அம்மா இங்கே வா! வா!

ஆசை முத்தம் தா! தா!

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு

உன்னைப் போன்ற நல்லார்

ஊரில் யாரும் இல்லார்

என்னால் உனக்குத் தொல்லை

ஏதும் இங்கே இல்லை

ஐயம் இன்றி சொல்வேன்

ஒற்றுமை என்றும் பலமாம்

ஓதும் செயலே நலமாம்

ஒளவை சொன்ன மொழியாம்

அஃதே நமக்கு வழியாம்.

http://siruvarpaadal.blogspot.com/2006/04/8.html