தேவையானவை:

 

கேரட் 3
கடலைமாவு 1 கப்
பச்சைமிளகாய் 4
ரொட்டித்தூள் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது.



Gravy செய்வதற்கு தேவையானது:

தக்காளி 6
வெங்காயம் 4
இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தனியாதூள்,
மசலா பொடி ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்
நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது.

செய்முறை:

கேரட் தோலை சீவி துருவி நீரை பிழியவும்..
பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
கடலைமாவை சலித்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து,
அதனுடன் கேரட்,பச்சைமிளகாய் கலந்து சிறிது தண்ணீர்
தெளித்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
உருண்டைகளை ரொட்டித்தூளில் பிரட்டி எண்ணயில்
பொறித்து எடுக்கவும்.இதனை தனியே ஒரு பேப்பரில் பரவலாக போடவும்
அடுத்து

Gravy செய்யும் முறை:
கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தக்காளிகளை
போட்டு இரண்டு நிமிடம் வைக்கவும்.
தோல் தனியே கழன்று விடும்.
சதைப்பகுதியை மிக்சியில் அரைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன்
தக்காளி விழுது,
இஞ்சிபூண்டு விழுது,
மிளகாய் தூள்,தனியாதூள்,மசாலா பொடி
தண்ணீர்,உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் தயாராக வைத்துள்ள உருண்டைகளை
gravy ல் மெதுவாக போடவேண்டும்.
.

http://annaimira.blogspot.com/2008/08/blog-post_02.html