கல்வி என்பதுகண்களைத் திறப்பது!கல்லாதிருப்பதுகண்களைத் துறப்பது!செல்வம் அனைத்திலும் சிறப்பிடம் வகிப்பது!இல்லார்க் கெடுத்ததைஇறைப்பினும் மிகுப்பது!எல்லா இடத்திலும்ஏற்றம் அளிப்பது!பொல்லா மடமையைப்பூண்டோ டொழிப்பது!அல்லும் பகலும்அணையா விளக்கது!கல்லில் பதியும்கலையா எழுத்தது!சொல்லில் கனிவுசுவையைக் குழைப்பது!வெல்லும் துணிவுவிவேகம் ...

இளங்குயிலே! இளங்குயிலே!இளம்காலை வாராயோ!-உன்இன்பமணிக் குரலெடுத்துஏழிசையைப் பாடாயோ!கவிக்குயிலே! கவிக்குயிலே!கவிச்சோலை வாராயோ!-உன்கனி அமுதக் குரலெடுத்துகாதலினைப் பாடாயோ!கருங்குயிலே! கருங்குயிலே!கருக்கலிலே வாராயோ!-என்காதினிலே தேன்பாய்ச்சகாவியங்கள் பாடாயோ!மாங்குயிலே! மாங்குயிலே!மாலையிலே வாராயோ!-உன்மகரயாழ்க் குரலெடுத்துமனம்குளிரப் பாடாயோ!பூங்குயிலே! பூங்குயிலே!பூஞ்சோலை வாராயோ!-உன்பொங்குமெழில் ...

உப்போ உப்பு தங்கச்சிஒசத்தி உப்பு தங்கச்சிபொட்டு கூடையை கொண்டாயேன்போணி பண்ணிட்டு நான் போறேன்எட்டு தெரு சுத்தனும்ஏழு மூட்டை விக்கனும்செல்லா காசு தங்கச்சிசீசீ தப்பு தங்கச்சி   பத்மா அர்விந்த்   http://siruvarpaadal.blogspot.com/2006/02/blog-post.html ...

மனதில்...காற்றாய்,நீயும்-கலந்திட வேண்டும்!நாற்றாய்,நீயும்-நின்றிட வேண்டும்!மலராய்,நீயும்-மணம் வீசிட வேண்டும்!தேனாய்,நீயும்-இனித்திட வேண்டும்தென்றலாய்,நீயும்-இருந்திட வேண்டும்மலராய்,நீயும்-பூத்திட வேண்டும்மணமாய்,நீயும்-பரவிட வேண்டும்மனிதனாக,நீயும்-உயர்ந்திட வேண்டும்!மண்னெங்கும்உன் பெருமையேபேசப்பட வேண்டும்!மனதில் கொள் தம்பி!-இரா.நவமணி http://siruvarpaadal.blogspot.com/2006/01/4.html ...

உணவில் உப்பு இருந்தால் தான்உண்ண முடியும் நம்மாலே!கணமும் உப்பு இல்லாமல்காலம் தள்ள முடியாதே!உப்பின் தந்தை கடலாகும்உப்பளம் உப்பின் இடமாகும்!உப்பில் அயோடின் இருந்தால் தான்உடலும் நலமாய் இருந்திடுமே!உப்பை அதிகம் ...

பூனைக்குட்டிமியாவ் மியாவ் பூனைக்குட்டிமீசை வச்ச பூனைக்குட்டிபையப் பையப் பதுங்கி வந்துபாலைக் குடிக்கும் பூனைக்குட்டிபளபளக்கும் பளிங்குக் குண்டுபளிச் சென்று முகத்தில் இரண்டுவெளிச்சம் போடும் விழி கண்டுவிரைந்தோடும் எலியும் மிரண்டுவிரித்த ...

கொட்டுது பார் மழை!கொண்டு வா ஒரு குடை!வெட்டுது பார் மின்னல்!பார்க்காதே அது இன்னல்!முழங்குது பார் இடி!வெளியே போவது எப்படி?பொழியுது பார் முகில்!விளைந்திடும் பார் வயல்!கூவுது பார் குயில்!ஆடுது ...

அம்மா இங்கே வா! வா!ஆசை முத்தம் தா! தா!இலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓட்டுஉன்னைப் போன்ற நல்லார்ஊரில் யாரும் இல்லார்என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே இல்லைஐயம் இன்றி ...

ஆல மரமாம் ஆலமரம்அருமையான ஆலமரம்காலம் காலமாய் நிழல்தந்துகாத்து வந்திடும் ஆலமரம்!கூடு கட்ட பறவைகள்கூடி அங்கே சென்றிடுமாம்நாடி நாமும் செல்லலாம்நல்ல காற்று பெற்றிடலாம்!சிறிய விதையிலிருந்துசிறப்பாய் பெரிதாய் வளர்ந்துமேபெரிய படையும் ...

பத்துக் காசு விலையிலேபலூன் ஒன்று வாங்கினேன்பலூன் ஒன்று வாங்கினேன்பையப் பைய ஊதினேன்பையப் பைய ஊதவேபந்து போல ஆனதுபந்து போல ஆனதும்பலமாய் நானும் ஊதினேன்பலமாய் நானும் ஊதவேபானை போல ...

அம்மா என்று சொல்ஆளுமை வளர்இலக்கை உயர்த்துஈன்றவள் மனம் குளிர்உலகினை நேசிஊர் நலம் பேண்எளிமை பயில்ஏளனம் அகல்ஐம்புலன் கல்ஒற்றுமை பழகுஓங்கிய எண்ணம் கொள்ஓளவை சொல் கேள்அஃதே வாழ்க்கை..- விபாகை   http://siruvarpaadal.blogspot.com/2006/04/11.html ...

மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம்அல்வா போன்ற மாம்பழம்தங்க நிற மாம்பழம்உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்இங்கே ஓடி வாருங்கள்பங்கு போட்டு தின்னலாம்.   அழ.வள்ளியப்பா.-- விழியன்   http://siruvarpaadal.blogspot.com/2006/04/12.html     ...

அசைந்தா டம்மா அசைந்தாடுஆசைக் கிளியே அசைந்தாடுஇசையோ டொன்றாய் அசைந்தாடுஈரக் குலையே அசைந்தாடுஉதய நிலாவே அசைந்தாடுஊதும் குழலே அசைந்தாடுஎழிலாய் வந்து அசைந்தாடுஏற்றத் தேடு அசைந்தாடுஐயம் விட்டு அசைந்தாடுஒழுக்கம் பேணி ...

பாட்டி வீட்டு பழம்பானைஅந்த பானையில் ஒரு புறம் ஓட்டையடாஓட்டை வழியாய் சுண்டெலியும்உள்ளே புகுந்து கொண்டதடாஉள்ளே புகுந்த சுண்டெலியும்நெல் ஊதி புடைத்து உண்டதடாநெல் உண்டு கொழுத்ததனால்உடல் ஊதி பெருகி ...

ஆல மரத்து ஊஞ்சலாம்அமர்ந்து ஆடிப் பாடலாம்காலை உயர நீட்டியேகீழும் மேலும் ஆடலாம்.விண்ணை நோக்கிப் போகலாம்வடக்குத் தெற்குப் பார்க்கலாம்பண் இசைத்துப் பாடலாம்பகல் முழுதும் ஆடலாம்.பழக்க மில்லாப் பிள்ளைகள்பையப் பைய ...

துண்டுத் தாள்கள் கிடந்தனதூக்கி வீசி எறிந்தனர்!கண்டு சிறுவன் எடுத்தனன்கப்பல் செய்து மகிழ்ந்தனன்!துண்டுத் துணிகள் கிடந்தனதூக்கி வீசி எறிந்தனர்!கண்டு சிறுமி எடுத்தனள்கணக்காய்ப் பொம்மை செய்தனள்!வண்ணத் தாள்கள் கிடந்தனவாரி வீசி ...
Load More