உலகம்"சமாதானத்தால் உலகங்களுக்குச் சேவை செய்யட்டும்"(dem FRIEDEN der Welt zu dienen))என்று பலவிதமான சட்டங்களுடாய் இயற்றிச் சொன்ன பின்பும், அப்பாவி மக்கள் தினமும் பலியாகும் "தாக்குதல் யுத்தம்"நிகழ்ந்தபடியேதாம் முதலாளிகள்-அரசியல்வாதிகள் பொருள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!கடந்தகாலங்களில் நிகழ்ந்த அனைத்து யுத்தங்களும் இந்த வகைப் பொருள் குவிப்பதின் நோக்கத்தோடு நடாத்தப்பட்டபின் அது மறக்கடிக்கப்பட்டு,இப்போது அதே நோக்கோடு நடைபெறும் சகல யுத்தங்களும் "பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் பொய்யுரையோடு நடாத்தப்படும் இருண்ட அரசியல் மெய்ப்பாட்டில் மனிதவுயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன.


"உள்நோக்கம் நிறைந்த அதற்குத் தோதான பேச்சுவார்த்தைகள் சமாதானத்தோடு இணைந்து வாழும் மக்களின் அமைதியை அழிக்கும்போதும்,பிரத்தியேகமாக தலைமைத்துவம்"தாக்குதல் யுத்தம்"செய்வதற்கான முன் தயாரிப்பைச் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானது.இவைகள் தண்டனைக்குட்பட்டதாகும். "(Handlungen,die geeignet sind und in der Absicht vorgenommen werden,das Friedliche Zusammenleben der Voelker zu stoeren,insbesondere die Fuehrung eine Angriffskrieges vorzubereiten,sind verfassungswidrig.Sie sind unter Strafe zu stellen.-Artikel 26 vom grundgesetz der B.R.D.)ஆனால் இத்தகைய முதலாளித்துவ நாடுகள் மக்களை மடையர்களாக்கும் சட்டங்களை இன்னும் மக்களுக்கான நலனோடு சம்பத்தப்பட்டதாகக் காட்டிக்கொள்ளும்போதே தமது வர்க்க நலனைக் காக்கப் போருக்கு மக்களை அணிதிரட்டும் சட்டத்தையும் அதற்கு நேரெதிராகக் கொண்டிருக்கும்போது ,இது மிகக் கேவலமான பித்தலாட்டமாகிறது.

"Arikel 87a feststellt,dass der Bund Streitkraefte ausschliesslich zur VERTEIDIGUNG aufstellt.Und dass dies auch eine Wehrpflichtarmee sein kann,dafuer gibt der Artikel 12 a gruenes Licht:"Maenner koennen vom vollendeten achtzehnten Lebensjahr an zum Dienst in den Steitkraeften...verpflichtet werden."என்னவொரு இழிமையான சட்டம்!இத்தகைய சட்டங்கள் சொல்வதென்ன?"ஜேர்மனிய அரச அடிப்படைச் சட்டம் 87அ பிரிவு கூறுகிறது:யுத்தப்படைகளானவை தேசப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.இது சட்டப் பிரிவு 12அ வினது கூற்றுக்கு பச்சைக் கொடியைக் காட்டி,பதினெட்டு வயதடைந்த இளைஞர்களை கட்டாய இராணுவத்துக்கு ஆட் திரட்டுவதைக் கடமையாக்கிறது.

இங்ஙனம் மேலும் கீழும் முரண்பாட்டோடு சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் நாடுகள் தமது நலன்களை மக்களின் நலன்களாக்கிப் படம் காட்டும் இன்றைய தரணத்தில் ஒடுக்கப்படும் இனம் தனது தலைவிதியைத் தாமே நிர்ணியிப்பதைப் பயங்கரவாதமென்கின்றன.

தாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற வன்மம் நிறைந்த பரப்புரைகளால் தமது மனிதவிரோத முகங்களை மறைக்க முனையும் இத்தகைய முதலாளித்துவ நாடுகள்தாம் எமது மக்களைத் தமது கால்களில் கட்டிப் போடுவதற்காகச் சமாதான நாடகம் ஆடுவதும்,முடியாதுபோனால் தமது படைகளை அனுப்பி எம்மைக் கொன்று குவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் இனத்துவ முரண்பாடுகள் தேசியவிடுதலையைக் கோரிக் கொண்டபோது, அதை அங்கீகரிக்க முடியாத அந்நிய தேச நலன்கள் நம்மை வெறும் இனக் குழுக்களாகி,நாகரீகம் அற்றவர்களாக்கிக் குறுக்கி அரசியல் செய்யும் கரவு நிறைந்த அரசியலில்"ஜனநாயகம்"எமக்குக் கற்பிக்கின்றன.

இதையும் புலியெதிர்ப்புக் கும்பல் ரீ.பீ.சீ. வானொலியில் கவிதைகட்டி வம்பளக்கின்றனர். இந்தக் குரங்குகள் உதாரணங்காட்டும் நாடுகள்தாம் மேலே நான் காட்டும் சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.இவர்கள் கூறித்திரியும் "ஜனநாயகம்"அதன் உள்ளடக்கமென்பது இந்தக் கோலமாக இருக்கும்போது, "சங்கரி ஐயா"ஊடாக இலங்கையில் "ஜனநாயகம்" மலரப் போவதாகக் கவிதைபாடும் காகங்களை என்னவென்பது!


"ஜனநாயகம் உயிர்த்தெழும்" ஆம் ரீ.பீ.சீ.க்காரரின் பணப்பெட்டிக்குள் அது தவம் கிடக்கும்போது கட்டாயம் உயிர்த்தெழும்.மக்களை இன்னும் மடையர்களாக்க முனையும் புலிகளைப் போலவே புலியெதிர்ப்பு "மாபியாக்களும்" மக்களை இன்னும் மடையர்களாக்கி வரும்போது, அதற்குத் தலைமை கொடுக்கும் ஜெயதேவன்களோ அல்லது மனிதவுரிமை பேசும் பசீர்களோ மேலே காட்டிய நாடுகளின் பம்மாத்துக்கு ஒத்தூதுவதைத் தவிர வேறொரு மண்ணையும்-எமது இனப் பிரச்சனையில் காத்திரமான பங்கை வகிப்பதற்கில்லை.

 

இவர்கள் அந்நியர்களின் நலன்களை இலங்கைக்குள் திணிப்பதற்குதவும் அற்ப மனிதர்கள்தாம் என்பதை நாம் மிகவும் ஆதாரத்தோடு நிறுவ முடியும். எமது மக்கள் இனங்களாகவும்,மதக் குறுங் குழுக்களாகவும் சிதறுண்டு முரண்பாடுகளைக் கையாள முடியாத வெறும் மந்தைக் கூட்டமாகச் சண்டையிட, இந்த இவர்கள் கூறும் ஜனநாயக நாடுகளே முதன்மையான காரணகர்த்தாக்களாக இருக்கும்போது இந்தப்"படித்த அறிஞர்கள்"எங்கள் மக்களுக்குப் "புலிப் பாசிசம்,ஜனநாயகம்"பற்றிப் பாடம் நடாத்துகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை 16.09.2006 அன்று அப்பாவி முஸ்லீம்களை பொத்துவிலில் கொல்லும் அரசியல்தாம் என்ன?

இதற்குப் பின் நோக்கம் பெறும் அரசியல் நோக்கு நிலை என்ன?

மக்களைக் கூறுபோட்டுக் கொன்று குவிக்கும் கபடம் நிறைந்த உலக நலன்கள் நம்மையின்னும் பயங்கரவாதிகளாக்கி நமது சுயநிர்ணய உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க முனையும் ஒவ்வொரு நகர்வும் புலிப் பாசிசத்தின் கொடுமையைச் சொல்லி ஒப்பேற்றப்படுகிறது.புலிகளின் நிலையோ அவர்களுக்கே புரியாதவொரு இருண்ட நிலையில் தம்மைச் சொல்லியே எதிரி அரசியலில் வெற்றியடையுந் தரணங்களில் தாமும் பழிக்குப் பழி அரசியலைச் செய்து பழகிய வரலாற்றிலிருந்து விலகி முற்போக்கான அரசியலை முன்னெடுப்பது அவர்களுக்கே ஆபத்தென்பதால்,இத்தகைய ரீ.பீ.சீக் கும்பல் நனைந்த இடத்தில் குழி தோண்டுகிறது.


உலக அரசுகளின் அடிபடைச் சட்டங்கள் வன்முறைப்படைகளால் "ஜனநாயகம்" காக்கப்படுமென்று ஒப்புதல் வழங்கும்போது இது குடிசார் உரிமைகளுக்கு எதிராகத் தனது நிலையை எடுக்கிறது.சிவில் சமூகம் என்ற இந்த அரசியல் வார்த்தையே ஜனநாயகத்தின் பொய்மைத் தன்மையில் கானல் நீரகவே இருக்கிறது.

 

இந்த ஜனநாயகம் என்பது ஆதிக்க சக்திகளின் அற்பத் தனமான கனிவளச் சுரண்டலுக்கும்,தமது நிதி மூலதனத்தைக் காப்பதற்கும் தொடர்ந்து தமது ஜந்திரங்கள் இயங்குவதற்கான முறைமைகளில் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப்போடுவதற்குமாக அர்த்தம் பெறுகிறது.

 

இதனால்தாம் நாம் "ஜனநாயகம்"என்று இவர்கள் பிதற்றும் இந்தச் சாமான் போலியானது, மக்கள் தமது இறைமைகளைக் காப்பதற்காக புதிய ஜனநாயகத்தை நிறுவும் புரட்சியை முன்னெடுக்காத வரை இது சாத்தியமில்லை என்கிறோம்.இத்தகைய தரணங்களை மறுத்தொதுக்குவதற்கு இந்தவுலகத்துக்கு எந்த நியாயப்பாடுமில்லை.

இலங்கையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் "புலிகளின் பாசிசத்தை" மையப் புள்ளியாக்கும் இந்தப் புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கு உலகமே புலிகளுக்குள் அடங்குவதாகப் பிரமை தட்டுகிறாதா அல்லது திட்டமிட்டு மக்களை இத்தகைய மக்கள் விரோத அரசியலால் காவுகொள்வது நோக்கமா?

உண்மையில் இத்தகைய நரித்தனமான மனிதர்கள் திட்டமிட்டுத் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளோடு விளையாடுகிறார்கள்.இவர்கள் அந்நியச் சக்திகளின் நலனுக்காக வளர்தெடுக்கப்பட்டு வேட்டைக்கு அனுப்பப்பட்ட வேட்டை நாய்கள்.இவர்களிடம் பொதிந்திருக்கும் மக்கள் நலன்கள் என்ற கபடம் நிறைந்த விய+கங்கள் முற்றிலும் ஆதிக்க சக்திகளின் ஆர்வங்களின் மிகப் பெரும் தந்திரோபாயத்துடன் சம்பந்தப்பட்டது.

இதை மக்கள் புரியதிருக்கவே "புலிப் பாசிசத்தின்" அனைத்துப் பரிமாணங்களும் நம் முன் கொட்டப்பட்டு,ஊதிப் பெருக்கப்படுகிறது.புலிகளினது நலத்தோடு பின்னிப் பிணைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் தேசிய இன முரண்பாடானது புலிகளைச் சிதைப்பதால் தோற்கடிக்கப்பட்டுவிடுமென்பது இல்லை.இது அந்நிய சக்திகளுக்குத் தெரியும்.

 

இத்தகையவொரு புற நிலை யதார்த்தமே இவர்களுக்கு அவசியமாக இருப்பதால், இந்த முரண்பாடுகள் இன்னொன்றின் மூலவ+ற்றுக்குக் காரணமாக இருப்பதற்கான இன்னொரு தளத்தை உருவாக்குவதில் இலக்கைக் கொண்டிருக்கிறது.

கூடவே இப்போது "ஆயுதங்கள் மக்களைக் கொல்வதில்லை.மனிதர்களே மக்களைக் கொல்கிறார்கள்.ஆயுதங்கள் மக்களைக் காப்பதற்கானது".எனும் மக்கள் விரோத ஏகாதிபத்தியக் கருத்தானது, இத்தகைய நோக்கு நிலையின் இன்னொரு வடிவமாகும்.இது தமது இருண்ட பக்கங்களான குவிப்புறுதிப் பொருளாதார முன்னெடுப்பின் வாயிலான அனைத்து வகைக் காரணிகளையும்,அது யுத்தமானதாக இருந்தாலென்ன அல்லது உயிர்கொல்லி ஆயுதத் தயாரிப்பானதாக இருந்தாலென்ன அனைத்தும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட மக்கள் நலனின் வெளிப்பாடாக்க முனைகின்றன.இதையும் வாந்தியெடுக்கும் தேனியின் அர்சுனனுக்கு தமிழ் மக்கள் இன்னும் விட்டேந்திகள்தாம்.



ப.வி.ஸ்ரீரங்கன்
24.09.2006