இழை யெலாம் அவள் பூங்
குழலோ! கைத்தறியின்-- இழை

பிழைசெய்தாள் என்றுதாய் துரத்தினாள்--என்
விழியெலாம் அவளையே பொருத்தினாள்

தொழில் முடிந்ததும் உணவுண்டு--நான்
தூங்கு முன்னே எனைக் கண்டு--மங்கை,
"எழுதினீர்களா மேற்கொண்டு-- பதில்
என்தாய்க்" கென்று கேட்டதுண்டு--தேன்
பிழியும் அவளிதழ் தின்றதா பிழை?--அவள்
பின்னும் என்னிடம் நின்றதா பிழை?-- இழை


தார்கொண்ட நாடாவைக் கையினால்--நான்
தறியில் கோப்பதும் தேவை--அன்றோ?
பார்கொண்ட மானத்தை--நான்
பாதுகாப்பதும் தேவை--மிகச்
சீர்கொண்ட என்குளிர்ப் பூங்காவை--நான்
சேரவும் கேட்க வேண்டும் அம்மாவை!-- இழை

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt104