கவினுறு மலைகள் ஏறிக் களைத்து
எங்கள் கடலொடு நதி பல நீந்தித் திளைத்து
காடுகள் சோலைகள் பூத்து
எங்கள் கைகள் வரைக்கும் காய்த்து
ஆடுகள், மாடுகள் பன்றிகள் மேய்த்து
சமவெளி உழைப்பினில் உயிர்மெய் வியர்த்து
உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில்
ஒன்று கலந்து வளர்ந்த தமிழே! தலைமுறைக் குரலே!
பிழைப்புமொழி பேசாத உழைப்புத் தினவே!
உயிர் உறை கனவே! பரம்பரை உழைப்பே!
பாட்டாளி வர்க்க விடுதலை அழகாய் விளங்கிடு தமிழே!