பங்கெடுத்தச் சாரா இன மக்களின் செயல்பாடுகளை "நியாயமானதே" என அங்கீகரித்தான்.

மோடியின் உறுதியான தலைமையினாலேயே, கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடந்த மனிதவர்க்கப் படுகொலைகள் நிகழ சாத்தியமானது என அரசாங்க சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா என்பவன் ஏற்றுக் கொண்டான்.

 

உங்களுடைய கை, மாபெரும் சட்ட ஒழுங்கில்லாத சமுதாயம்

அரசு நிர்வாகம் திரும்பிக் கொள்ள வேண்டும் என்ற தெளிவானக் கட்டளைகளை நரேந்திர மோடி மட்டும் பிறப்பிக்காமல் இருந்திருந்தால் குஜராத்தில் நடைபெற்ற இன அழிப்பு படுகொலைகளுக்குச் சாத்தியமே கிடையாது என்பதனை குற்றம்சாட்டபட்டவர்கள் ஒருவர் பின் ஒருவர் உறுதி செய்தனர்.

விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் தலைவர்கள் படுகொலைகளை நிகழ்த்த எவ்வாறு சதி திட்டங்களை உருவாக்கினார்கள்?, சபர்மதி விரைவு இரயில் தீவைப்பு சம்பவம் நடந்த தகவல் கிடைத்த உடன், மிக அதிக அளவில் படுகொலைகள் செய்யப்படுவதற்கான முன்னேற்பாடுகள் உடனடியாக எவ்வாறு துவங்கப்பட்டது? பல்வேறு காவி அமைப்புகளிலுள்ள உறுதி மிக்க தொண்டர்களை உள்ளடக்கிய கொலைகள் செய்யும் குழுக்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டது? கலவரங்கள் நடக்கும் போது காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்ததோடு மடடுமல்லாமல், சில சம்பவங்களில் வன்முறை கும்பலுடன் தோளோடு தோள் நின்று பங்கெடுத்தது எப்படி? குற்றவாளிகளுக்கு அவர்களுடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அதற்கு பதிலாக உயிர் தப்பியவர்களை மிரட்டவும், விலைக்கு வாங்கவும் திட்டமிட்டார்களே அது எப்படி?, போன்ற விபரங்கள் முந்தைய பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது.

படுகொலைகளும் இன்னும் அது பற்றிய செய்திகளை இருட்டிப்பு செய்வது ஆகியன பாஜக அரசாலும் இன்னும் அதன் சகாக்களாகிய விஹெச்பி மற்றும் பஹ்ரங்தள் அமைப்புகளில் உள்ள பல்வேறு நிலைகளில் உள்ளவர்களால் செய்யப்பட்டது. எனவே குஜராத் படுகொலைகள் ஒரு சூத்திரகாரனுடையக் கட்டளைகளை கொண்டு இயக்கப்பட்ட கொடூர காட்சிகளா அல்லது எவ்வித ஒருங்கியைப்பாளரும் இல்லாமல் தானாகவே நடந்துவிட்ட உணர்வு வெளிப்பாடா? திரைக்குப் பின்னாலிருந்து கண்ணால் காணமுடியாத படி நூல்களை கொண்டு பொம்மலாட்டங்கள் நடத்துவது போன்று, திரைமறைவில் இருந்து கொண்டு யாரேனும் வன்முறை வெறியாளர்களை இயக்கிக் கொண்டிருந்தார்களா?

 

இம்மனித வர்க்கப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த போது அம் மாநிலத்தை நிர்வகித்து வந்தவனுடைய அரசின் பல்வேறு துறைகளும் வன்முறை கும்பல்களுக்கு உதவிகள் செய்த போது, அவனுடைய நிஜமான பங்களிப்பு எத்தகைய அளவில் இருந்தது? குஜராத் இனப்படுகொலைகளில் காவல்துறையும் குற்றங்களில் பங்கு வகித்ததற்கு மோடி தான் பொறுப்பா?

 

இரத்த தாகவெறி பிடித்த விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் தலைவன்களான பாபு பஜ்ரங்கி, ஹரேஷ் பட் மற்றும் அனில் பட்டேல் போன்றவர்களை, இவ்வெறியாட்டத்திற்கு செல்ல மோடியா கட்டளையிட்டான்?

 

கொலையாளிகளிடமிருந்தே உண்மைகளைக் கண்டுபிடிக்க தெஹல்கா முயற்சி மேற்கொண்டது. அப்போது இது தான் இக்கயவர்கள் மோடியை பற்றியும் அவனது பங்களிப்பை பற்றியும் சொல்லியது....

 

கோத்ரா MLA வான ஹரேஷ் பட் மோடியை பற்றிக் கூறும் போது, "எந்த ஒரு முதலமைச்சரும் எக்காலத்திலும் செய்ய முடியாததை மோடி செய்தார்".