வெட்டி எடுக்கப்பட்ட யோனி - பெண்ணீயம் சார்ந்த பாலீயல் கொடுமைகளை பார்க்க விரும்பாதவர்கள் படிக்கத் தேவையில்லை!

 

 



ஆண் குழந்தைகளுக்கு சுன்னி வெட்டும் சடங்கு செய்வதும், பெண் குழந்தைகளுக்கு யோனியை வெட்டுவதும் அதை சுற்றி காட்டினால் ஏன் ஆண் குழந்தைகளுக்கும் தானே செய்கிறார்கள் என்பவர்களிடம் மனிதம் இருக்கிறதா? அல்லது அறியாமை பேசுகிறதா என்று தெரியவில்லை.

மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலக்கட்டத்தில் எவ்வித அடக்குமுறையும் இல்லாமல் மனிதனாக வாழ்ந்திருக்கிறான். ஆனால் தனக்கென்று குடியிறுப்புக்களையும் கலப்படமற்ற வாரிசுக்களையும் உருவாக்க ஆரம்பித்த கட்டத்தில் பெண்ணீயம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. அதற்கு மதம் கலாச்சாரம் புனிதம் கற்பு போன்றவை உருவாக்கியது.

 

மேலும் பெண்ணின் கலவி உச்சமும் பாலீயல் ஆற்றலும் ஆணைவிட பெண்ணுக்கு அதிகம் இருந்தது. ஆணுக்கு கலவியில் ஒரு பெண்ணை திருப்தி செய்ய முடியாத உணர்வு அவனுள் ஒருபயத்தையும், தாழ்வுமனப்பாண்மையும் உருவாக்கியது. அதனால் பாலீயல் ரீதியாகத்தான் பெண்ணை ஆணியம் ஒடுக்க ஆரம்பித்தது. இதில் மிகவும் முக்கியமானது பெண்உறுப்பில் அதிக உணர்வுகளை உருவாக்கும் பகுதியை வெட்டி எறிந்தது.

 

அரசன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களும் தங்களுக்கு கலப்பிடமில்லாத சந்ததிகளை உற்பத்தி செய்ய பெண்ணின் உறுப்பை தைத்து வைத்தது. இந்த முறைகள் அய்ரோப்பியா மற்றும் இந்திய அரச குடும்பங்களிலும் இருந்து வந்துள்ளது. நாட்பட பல மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தது. ஆனால் இஸ்லாம் மதம் இன்னமும் விடாப்பிடியாக வைத்திருக்கிறது.

 

இஸ்லாமியர்கள் சுன்னத் என்னும் ஆண்குறியின் முன் தோல் நீக்கும் சடங்கு உண்டு. அது ஆண்குறியில் நோய்கள் தாக்காதவண்ணம் காத்துக் கொள்ள உடல் ஆரோக்கியத்திற்காக செய்யப்படுவது. ஆனால் இஸ்லாம் இதே முறை பெண்ணிடம் திணிக்கும் முறை இயற்கைக்கு விரோதமானது.

 

1:8 இல் இவை சுண்ணா 1 ஆம் அத்தியாயம் 8 ஆம் வசனத்தில் அத்தியாத் அல் - அன்சாரியா சொல்கிறது…

 

இஸ்லாம் ஷாரியாச் சட்டப்படி யோனி வெட்டும் முறையை 3 விதமாக பிரிக்கிறது.

 

1.யோனியின் மேட்டுப் பகுதியில் பருப்பு போன்று இருப்பதை நீக்குதல். (இது தான் பெண்ணிற்க்கு காம உணர்வுக்கு தூண்டுதலாக இருப்பது)

2.யோனியின் இருபுறமும் இதழ் போன்று இருப்பவைகளை நீக்குவது. (இந்த இதழ் போன்று இருப்பவைகளில் உணர்ச்சிகளை அதிகப்படுத்தக்கூடியது
இருக்கிறது)

 

३ ஒட்டுமொத்த யோனியின் வெளிப்புறத்தை எடுத்துவிட்டு துவாரத்தை தைத்துவிட்டு தீக்குச்சி அளவு மட்டும் உள்ளே போகும் அளவுக்கு பொத்தல் வைப்பது. (காரணம் பெண்களுக்கு மாதவிலக்கு வரும் காலங்களில் ரத்தப்போக்குகள் வெளியேறுவதற்கு)

 

இவை பெண்குழந்தைகளுக்கு 4 வயதில் இருந்து 12வயதிற்குள் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும் முடிந்தவரையில் சிறிய வயதிலேயே செய்யப்பட்டுவிடுகிறது. இப்படி செய்யப்படுவதால் பெண்களின் காமஉணர்ச்சி அடக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவளது உடல் உறுப்புகளுக்குள் குறுக்கி விட்டு உடலுறுப்புக்களை ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகலாகக் கூட பார்க்காமல் உடலைச் சிதைத்து பகுதி பகுதியாக பார்க்கிறது ஆணாதிக்கப் பார்வை.

 

பாக்கிஸ்தான், மலேசியா, ஆப்பிரிக்கா, அரபுநாடுகளில் 3வது வகையை கடைப்பிடிக்கின்றனர். 15 கோடி பெண்கள் மட்டும் ஆப்பிரிக்காவில் இப்படி இருப்பதாக சமுக அமைப்பு கணக்கெடுப்பில் தெரிவிக்கிறது.

 

யோனி தைக்கப்பட்ட பெண்கள் திருமணம் முடிந்த அன்று முதல் இரவில் கணவனால் யோனியில் தைக்கப்பட்ட நூல்களை அறுக்கப்பட்டு பெண் கற்பாக இன்னும் இருக்கிறாள் என்பதை நிறுபிக்கப்படுகிறாள்.

 

இன்று பெண்பாலீயல் ஒடுக்கு முறைகள் பலநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது। பல சமூக அமைப்புகளும் இதற்காக போராடி வருகின்றன. அய்ரோப்பா அமெரிக்காவில் 1930 இல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

 

நன்றி தமிழச்சி